<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652</id><updated>2012-01-15T06:25:12.216+05:30</updated><category term='துயரம்....'/><category term='காத்திருத்தல்'/><category term='நல்லது கெட்டது...'/><category term='நினைவுகள்'/><category term='வேதனை'/><category term='பொது...'/><category term='வலை உலகம்'/><category term='பதிவுலகம்'/><category term='நன்றி'/><category term='செய்திகள்...'/><category term='சங்கமம்‘2011'/><category term='மது'/><category term='கட்டுரை...'/><category term='நகைத்துண்டு...'/><category term='காந்தியம்'/><category term='பதிவர்கள் வட்டம்'/><category term='சமூகம்'/><category term='சிந்தனை...'/><category term='வ.அ.த.ச.பே விழா மலர்'/><category term='அகிம்சை'/><category term='நட்பு'/><category term='கவிதை (அட நம்புங்க)'/><category term='பகிர்வு'/><category term='கொடுமைகள்'/><category term='அசோகமித்ரன்'/><category term='மனிதாபிமானம்'/><category term='சிறுகதை...'/><category term='அனுபவம்...'/><category term='அனுபவம்'/><category term='இயலாமை'/><category term='மரணம்'/><category term='பணம்'/><category term='ஏழ்மை'/><category term='அரசியல்'/><category term='இளைஞர்கள்'/><category term='தில்லையாடி'/><category term='கவிதை...'/><category term='விளையாட்டு'/><category term='சந்திப்பு'/><category term='பதிவர்கள்'/><category term='புனைவு'/><category term='சாதிக்கொடுமைகள்'/><category term='கதம்பம்...'/><category term='கதை கதையாம்....'/><category term='உறவுகள்'/><category term='ஈரோடு சங்கமம்'/><category term='ஈரோடு'/><category term='சுயம்'/><category term='தமிழ்'/><category term='சொந்தக்கதை'/><category term='குடும்பம்'/><category term='விவசாயம்'/><category term='ஒப்பாரி'/><category term='பெண்கள்'/><category term='விருதுகள்'/><category term='புத்தாண்டு வாழ்த்து'/><category term='பயணக்குறிப்பு...'/><category term='கிராமம்'/><category term='சங்கமம்'/><category term='சங்கமம்‘2010'/><category term='சங்கமம்‘2010 அழைப்பு'/><category term='தகவல்...'/><category term='தொடரிடுகை'/><category term='சுயபுராணம்'/><category term='திரைப்படம்'/><title type='text'>க.பாலாசி</title><subtitle type='html'>எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் 
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்,
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்...

                          பாவேந்தர்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>148</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2025644468504193743</id><published>2011-12-12T17:59:00.001+05:30</published><updated>2011-12-12T18:18:28.270+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள் வட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கமம்‘2011'/><title type='text'>சங்கமம்‘2011 அன்போடு அழைக்கிறோம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிகாலையும் பனிப்புகையும் தொண்டையிலிறங்கும் இளஞ்சூடான தேநீரும் போல இந்த மாதத்திற்கெனவே சில சிறப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவேதான் எங்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் நடத்தும் &lt;span style="font-size: large;"&gt;பதிவர்கள், இணையதள வாசகர்கள், முகநூல் மற்றும் ட்விட்டர் நண்பர்களுக்கான மாபெரும் &lt;a href="http://www.erodekathir.com/2011/12/2011.html" target="_blank"&gt;சங்கமம்‘2011.&amp;nbsp;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4gBDEAk34O8/TuNaSZJvlhI/AAAAAAAAByU/iVxn3bXbuhE/s1600/sangamam-11.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="170" src="http://4.bp.blogspot.com/-4gBDEAk34O8/TuNaSZJvlhI/AAAAAAAAByU/iVxn3bXbuhE/s320/sangamam-11.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="background-color: yellow;"&gt;நாள் : 18.12.2011 ஞாயிறு&lt;br /&gt;நேரம் : காலை 10.00 மணிமுதல் மதியம் 2 மணிவரை&lt;br /&gt;இடம் : ரோட்டரி CD அரங்கம்&lt;br /&gt;பெருந்துறை ரோடு,&lt;br /&gt;பழையபாளையம், ஈரோடு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் பெயர்&lt;br /&gt;தொடர்பு எண் (optional)&lt;br /&gt;மின்மடல் முகவரி&lt;br /&gt;வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர் &lt;br /&gt;..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="background-color: yellow;"&gt;மேலதிக விபரங்களுக்கு:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,&lt;br /&gt;க.பாலாசி (செயலர்) 90037-05598, &lt;br /&gt;கார்த்திக் (பொருளர்) 97881-33555, &lt;br /&gt;ஆரூரன் - 98947-17185 , &lt;br /&gt;கதிர் – 98427-86026, &lt;br /&gt;வால்பையன் - 99945-00540, &lt;br /&gt;ஜாபர் - 98658-39393, &lt;br /&gt;ராஜாஜெய்சிங் - 95785-88925, &lt;br /&gt;சங்கவி – 9843060707&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் இணைந்த இதயங்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும். &amp;nbsp;அன்புதோய்ந்த கரங்களுடன் வரவேற்க காத்திருக்கிறோம்... &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-2025644468504193743?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/2025644468504193743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=2025644468504193743' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2025644468504193743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2025644468504193743'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/12/2011.html' title='சங்கமம்‘2011 அன்போடு அழைக்கிறோம்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4gBDEAk34O8/TuNaSZJvlhI/AAAAAAAAByU/iVxn3bXbuhE/s72-c/sangamam-11.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-3608402593740088590</id><published>2011-11-14T17:15:00.001+05:30</published><updated>2011-11-14T18:47:41.521+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>ஒரு கூடும் சில குளவிகளும்..</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேருந்தில் ஏறும்முன் நடத்துநரிடம் ‘இடமிருக்கா?’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா?‘ என்பார் நடத்துநர், பார்வையில். உயரத்தில் இரண்டடி குறைவாகவும், இந்த இரண்டு மி.மீ நீள மீசையுமில்லையென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் அரை கட்டணச் சலுகையில் என்னால் பயணிக்கமுடியுமென்பது தற்காலத்திற்குமான நிகழ்தகவு. இந்த மிகை, குறையல்லவென்பது எனைக் கண்டறிந்தவர்களுக்கும் தெரிந்ததுதான். இதைபோன்ற சிறப்பு நிகழ்வுகள் கூடிவந்து கும்மியடிக்கும்போதுதான் வருடந்தோறும் ஐப்பசியும் 8ம் நாளும் வந்து தொலைக்கிறது. அடுக்குப்பானையிலிருக்கும் அதிரசம்போல கடந்த இரண்டு வருடங்களாக 27 ம் அகவையிலேயே குடியிருந்தது ஒரு இனிமைதான். சென்ற ஐப்பசி எட்டுக்குப்பிறகு அதிலும் பூசணம் பூத்தது. 30 தொடங்கிவிட்டதாம். கலிகாலம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;•••&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் நீங்கள் &lt;b&gt;தாராசுரம்&lt;/b&gt; என்ற ஊரைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 ஆவது மைல்கல் தொலைவிலுள்ளது இந்தப் பேரூர். இங்குள்ள, உலகப் பாரம்பரிய சின்னங்களும் ஒன்றான ஐராவதேஸ்வரர் திருக்கோவில் 12 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலும் மேற்கண்ட கோவிலும் கலையில் நிறைய ஒற்றுமையுடன் திகழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இசைப் படிகள் உள்ளது. அதாவது 7 கருங்கற்படிகளும் 7 ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைப்பற்றி&amp;nbsp; ஒரு முழுமையான பயணக்கட்டுரையை பதிவர் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். &lt;b&gt;&lt;a href="http://maragadham.blogspot.com/2010/12/blog-post.html" target="_blank"&gt;படிக்கவும்&lt;/a&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;•••&lt;br /&gt;&lt;br /&gt;கூத்தாடி கிழக்கே பார்க்கவும் கூலிக்காரன் மேற்கே பார்க்கவும் காரணமிருக்கிறது. கூத்தாடியின் பிழைப்பு ராப்பொழுதில். ஆகவே அவன் விடியலை கிழக்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். கூலிக்காரன் பிழைப்பு பகற்பொழுது. அவன் சூரியன் மறைவை மேற்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். போலவே மாயவரம் மண்ணில் பிறந்த நான் மேற்கண்ட பத்தியில் தாராசுர பெருமை போற்றவும் காரணமிருக்கிறது. என் வருங்காலத்திற்கானவள், அதாவது இந்த மாதொருபாகனுக்கான மாதவள்&amp;nbsp; அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். அது, அதற்கு&amp;nbsp; இன்னொரு பெருமை.&lt;br /&gt;&lt;br /&gt;•••&lt;br /&gt;&lt;br /&gt;பெண்பார்க்கப் அந்த வீட்டினுள் நுழையுமுன்னமும் படபடப்பிருந்தது. ‘ஏங்க இவரு மாப்பிள்ளைக்கு கடைக்குட்டி தம்பியா?’ என்று யாராவது என்னைப்பார்த்து கேட்டுவிடும் அபாயமிருந்தது. நல்லவேளை அதற்கான வாய்ப்பை உறவினரொருவர்&amp;nbsp; தடுத்து ‘இவர்தான் மாப்பிள்ளை’ யென்றார். அப்பாடா‘ என்றிருந்தது. காபி டம்பளரை நீட்டியவள் முன் நாணலாக நாணவும் தெரியாமல், வீராப்புடனுமில்லாமல் சங்கோஜப்பட்டேன். பரஸ்பரங்கள் முடிந்து இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது, இருவருக்கும். அடுத்த அகவை வருவதற்குள் நல்லூணைப் பெருக்கி உடலையும் பெருக்கி ஒரு டி.எம்.டி முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ அல்லேல் குறைந்தபட்சம் பி.வி.சி குழாயையாவது வளைத்துக்காட்டும் தண்டுளப வண்ணனாகவோ மாறிவிடவேண்டுமென்பதை வருங்காலத்தாளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் கொண்டை முடிந்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;•••&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யமொன்றறியோம் பராபரமே என்பதற்கிணங்க கவிதையெழுதுவதை சமீபகாலமாக நிறுத்தியிருக்கிறேன். தெரியவில்லையென்பது இரண்டாம்பட்சம். நல்ல எளிமைக் கவிதைகளை படிப்பதிலிருக்கும் ஆர்வம் எழுதுவதில் கிஞ்சித்துமில்லை. ஒரு மதிமயங்கிய மாலைநேரம், மழைக்காலம் எதையோ பேசி, எதையோவொன்றைச் சொல்லப்போக என்னவள், ‘நானும் கவிதையெழுதுவே’னென்று என் வலப்பக்கச் செவியின்வழி&amp;nbsp; குண்டைத் தூக்கிப்போட்டாள். நள்ளிரவு 12 மணிக்குமேல் கவிதையெழுதத் தோன்றினாலும் உடனே துயில் கலை(த்)ந்து ஒரு கோடுபோட்ட குறிப்பேடு முழுக்க கவிதைகளாய் சமைத்துவிடும் வல்லமை&amp;nbsp; பெற்றவளாம். மாமியார்கூட புளங்காங்கிதமடைந்தார். இந்த கவிதாயினிக்கு ‘சாமி’ வராமல் காலமுழுக்க பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதே என் இப்போதைய ஆசை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;•&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-3608402593740088590?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/3608402593740088590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=3608402593740088590' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3608402593740088590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3608402593740088590'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/11/blog-post.html' title='ஒரு கூடும் சில குளவிகளும்..'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2041299843494526949</id><published>2011-09-16T17:25:00.000+05:30</published><updated>2011-09-16T18:00:48.629+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை...'/><title type='text'>வதம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;• &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துண்டான சிலந்தியின் கால் துடிப்பதைபோல அவளின் இடதுகை மட்டும் பாயில் பிறாண்டிக் கொண்டிருந்தது. இரண்டு கண்முழிகளும் பிதுங்கி மேற்நோக்கி நிலைகுத்திவிட்டது. இந்நேரம் அவள் நாடி அடங்கியிருக்கும். இத்தனை ரண வேதனையும் நெஞ்செரிச்சலையும் தாண்டி என்மனதில் பூரண நிம்மதி, சந்தோஷம். இரண்டுவாரமாக இருந்த என் வயிற்றெரிச்சல் இன்று அடங்கிவிட்டது. ஆனாலும் வாய்விட்டு சிரிப்பதற்கு என்னிடம் திராணியில்லை. ஒரே இறுக்கமாக இருக்கிறது. இந்த மரமட்டைகள் அசைந்து தொலைத்தால் தேவலை. வாசற்கதவுக்கூட திறந்துதான் கிடக்கிறது.&amp;nbsp; இவள் போட்ட இந்தக்கூச்சலை யாராவது கேட்டிருப்பார்களா? இருக்காது... இருக்காது. எனக்கே லேசாகத்தான் கேட்டது.&amp;nbsp; பாஷாணம் எனக்கும் வேலை செய்கிறது. மெல்ல மெல்ல பார்வை மறைவதை நன்றாக உணரமுடிகிறது. கூரையின் மோட்டுவலைக் குச்சிகள் கோடுகோடாய்த்தான் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் செய்தி தெரிந்தபின் என்னாகுமோ!? கலைந்த கோலமும் அதனை மொய்க்கும் எறும்புகளுமாய் ஊர் சனமே கூடி நிற்கும். ஆளாளுக்கு வாயில் வந்ததை மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். “சும்மாவாடி சொன்னாங்க… புத்திக்கெட்டதுங்க பூமிக்கிப்பாரம்னு” , “இந்த ரெண்டுங்கெட்டானோட வாழறதுக்கு அவ இப்டி சாவலாங்கறேன்” “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வளத்தத தாரவாத்துட்டுதுங்க, இனி இருந்தென்ன? இல்லன்னாயென்ன? பேரன்பேத்தி பாத்துட்டு போயிருக்கலாம், என்ன கஷ்டமோ என்னமோ?” இப்படி. எப்படியும் எவனாவது ஓடிப்போய் பபிதாவுக்கு தந்தி அடித்துவிடுவான். அவளிடமிருந்து வந்த கடிதங்கள் குதிருக்கு பக்கத்தில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதிலேயே அவளின் முகவரியும் இருக்கிறது. MOTHER AND FATHER DEAD அல்லது VAITHYANATHAN AND ANNAM DEAD இப்படித்தான் கொடுக்கப்போகிறார்கள். இப்படித்தான் நாலைந்து எழவு வீடுகளுக்கு நானும் கொடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி தெரிந்தால் பபிதா துடித்துதான் போவாள். சிறா உடைக்கும் கோடரியை நடுமாரில் போட்டதுபோல்தான் இருக்கும், வயிறிலும் வாயிலும் அடித்துக்கொள்வாள். அந்த நேரத்தில் பஸ் கிடைக்குமோ என்னமோ?. அவளுக்கு எங்களைவிட்டால் நாதியில்லைதான், அதுவும் என்மேல் அவளுக்கு ரொம்பவே ப்ரியம். ஒரே பெண், சொல்லவா வேண்டும்.. எத்தனை ஊட்டி வளர்த்திருக்கிறேன். இவள் வயிற்றில் பிறந்ததுதான். கல்யாணம் முடிந்து இரண்டுவாரம்தான் ஆகிறது. நேற்று ஊருக்குப் போகும்போது கலங்கிய விழிகளுடன் என்னையேன் அப்படிப் பார்த்தாளென்று தெரியவில்லை. தீர்க்கதரிசனம் என்பார்களே! அதுபோல் எதாவது இருந்திருக்குமோ? இருக்கும் இருக்கும்.. நான் வளர்த்தவளாயிற்றே. பெண் வீட்டாரின் மூன்று அழைப்புகளும் முடிந்து ரெண்டுபேரையும் நேற்றுதான் அனுப்பிவைத்தோம். நானும் அவள் நல்லபடியாக போகட்டுமென்றுதான் காத்துக்கிடந்தேன். பபிதாவை நினைத்தால் கொஞ்சம் சங்கடமாகயிருந்தாலும் இது சரியான முடிவுதான். என்ன செய்வது?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலநாள் திருடன் ஒருநாளில் மாட்டுவான் என்பார்கள். ஒருவேளை அந்தச் செய்தி பப்பிக்குத் தெரிந்தால்... அவ்வளவுதான், நாண்டுகொள்வாள், இதைவிட பெரிய அவமானம் அவளுக்கு கிடையாது. குடியே முழுகிவிடும். அய்யோ, வேண்டாம்..வேண்டாம், நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்த மாதிரி நடப்பதற்குதான் இனி வழியில்லையே. அன்னம் வாய் திறந்தால்தான் உண்டு. அவள் வாய்தான் பிளந்துகிடக்கிறதே. ஹ..ஹ... என்னமோ சொல்வார்களே கரவம் கட்டி பழிதீர்ப்பதென்று. இந்த ரெண்டு வாரமும் என் மனம் கிடந்து எப்படித் துடித்தது, யாருக்காவது தெரியுமா?.. எத்தனை சாணக்கியக்காரி, கைகாரி இந்த அன்னம். நாக்கில் எத்தனை கொடுக்குகள். சாகும்போதுக்கூட என்ன துடுக்கான பேச்சு பேசுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அன்னத்துக்குமான இந்த 24, 25 ஆண்டுகால வாழ்க்கை மேம்போக்காக அப்பா, அம்மா ஸ்தானத்தில் பப்பிக்கு தெரிந்தாலும் இலைமறை காய்மறையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்த விசயம் வெளியுலகத்திற்கு தெரிந்தால் என்னாவது? வெளியுலகம் கிடக்கு, முதலில் பபிதாவிற்கு தெரியாமலே போய்விடவேண்டும். இனித்தெரியவும் வாய்ப்பில்லை. சுப்பிணி ஒருத்தனை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.&amp;nbsp; அவனும் சொல்லக் கூடியவனில்லை. மானஸ்தன்தான். என்ன பெரிய மானஸ்தன்? பொல்லாத மானஸ்தன், நயவஞ்சகன்... காரியசாலி.. அவனைவிட்டால் இது வெளியில் ரெண்டாம்பேருக்கு தெரியாது, சொல்லமாட்டான் அவன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தால்தான் என்ன? நான் இனி எதைப் பார்க்கப்போகிறேன். தோ, இந்த பூரணம் அற்பமாகப்போகிறது. பிராணன் போனப்பிறகு என்ன நடந்தால் என்ன..? இந்த சுப்பிணி இல்லையென்றால் எனக்கும் அன்னத்துக்குமான வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்!! இருந்திருக்குமா? அவன் முன்னமே செத்திருந்தால் இது சாத்தியம். நிச்சயம் இருந்திருக்கலாம், ஆனால் இவள்.. நெஞ்செல்லாம் வஞ்சம், சண்டாளி... செத்தாள் சனியன், சாகட்டும், சாகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எங்களுக்கு கல்யாணம் ஆகி 6 மாதமாகியிருந்தது. தனிக்குடித்தனம். அதற்குள் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது, மாயை. வேண்டா வெறுப்பான வாழ்க்கையாக தெரிந்தது. கொல்லன் பட்டறையில் பதம் பார்த்தடித்த அரிவாள் முனையில் சம்மட்டியை போட்டு மழுங்கடித்தாற் போலாகிவிட்டது. வேறென்ன சொல்வது? அன்னம் அன்று காலரா வந்துகிடந்தாள். பக்கத்தில் பார்த்துக்கொள்ள ஆளில்லை. இருவர் வீட்டிற்குமே நான் சொல்லவுமில்லை. பார்த்துக்கொள்ளலாமென்ற அசட்டை. நான் பட்டறையில் கிடந்தேன். முதல்நாளே வயிற்றைப் பிடித்துக் கிடந்தவளை நான்தான் அலட்சியப்படுத்திவிட்டேன். அவளும் தன் தீவிரத்தைக் காட்டவில்லை. இந்த சுப்பிணி பக்கத்து வீட்டுக்காரன். துணிமணியெல்லாம் கழிந்து கிடந்தவளை தூக்கிக்கொண்டு அவன்தான் ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்கிறான். பிறகு சேதிவந்துதான் அரக்கபறக்க நானும் ஓடினேன். காய்ந்த மாவிலைப்போல படுக்கையில் கிடந்தாள். எனக்கும் உச்சிமண்டையில் அப்போதுதான் உரைத்தது. ஒரு உயிரை உதாசீனப்படுத்துமளவுக்கு எத்தனை வன்மம், வக்கிரப்புத்தி எனக்கு. படித்து என்ன பிரையோஜனம். ஒன்றுமில்லை. ஒரு நல்ல வேலைக்குக்கூட போகமுடியவில்லை, நல்ல புத்தியும் இல்லை, இந்த உடல், நடை, உடை, பாவனை எதுவும் ம்கூம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் நான் சுப்பிணியை தினமும் வணங்காத குறைதான். அவ்வளவு மதிப்பு அவன் மீதிருந்தது. நண்பர்களைப்போல நல்ல பழக்கம்தான் சுப்புணிக்கும் எனக்கும். அவனுக்கு நல்ல தலதல உடல்வாகு, மண்வெட்டி இலைபோல ஏந்தலான மார்புகள், தலை, கை, கால், மூக்கு முழி எதுவும் குறையில்லை. என்னைப்போலில்லைதான். எனக்கென்ன குறைச்சல் நானும் அவனைப்போல ஆண்பிள்ளைதான், ஆமாம் ஆண்பிள்ளைதான். அன்னத்தை தவிர எல்லாருக்கும் நானொரு ஆண்மகன்தான். தாம்பத்தியத்தை அன்னம் ரொம்பவும் விரும்பியிருப்பாள் போலிருக்கிறது. ஆனால் வெறும் தாம்பத்தியம்தான் இந்த வாழ்க்கையா? ச்ச்ச.. நானும் அவ்வாறு நினைக்கவில்லைதானே. அதிலும் குறையாக எனக்கு தெரியவில்லையே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அன்னம்.. இந்த அன்னம்.......? இதோ கோசா..கோசா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கத்தியே செத்துப்போனாளே இந்த அன்னம்.. இவளைத்தவிர நான் எல்லோருக்கும் ஆண்பிள்ளைதான். என்னைப்பற்றி யாரிடமாவது சொல்லியிருப்பாளா? இருக்காது, சொல்லியிருந்தால் அக்கம் பக்கத்துக்கு சிறுக்கிகள்&lt;br /&gt;என்னை ஏளனமாக பார்த்திருக்கவேண்டும். யாரும் அப்படி பார்த்ததே கிடையாது. ஆங்... ஆனாலும் சகுந்தலா சிறுக்கி மட்டும் ஒருமாதிரி வெடைப்பாக பார்ப்பாள், அப்பப்பா அதில்தான் எத்தனை எள்ளல்...!! த்தூ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதோ பள்ளிவயதில் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு சிங்கானோடை ஜோசியக்காரன் சொன்னான், அந்த கருநாக்கன்தான் சொன்னான்..&amp;nbsp; இன்னும் ஞாபகமிருக்கிறது. ‘இது, பொம்மனாட்டி ஜாதகம்ல, இது தப்பிப்பொறந்தது, கேந்திரஸ்தானம், லக்னத்துல புதனும், சுக்கிரனும் சேந்துக்கெடக்கான், சந்திரன்&amp;nbsp; உச்சம்... புதன் அலி, சுக்கிரனும், சந்திரனும் பொம்பளச் சாதி.... ம்ம்ம்... ஜாதக அம்சமே அதாஞ்சொல்லுது, ஆளு பாத்தாலே தெர்லயா... ‘ஆனாலும்?’ இரண்டு மூன்று விரல்களை எண்ணிவிட்டு பிறகு சொன்னான் ‘....... காலத்துல சரியாயிடும், பாருங்க. கெட்டிக்காரனாயிடுவான்’.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான், என் பேச்செல்லாம்கூட ரெண்டுங்கெட்டான் நிலைதான், இப்போதெல்லாம் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன், மாற்றிகொண்டேனென்றால் அதிகம் எவரிடமும் பேசுவது கிடையாது. வாயைக் குதப்ப வெற்றிலைப் பாக்கு, இருக்கவேயிருக்கு. வேறென்ன.. அப்போதெல்லாம் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ள ரொம்ப பிரியப்படுவேன். ஏனென்றும் தெரியாது. அந்த பருவத்தில் ஆண்கள் மீதான விருப்பம்தான் மிதமிஞ்சியிருந்தது. பள்ளியில் என்கூட படித்த பயல்கள் எல்லாமே முதுகுக்குப்பின்னாடி ‘கோசா, ஒம்போது’ என்றுதான் பேசிக்கொள்வார்கள். எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் எனக்கு அது பொருட்டில்லை, பழகிப்போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாட்டின் கன்றுக்குட்டியை தினமும் தூக்கிப்பழகினால், அது மாடானப்பிறகும் நம்மாள் தூக்க முடியும். அதுபோல்தான் எல்லாமே எனக்கு பழகியிருந்தது. புளித்துப்போன வார்த்தைகள். ஒரு உச்ச வெறுப்பான நாளில் அன்னத்துக்கும் எனக்கும் சண்டை. பப்பிக்கு அப்போது மூன்றரை வயதிருக்கும். அன்னம் என்னை ‘வாடா, போடா’ போட்டு திட்டினாள். ஓங்கி அறைந்தேன், ‘டேய் கோசாப்பயலே என்னையாடா அடிக்கிற? சாண்டக்குடிக்கார, உங்கூட எவளாச்சும் குடும்பம் நடத்துவாளாடா, இம்மாந் தண்ணிக்கு உன்னய தெருவுல கையேந்த விடறேன்டா’ என்று பிடித்து தள்ளினாள், பிறகு அப்பன் வீட்டுக்கு போய்விட்டாள். பிறகு மாமனார் சமரசம், இத்யாதிகள். ஆனாலும் அவள்மனதில் என் மீதான இளக்காரப் பார்வை தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. நிஜமாகவே குமட்டுகிறது... உவ்வ்வ்... பாஷாணம் வேலை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாள் இல்லாத அல்லது தெரியாத அந்த இடி இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் என்தலையில் விழுந்தது. அது எனக்கு தெரியாமலே இருந்திருக்கக்கூடாதா?... பப்பி என் மகளே இல்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘மகமாயி.. மகமாயி.. நித்தம் உன்னக் கும்பிடுறனே... என்னடி சோதனையிது..’ கொல்லைக்கட்டில் இந்த சிறிக்கியும், அந்தப்பயலும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, எவ்வளவு அன்யோன்யமாக பேச்சு அவர்களுக்குள், குசுகுசுன்னு. ‘தாயே... மகமாயி...மகமாயி... நீயாச்சும் அப்பவே இவள காட்டிகொடுக்கக்கூடாதா?...’ ஆமாம் தெரிந்துதான் என்ன? ஒன்றும் கிடையாது. என் வாழ்க்கையே பப்பிக்காகதானே... அதெப்படி? இத்தனைக்காலம் எனக்குத் தெரியாமல்.... இவர்களின் உறவு புடம்போட்டதுபோல் மறைந்திருக்க முடியும்?.. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திருக்கும், எத்தனை நாள், ராப்பகல் பாராத பட்டறை வாழ்க்கை.. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது பிறகென்ன... பப்பிக்குப்போட்ட அந்த நாலு பவுன் நகையும், அவன்தான் கொடுத்திருப்பானோ? அவனேதான்.. நான் கேட்டதுக்கு இவள்தான் பதிலே சொல்லவில்லையே.. அப்படித்தானிருக்கும். அய்யோ பப்பி.. பப்பி..&amp;nbsp; ‘ச்ச்ச்ச்ச... இதென்ன புதிசா.. ஞாபகம் கொடுக்கும் பப்பியின் முகம் அவன் மூகமாட்டம்... அந்த உள்ளி மூக்கு அவனுடையதுதானோ? அவனுடையதுதான்.. அவனுடையதுதான்.. அப்படியே அவனைத்தான் உரித்துவைத்திருக்கிறாள். இத்தனைநாள் எனக்கு தோன்றவில்லையே.. இதென்ன.. ச்சை..ச்சை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாஷாணம் என்ன இப்படி உடம்பை முருக்குகிறது. யப்பா.. நெஞ்சிக்குள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதுபோல் எரிகிறது.... அன்னம் இன்று பரங்கிப்பழம் போட்டு பூண்டுக் குழம்புதான் வைத்திருந்தாள். அதில்தான் இதை ஊற்றினேன். பூண்டு வாடை எல்லாவற்றையும் மறைத்தேவிட்டது. நல்லதுதான். ஒன்றரை தட்டு சாதமாவது சாப்பிட்டிருப்பாள். தெரிந்ததாலோ என்னமோ அரைதட்டுக்குமேல் என்னால் முழுங்க முடியவில்லை. ரெண்டு மொனரு தண்ணீரும் குடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னம் போய்ச்சேர்ந்து இவ்வளவு நேரமாகியும் நான்மட்டும் இழுத்துக்கொண்டு கிடக்க அதுதான் காரணம். ஆனாலும் பூண்டுக்குழம்பில் பரங்கிப்பழம் போட்டால் எவ்வளவு ருசி!! நன்றாக வெந்த சேமியாபோல அதன் சதைகள், ஹும்.. ரசித்து ருசித்துச் சாப்பிடவேண்டும். ‘நாடகம் விடும் வேலைதான் உச்ச காட்சி நடக்குதம்மா....’ பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. ‘கண்ணெல்லாம் சொருகுதுடி, நெஞ்செரிச்சல் தாங்கமுடியலடி ப்ப்பி...தாயீ.. நீ என் பொண்ணேயில்லையாமே?.. அய்யோ..அய்யோ..அய்யோ.. இது அடுக்குமா? தலையிலகூட அடிச்சிக்க முடியலடி.. சண்டாளி... செத்தா... இப்டி ஒரு வாழ்க்கை தேவையாடி ஒனக்கு அன்னம்..?? தேவயா......’ பூலோகம் இருண்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;• &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நன்றி &lt;b&gt;&lt;a href="http://www.atheetham.com/story/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D"&gt;அதீதம்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;•&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-2041299843494526949?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/2041299843494526949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=2041299843494526949' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2041299843494526949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2041299843494526949'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/09/blog-post.html' title='வதம்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2817072137088275530</id><published>2011-07-29T18:04:00.003+05:30</published><updated>2011-07-29T20:14:12.496+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடரிடுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காத்திருத்தல்'/><title type='text'>காத்திருத்தல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;• &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரும்பாலும் பெரிய விசயங்களைவிட சிறுசிறு விசயங்களில்தான் காத்திருத்தலென்பது ஒரு சுமையெனப் படுகிறதெனக்கு, என் புத்திக்கு. நான் காத்திருந்த நேரங்களைவிட காக்கவைத்த நேரங்கள்தான் அதிகமிருக்குமென்பது இதையெழுத நினைக்கும்போதுதான் ஞாபகம் வந்துதொலை(க்)கிறது. விவசாயி மழைக்கு, மாணவன் பரிட்சை முடிவுக்கு, இளைஞன் காதலுக்கு, பெண் திருமணத்திற்கு, ஒரு குடும்பத் தலைவன் கணக்குப் போட்டு கடன் வாங்கி பின் வரும்படிக்கு என இப்படி ஒவ்வொரு காலத்திற்குமான ஒவ்வொரு வகை&amp;nbsp; பெரிய காத்திருப்புகள் கட்டாயம். ஒரு காத்திருத்தலும் அதற்குள் மனதிற்குள் உண்டாகும் எண்ணங்களும் மொத்த வாழ்வின் வலி, போராட்டம், தவிப்பு, இன்பம், துன்பம், அனைத்திற்கும் மேலான ஒருவித சுகச்சுமை போன்ற அத்துணைப் பண்புகளையும் காலத்திற்கேற்றாற்போல் ஒருங்கே கொடுத்துவிடுகிறது. நான் இத்தனைப் பிசகில்லாமல் எளிமையாகக் கடந்திருக்கிறேனோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இது வரமா, சாபமா தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;•&lt;br /&gt;&lt;br /&gt;தெருவே அல்லோகலப்பட்டுக் கிடந்தது. அனைத்து வீட்டு வாசல்களிலும் என்னொத்தச் சிறுவர்கள் வெடிகளை காயப்போட்டிருந்தனர். பார்க்கப்பார்க்க பொங்கிப் பொங்கி வந்தது. மாலை மணி ஆறாகிவிட்டது. அப்பா வந்தபாடில்லை. மாயவரம் மரவாடிக்கு சென்றிருந்தார். துணிமணிகளை எடுத்து ஒரு மாதமாகியிருந்தது. ஆனால் வெடி? ‘தோ செத்தயிரு வந்திடும்பா’ இரும்புச் சாரணியில் முறுக்குப் பிழிந்தபடியே அம்மாவின் ஆறுதல். பாவி மனசு கேட்கணுமே. ஏக்கமும், தவிப்பும் நிரம்பி உதடுகள்வழி பிதுங்கி பொங்கிவிட்டது. ஏழு, எட்டு... கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி பொங்கலும் அடங்கியது. எனக்கு அப்போது புஸ்வானம் விட ரொம்பப் பிடிக்கும். ஒரு புள்ளியிலிருந்து விரிகின்ற மலர்போல அழகு.&amp;nbsp;&amp;nbsp; எல்லோர்வீட்டு பிள்ளைகளும் புஸ்வானம் விட்டுக்கொண்டிருந்தனர். நான் ‘புஸ்’ஸானேன். உண்டேனா இல்லையாவென்று தெரியவில்லை ஆனால் உறங்கிவிட்டேன். பதினொன்றரை மணியிருக்கலாம் அப்பா வந்தார், ஐம்பது ரூபாய் வெடிகளுடன். அம்மா எழுப்பி காட்டினாள். செய்தித்தாளில் சுற்றி சணல் போட்டுக் கட்டியிருந்தார்கள். காத்திருந்த மனதிலிருந்து அத்தனை அடைசல்களும் நீங்கி ஆற்றாமையும், தவிப்பும், பொய்க் கோபங்களும் பெருமூச்சின் வழி காற்றுடன் கலந்தது. ஐப்பசி குளிரில் புஸ்வானங்கள் ஜில்லென்றிருந்தது. ‘இந்தா இந்தா கொளுத்து’ என்று அப்பாவும் துணைக்கு வந்தார். மழையும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;•&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிக் காலம். பவானியின் அண்ணனைப் பார்க்க தனியாக ஆக்கூர் பஸ்டாண்ட் பேக்கரி கடையில் உட்கார்ந்திருந்தேன், இடுப்பில் பைப் கத்தி சகிதம். பவானியை காதலித்தேனென்பது உலகறிந்தது. அந்த ‘ஒரே’ குற்றத்திற்காக என்னை ஆள்வைத்து மிரட்டினான், கிராதகன். வந்ததே கோபம், வச்சனா தகடியா ஒன்று நான், இல்லை அவன். அதற்குதான் அந்தக் காத்திருத்தல். என்னை மிரட்டியவன் பார்த்து விட்டான். ஆனால் கண்டு கொள்ளவில்லை. 2வது சந்திலிருக்கும் பவானி வீட்டிற்கு அவன் சென்றிருக்க வேண்டும். அந்த சந்து முகனையில்தான் பஞ்சாயத்து அலுவலகம். அதுவரை எந்த வம்பு தும்புகளுக்கும் போனவனில்லை. அரசமரம், கோயில்கள் தவிர்த்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பஞ்சாயத்து நடக்குமென்பது என் அறிவீனம். கொஞ்சம் மனதுக்குள் வியர்க்கத் தொடங்கியது. போன பேருந்தைக் காணோம். ஒண்டிக்கட்டை. எவ்வளவு தைரியம்?&amp;nbsp; இவ்வளவு தூரமென்று உணர்வதற்கும் நேரமில்லை. பொதுவாகவே நான், இணையாகவிழும் இரு மழைத்துளிகளுக்கிடையேப் பிசகாமல் நுழைந்துவரும் புஷ்டியான உடலமைப்பைப் பெற்றவன். சற்றைக்கெல்லாம் அவள் அண்ணன் வந்துவிட்டான். நல்லவேளை வேறு யாரும் வரவில்லை. ‘டேய் வேணான்டா விட்டுடு, அதான் புடிக்கலன்னு சொல்லுதுல்ல, அப்பறம் ஏன்டா?, எப்பாவுக்கு (வாத்தியார்) தெரிஞ்சா பிரச்சன ஆயிடும்.. அவ்ளோதான்’ சொல்லி முடித்தான்.. ப்ப்ப்ரு... இவ்ளோத்தானா? அட சொங்கிப்பயலே.. (மனதிற்குள்) முகத்தை விரைப்பாக வைத்திருந்தேன், கையும் காலும் கடகட, மனது பக்பக். அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினேன். அரைமணி நேரமானது... அந்தக்(கால) காத்திருத்தலொரு இளப் போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;•&lt;br /&gt;&lt;br /&gt;அதே காலம். நண்பனையும் அவன் காதலியையும் பேருந்தில் ஏற்றிவிட்டோம், இன்னொரு நண்பனும் நானும். சம்போ சிவசம்போ பாடல் அப்போதில்லை. இரண்டுநாள் கழித்து நானும் அவனும் காவல் நிலையத்தில், ஆய்வாளர் வருகைக்காக ‘அமர’ வைக்கப்பட்டிருந்தோம். காவல் நிலையமென்பது சிகப்புக் கலர் பெயிண்ட் அடிக்கப்பட்ட கட்டிடமென்பது என் பரம்பரைக்கே அத்துப்படி. அதில் ‘உள்ளாழ்ந்து’ நடப்பவற்றை முதலில் ‘புல’னாய்வு செய்தவன் நான்தான். பெண்ணைப் பெற்றவர் ‘உங்க ரெண்டுபேரையும் என்னப்பண்றேன் பாருங்கடா’&amp;nbsp; என்று காவல்நிலைய வாசலில் சவால்விட்டுக் கொண்டிருந்தார். (என்) அப்பா கொஞ்சதூரம் தள்ளி மரநிழலில் குருசாமியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் காவலர், தெருக்காரர், மேலும் எங்களிருவருக்கும் வக்காலத்து. வரப்போகும் காவல்துறை ஆய்வாளர் மிகவும் கண்டிப்பானவரென்று அறிந்திருந்தேன். உள்ளே மரப்பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனும் நானும் உச்சா போகாதக் குறைதான். ‘ஒழுங்கா உண்மையச் சொல்லிடுங்கடா, விட்டுர்றோம், அய்யா வந்தாருன்னா பின்னிருவாரு’ என்னமோ சடைப் பின்னுவதுபோல் அந்த எழுத்தர் சொன்னார். அடிவயிறு முட்டியது. எப்பாடுபட்டாலும் உண்மையைச் சொல்லக்கூடாது என்பது எங்கள் திண்ணம். ஆனால் லத்தியைப் பார்க்கும்போது அது இளகிக்கொண்டிருந்தது. அதுவரைக்கும் அப்பாவின் விளக்கமாத்து அடிகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட எனக்கு லத்திகளை பார்த்தபோதே வலிக்க தொடங்கிவிட்டது. நண்பனுக்காவது கொஞ்சம் என்புசதை போர்த்திய உடம்பு, இங்கே என்புதோல்தான்.. ஒரு மணிநேரம் ஆகும். உதைவாங்க காத்திருந்தோம். அம்மா, அப்பா, அக்கா எல்லா உறவுகளும் கண்முன் நிழலாடியது. வாங்கப்போகும் அடியின் அச்சாரம் எப்படியிருக்குமென்பதை பக்கத்திலிருந்தவன் கன்னம் சொல்லியது. வந்தார். சில கட்டளைகள், சில வசவுகள், எச்சரிக்கைகள்...அவ்வளவுதான். சோம்பல் முறித்துக்கொண்டு வெளியே வந்தேன். காத்திருந்த அப்பா அழுதிருந்தார், பெத்தமனம்... &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;•&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அழைத்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;•&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-2817072137088275530?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/2817072137088275530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=2817072137088275530' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2817072137088275530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2817072137088275530'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/07/blog-post.html' title='காத்திருத்தல்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7059806553968753583</id><published>2011-06-30T19:19:00.007+05:30</published><updated>2011-07-21T13:04:11.829+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>பம்பரம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;•&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீலவேணி இறந்து திங்களோடு திங்கள் எட்டு செவ்வாய் ஒன்பது நாட்களாகிறது. கோபுரத்தில் விழுந்த காகத்தின் எச்சம், முளைத்து ஆலமரமும் பின் அதுவே விருட்சமுமானது போல்தான் எங்கள் வாழ்க்கை. பாசி பிடித்த படித்துறையில் கால் வைத்தால் வழுக்கிவிடும், ஆனால் அதையும் மீறி இத்தனைக்காலம் ஓடிவிட்டது. போய் சேர்ந்துவிட்டாள் புண்ணியவதி. புதைத்த கையோடு உடன் பாலும் கையோடு மையோடு கல்லு கருமாதியும் முடிந்தேவிட்டது. ஊதுபத்தி வாடையும், பன்னீரின் வாடையும் கலந்து அவளின் சுவாசம் நிறைந்த இந்த கூடாரத்தை அபகரித்துவிட்டது. கண்ணுக்குத் தெரிந்து இந்த வீடும், தோ அவள் படத்தின் முன்னுள்ள பாக்கு வெட்டியும்தான் அவளுக்கான ஜென்மபலன், எங்களுக்கும். ஒட்டங்காடு போகவேண்டுமென்று தோன்றியது. இத்தனை நாளும் இந்த எண்ணம் இல்லாமலில்லை, இப்போதுபோல் இத்தனை நாளுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘ரெங்கா? நான் ஒட்டங்காடுவரைக்கும் போவலாம்ணு இருக்கேன்யா...’ ரெங்கா என்னையே பார்த்துகொண்டிருந்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவனும் என்ன செய்வான்? &lt;br /&gt;&lt;br /&gt;‘ஏம்ப்பா? இப்பபோயி?!!!’&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லய்யா, எனக்கென்னமோ போலருக்கு, நீலா பொறந்த ஊரு, அவளோட நான் வந்ததுலேர்ந்து இப்பதான் நேரங்கூடி வந்திருக்கு, தடவைக்கு தடவ நாஞ்சொன்னாலும் வேண்டா வேண்டாம்பா.. ஒரு நாலு நாளு இருந்திட்டு வர்ரன்யா’ நிறைய ஆற்றாமையும் கொஞ்சம் இயலாமையும் கலந்த என் பேச்சை அவன் தட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘அதுக்குச்சொல்லல...’ முழுங்கிவிட்டு ‘சரிப்பா, அங்கப்போயி எங்க தங்குவீங்க? யாரிருக்கா? பட்டாமணியாரு இருக்காரா இப்ப? அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு போங்களேன்..’&lt;br /&gt;&lt;br /&gt;‘சரிய்யா, பாக்கறேன், ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டே கெளம்பறேன்’&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் தயாராகிவிட்டது. ஒரு கருப்புப் பையும், துணிமணிகளும், பேஸ்ட், பிரஸ் எல்லாமும் சரியாக எடுத்துவைத்திருந்தாள் சரசு, மருமகள். ‘போலாமா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘தோ வந்திட்டேம்பா’ வண்டியில் கொண்டுவந்து பஸ்டாண்டில் விட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதே முக்காலுக்கு கோயம்பேட்டில் எடுப்பான் அந்த பொறையார் பஸ். பொறையார் டூ மெட்ராஸ், மெட்ராஸ் டூ பொறையார் பைபாஸ். நெய்வேலி, சீர்காழி, மாயவரம், அப்பறம் நேர்வழியாக பொறையார் செல்லக்கூடியது. மாயவரத்தில் இறங்கி லாட்ஜில் தங்கி, குளித்துவிட்டு லைட்டாக டிபன் முடித்துக்கொண்டு கிளம்பினாலும் போதும். காலையில் ஒன்பதரைக்கோ என்னமோ 23ம் நம்பர் பஸ். செம்பனார்கோவில், ஒட்டங்காடு, திருவிளையாட்டம் வழியாக சங்கரன்பந்தல் போகும் அப்போது. இப்போதும் அந்த பஸ் ஓடுவதாக பட்டாமணியார் சொன்னார். இன்னேரம் அவருக்கும் என்னைப்போலவே வயதாகிருக்கும். தாடி, மீசை, கழுத்தில் ஒற்றை ருத்ராச்சம் இன்னமும் அப்படியே இருப்பாரா?!! வயோதிகம் அவர் உடலையும் வாட்டியிருக்கலாம். அவர் மனைவி செத்தது தெரியும். ஒட்டங்காட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் அவர் மூலமேதான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது ‘வர்ரேன்’ என்று சொன்னேனே ஒழிய எப்போதென்று சொல்லவில்லை. அவர் கண்ணில் படாமல் ஊரில் உலாவ முடியுமா? முடியும், முடியும்.. பாப்போம்.. &lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சளாற்றைத் தாண்டி இடதுபுறம் திரும்பியது பேருந்து. எனக்கு மனதெல்லாம் பக்..பக்..கென்று அடித்துக்கொள்ளத் துவங்கியது. கிட்டத்தட்ட 32 வருடங்கள். இங்கிருந்து இதே வழியேதான் நானும் நீலாவும் சைக்கிளில் செம்பனார்கோவில் போய், பின்பு பேருந்தில் மாயவரம், அப்பறம் மெட்ராஸ். அப்போது இந்தச் சாலை சிகப்பு கப்பியில் நிரம்பியிருக்கும். தொலைவில் இடதுபுறத்தில் சட்ரஸ்ஸும், வலதுபுறத்தில் முனியப்பன் கோவிலும் தெரிந்தது. அப்படியேத்தானிருக்கிறது. எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகருகே இரண்டு மூன்று குடிசைகள். நாங்கள் ஊரைவிட்டுப்போன அந்தக் கடைசிநேர பரபரப்பிலும் நீலா முனியப்பன் உண்டியலில் எதோ காசுபோட்டுவிட்டு சைக்கிளில் வந்து குந்தினாள். விபூதியும் பூசிக்கொண்டாள், நான் கண்டுகொள்ளவில்லை, இருவரையும். பனைமுட்டு, கோனமுட்டி வாய்க்கால், ஒரு சர்ச், உத்திராபதி கோவில் எல்லாம் செருகச்செருக கடந்துகொண்டேயிருந்தது. உடல் வயிறெல்லாம் ஒரு சந்தோஷ திரவம் சில்லென்றாற்போல் ஊறியது. பேருந்து இறக்கத்தில் இறங்கும்போது அடிவயிற்றில் ஒரு இனம்புரியா கிறக்கம் உண்டாகும், அப்படிதான் இதுவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் ஸ்டாப்பிங்கில் இறங்கினேன். யாருக்கும் என்னைத்தெரிய வாய்ப்பேயில்லை. ஆனால் என் அப்பனை அறிந்தவர்கள் யாரேனுமிருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். ஆமாம்...என்னிடம் என் அப்பனின் முகம் அப்படியே ஒட்டியுள்ளது. இந்த பத்துநாள் தாடியும், வீசையும் அந்தாள் மூஞ்சை பளிச்சென்று காட்டிக்கொடுத்துவிடும். நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை. மாரியம்மன் கோவில் வாசலில் தீக்குழி, கரிகள் அள்ளியபின் தெரியும் கருமை படர்ந்திருந்தது. எத்தனைக் கூட்டம் தீமிதித்திருக்குமோ!!!? ஒட்டங்காடு மாரியம்மன் தீமிதியென்றால் மாமாங்க கூட்டம் கூடும். ஜெ.ஜெ வென்று சுத்துபட்டு 54 கிராம மக்கள் கூடுவார்கள். எதிர் சாரியில் ஒரு பெட்டிக்கடை, வாடகை சைக்கிளும் இரண்டு முன்று கிடந்தது. அருள்ராஜ்தான் முன்பு இந்தக் கடை வைத்திருந்தார். இப்போது யாரென்று தெரியவில்லை. கடையில் யாரோ பொடியன் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தம்பி, சைக்கிள் வாடகைக்கு வேணும்பா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘சைக்கிளா? நீங்க? எங்க போணூம்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘பெருமாக் கோவிலாண்ட’&lt;br /&gt;&lt;br /&gt;‘எப்ப வருவீங்க?’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒரு மணிநேரத்துக்குள்ள வந்திடுவம்பா’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஐ.டி. கார்ட் வேணும், இருக்கா?’&lt;br /&gt;&lt;br /&gt;சட்டையிலிருந்த பழைய லைசன்ஸ் கார்டை நீட்டினேன். வாங்கிக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;‘கேரியர் வய்ச்சி வேண்டால்ல’ ஒரு சைக்கிளைக் காட்டினான். எடுத்து ஸ்டேண்ட் தள்ளினேன். ரொம்ப நாளாகிறது, சைக்கிளைத்தொட்டு. மெட்ராஸில் கொஞ்சகாலம் சைக்கிள் ஓட்டியிருந்தாலும் நீண்ட இடைவெளி. ஒரு உந்து உந்தி ஏறினேன். பெடலை மிதிக்கும்போது சுலபமாக என்னையும் தள்ளிக்கொண்டே போவதுமாதிரி தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை, பெருமாள் குளத்தங்கரையில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு&amp;nbsp; அரசமரத்தைச் சுற்றி கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்தேன். கோவிலின் உள்ளே மணிச் சத்தம் கேட்டது. மதியக்கால பூஜையாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரச மரத்தடியில் சிறுவனாக இருக்கும்போது சோறு தண்ணியின்றி விளையாடிய காலங்கள் எத்தனை!!! எத்தனை!!! என்னடாயிது வயோதிகத்திலாவது இந்த ஞாபகக் கொடுக்குகள் அற்றுப்போகக்கூடாதா? அதுசரி அப்படியிருந்தால் நாம் ஏன் இங்குவரப்போகிறோம்? கோவிலிலிருந்து யாரோவொருவர் வந்தார். ஆ... அந்த உருவம் பழக்கப்பட்டதுதான். அந்தக்காலத்து ஒற்றைநாடி, இப்போது.. இன்னும் தளர்ந்து... கூன் விழுந்து, அய்யரேதான்!!!!. என்னைப் பார்த்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘யாருப்பாது? இங்க உட்காந்திண்டிருக்க? புதுசாட்டருக்கு!!’&lt;br /&gt;&lt;br /&gt;நெற்றியில் அவர் வைத்திருக்கும் குங்குமக் கீற்றலே போதும் அடையாளங் காண. புருவ மத்தியிலிருந்து உச்சி மண்டை வரை நீளும் அந்தக்கோடு. ‘ஆமாங்க சாமீ, புதுசுதான்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘இஞ்ச யாரப்பாக்கணும்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘சாமீ.. கோதண்டபாணிய ஞாபவமிருக்கா ஒங்களுக்கு?’&lt;br /&gt;&lt;br /&gt;‘எந்தப் போதண்டபாணிங்க, தெர்லியே’&lt;br /&gt;&lt;br /&gt;காது சரியாக கேட்கவில்லை போலும் ‘போதண்டபாணில்ல, கோதண்டபாணி, கோதண்டபாணி..’ உறக்கச்சொன்னேன். பிறகு ‘கொசவங் குட்டைக்கிட்ட ரெய்லோடு போட்ட வீடு ஞாபவமிருக்கா? 30-35 வருஷத்துக்கு முன்னாடிச் சொல்றேன் நானு. அவரு?’ &lt;br /&gt;&lt;br /&gt;‘ஆங்... டேய், படவா.. கோதண்டம் மொவங்காரனா??!!.. அதாங் மொவரக்கட்ட காட்டுதே...!!, குண்டுகுண்டுன்னு ஓடியாடிண்டிருந்த அந்தக் கொழந்தைய சைக்கிள்லயே இழுத்துண்டு ஓட்ன பயலாச்சே நீ... தாடி வீசல்லா வச்சிண்டு, கெழவனாட்டங்க கடக்க.. கூம் நாம்பரவால்லடாப்பா...’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமாங்க சாமீ’. அவர் இத்தனையும் ஞாபகம் வைத்திருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நாளில் ஊர் ஜனங்களுக்கே இந்த சேதி பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கும், அந்த விசும்பல்தான் இந்த ஐயரும். இந்த மரத்தடியில் பம்பரம் விளையாடும் பொழுதுகளில்தான் நீலா ரோட்டுக்கு அந்தண்டைப் பக்கம் வீட்டிலிருந்து பார்ப்பாள். சின்னப்பிள்ளையிலேயே அப்படிதான். ஊரிலேயே அவள் வீடுதான் மாடிவீடு. சீமத்தண்ணி குடித்த குடும்பமென்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மாட்டு கொட்டகைக்கூட ஒரு ஒட்டுக் கட்டிடத்தில்தான் இருந்தது. இப்பொழுது அந்த வீடும் கொட்டகையுமிருந்த சுவடுகளேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏண்டாப்பா நீலா எப்டியிருக்கா?! இன்னும் நீ சாமிச்செலைய ஒடைச்சிண்டுதானிருக்கியா?.... மொகரையே தெரியுதே... தோ பாத்தியா இந்த புள்ளையார? அவரு மூக்க உடைச்சது உன் வேலைதானேடா, இன்னும் ரெண்டு மூணுப் பேரோட தூக்கிப்போட்டியே இந்த கொளத்துல..’&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான் இந்தப் பிள்ளையாரின் மூக்கு உடைந்தது என்னால்தான். அப்போதிருந்த வேகம், பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார், இராவணன் அண்ணன்... இந்த பிள்ளையார்தான் அதற்கு பலி, சாட்சி. அதனால் ஊரில் கெட்டப்பெயர், என்னுடன் சேர்ந்திருந்த மூன்றுபேருக்கும். நீலாவுக்குக்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதுவொரு பொருட்டில்லாமல் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘ஆனா ஒண்ணுடாம்பி, எப்ப புள்ளையாரத்தூக்கி கொளத்தண்டைப் போட்டியோ அப்பலேர்ந்து கொளத்துல தண்ணி அத்துப்போச்சு.. என்ன சாபமோப்போ. பூட்டியிருந்ததால இந்தப் பெருமாள் தப்பிச்சிண்டார். இல்லன்னா அப்பருந்ததுக்கு இவரையும் தூக்கிப்போட்டிருப்ப..&amp;nbsp; ஒண்ணு தெரிஞ்சிக்கோடா, பெருமாளாயிருந்தாயென்ன? பெரியாராயிருந்தாயென்ன? மனுஷாள்மேல மனுஷாளுக்கு நம்பிக்கயத்து போனதாலனேடா இந்த தெய்வங்கள் வந்தது. அதையும் லோகத்லேர்ந்து அழிச்சிண்டா எல்லாஞ் சரியாயிடுமாயென்ன?, சரிவுடு, நீலா எப்டியிருக்கா?’ விட்ட இடத்திற்கே வந்து மீண்டும் அவர் கேட்கும்போது அவர் கண்களில் தெரிந்த ஆச்சர்யம் என்னை நடைமுறைக்கு தள்ளியது. &lt;br /&gt;&lt;br /&gt;‘ம்ம்..நல்லாருக்கா சாமீ’ வேறெதையும் சொல்லத்தோன்றாமல் அசட்டையாக பொய் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நீ கெடக்கவுடு, அவ நல்லாருக்கணும்டாப்பா, ஓடுபுள்ள ஒடியாருபுள்ளையா நாங் பூஜைக்கு வந்தாப்போதும் ஓடோடி வந்திடுவா, குளத்திலேர்ந்து தண்ணி கொண்டாரன்னே.. லெஷ்மி கடாஷம் அப்டியேருக்கும், இந்தப் பெருமாளுக்கு அவளை புடிக்கலப்போல.. அதான உன்னாண்டை விட்டுட்டான். ம்கூம் சூட்டிக்கலானப் பொண்ணு.., சின்ன வயசிலே பம்பரம் வெளையாண்டே அவள ஜோடி சேத்திண்டியேடா? அடுக்குமா, லோகத்துல எந்த பயலுக்காவது இந்த கொடுப்பினை உண்டா?!!’ &lt;br /&gt;&lt;br /&gt;நீலாவையே சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தார், அவள் அம்மா அப்பா செத்தது, போனது, வந்தது, இன்னொரு பட்டாமணியார் கணக்காக ஆகிவிட்டது. அப்பறம் கிளம்பினார். என்னைப் பற்றி பெரிதாக விசாரிக்கக்கூட அவர் விரும்பவில்லை. போய்விட்டார்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;‘இந்த அரச மரத்தடிதான் என் வாழ்க்கை, இங்குதான் என் பொழுதுகள் விடிந்தது, இங்குதான் நீலா கிடைத்தாள், இந்த புனர்ஜென்மம் கிடைத்தது. நாலடி விட்டத்தில் ஒரு வட்டமும் நடுவே முக்கி வெளியேற முடியாத பம்பரங்களுமிருக்கும். வெளியே வந்த பம்பரக்காரர்களின் குறி உள்ளேயிருக்கும் பம்பரங்கள் மீது. அதில் உக்கு வைக்கவே அத்தனைப்பேரின் உக்கிர குணங்களும் ஆசைப்படும். எல்லோருக்கும் பொருந்தும் இந்த நீதி. எல்லாப் பம்பரங்களும் அடிபட்டு வெளியேறினால் பம்பரத்தை இழுப்பு விட்டு கையிறால் இரண்டு சுற்று சுற்றி மேலே தூக்கி இரண்டுகையாலும் பிடிக்கவேண்டும். அப்பீட் என்பார்கள். கடைசியாக எடுப்பவர் பம்பரத்தை உள்ளே வைக்கவேண்டும். இதுதான் பொழுது முச்சூடுமான விளையாட்டு. நான் பம்பரம் விடும் அழகுக்காகவும், அதை குத்துவிடும் ஆக்ரோஷத்திற்காகவும்தான் நீலா என்னை பார்த்துக்கொண்டேயிருப்பாள்.&amp;nbsp; அவளே பிறிதொரு நாளில் சொன்னாள். எல்லாப்பசங்களும் போனப்பிறகு நான் மட்டுமிருப்பேன். மரத்தடிக்கு வந்து ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ என்பாள். அப்போதெல்லாம் பம்பரக்கயிறு புதுத்தாலிக் கயிறு மொத்தமிருக்கும். பம்பரத்தின் கூர்முனையிலிருந்து படிப்படியாக சுற்றி தலைக்குமேல் ஓங்கி கீழ்நோக்கி ஒரு சொடுக்கு சொடுக்குவேன. தரையில் விழாமல் அதை வலது உள்ளங்கியில் தாங்கி அவள் கையில் விடுவேன். பிஞ்சிக்கைகளில் அந்த ஆணிப் பம்பரம் சுற்றிவர சிவந்துவிடும். ரசித்துக் கொண்டிருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பம்பரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு ஒற்றுமை, தொடர்பு. சாட்டையால் சுற்றிவிடுவது எவனோ. சுற்றுவது நாம், தெம்பு குறைந்தபின் ஆட்டம் காலி படுதா காலி. முடியாமல் கஷ்ட வட்டத்தில் மாட்டிக்கொண்டால் உக்கு விழுவதுபோல் சில அடிகள், மரண அடிகள். இதை நினைக்க நினைக்க எனக்கு பம்பரம் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிளை எடுத்துக்கொண்டு வேங்குவேங்கென்று அந்தக் கடைக்குப்போனேன். ‘தம்பி, பம்பரம் இருக்கா?’ மூச்சி இறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘இருக்குங்க’ முழுக் கொட்டைப்பாக்கு அளவில் ஒன்றைக் கொடுத்தான். ப்ளாஸ்டிக் பம்பரம். தமிழ்நாட்டில் பம்பரத் தட்டுப்பாட்டுக்கு விஜயகாந்தும், வைகோவும் காரணகர்த்தாக்கள் போலிருக்கிறது. ச்ச்சை.. &lt;br /&gt;&lt;br /&gt;‘கயிறு கொடப்பா?’ சிகப்புக்கலரில் ஒரு தாம்புக் கயிறுப்போல் கொடுத்தான். மொத்தம் 8 ரூபாய். &lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் அரச மரத்தடிக்கு வந்தேன். பெருமாள் கோவில் உள்ளேயிருந்து ஊதுபத்தி மணம் வெளிவரைக்கும் அடித்தது. அரசமர இலைகள் சலசலவென்று அடித்துக் கொண்டிருந்தன. சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. பம்பரத்தில் கயிற்றைச் சுற்றினேன். வழுக்கி வழுக்கி வந்தது. பிறகு பிடித்துகொண்டது. தரையில் ஓங்கி குத்துவிட்டேன், டங்கென்று தரையில் தட்டி குளத்துப் படிக்கட்டில் விழுந்தது. சுற்றவில்லை. மீண்டும் எடுத்து கொஞ்சம் பொறுமையாகக் குத்தினேன். சுற்றியது. ஒரு பின்னிரவு நேரத்தில் மொட்டைமாடியை அலங்கரிக்கும் காற்று மனதைப் பரவசப்படுத்தும், அதுபோலிருந்தது. கீழே குனிந்து புறங்கை தரையில் பட ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் ஒரு விரிசல் உண்டாக்கி பம்பரத்தில் ஆணிக்கு நேராக நீட்டிச் சொருகினேன். பம்பரம் சுற்றியபடியே கையில் ஏறியது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கேட்டால் பம்பரம் கையில் சுற்றும் அந்த விநாடிகளின் குருகுருப்பையும் கூச்சத்தையும் ஏந்தி ரசிப்பது இந்த வயோதிகத்தின் புண்ணியம் என்பேன். நாற்பது வருடங்கள் இருக்கலாம். இதே மரம், இதே இடம், கலகலவென்று எத்தனைப்பேர் இந்தப் பம்பரம் விளையாட. ஆனால் இப்போது? மல்லாந்துப் படுத்து&amp;nbsp; மார்பில் துப்பிக்கொள்வதுபோல் நகர வாழ்க்கை, கிராமத்துப் பிள்ளைகளுக்கும் இதேதான் கதி. நெஞ்செங்கும் நிம்மதியால் நிறைந்தது. கொஞ்சநேரம் மரத்தடி திண்ணையில் படுத்து கண்களை மூடினேன். ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ நீலா கை நீட்டினாள்..&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;•&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-7059806553968753583?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/7059806553968753583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=7059806553968753583' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7059806553968753583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7059806553968753583'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/06/blog-post.html' title='பம்பரம்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4469541029479718341</id><published>2011-05-31T17:57:00.000+05:30</published><updated>2011-06-01T10:56:03.682+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>மீசை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;• &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன்கோவில் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு&amp;nbsp; கொடுக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?” &lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?” &lt;br /&gt;&lt;br /&gt;“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குகூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தாதான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!&amp;nbsp; அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.&amp;nbsp; கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன். &lt;br /&gt;&lt;br /&gt;“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் கொமட்டிலேயே குத்தினான், அந்த முக்காமீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;••&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-4469541029479718341?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/4469541029479718341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=4469541029479718341' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/4469541029479718341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/4469541029479718341'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/05/blog-post_31.html' title='மீசை'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4155873108218669292</id><published>2011-05-06T19:24:00.000+05:30</published><updated>2011-05-06T19:24:07.951+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>ஒரு கூடும் சில குளவிகளும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் (வெள்ளை அணுக்கள் மட்டும்)  தேவைப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன்.  பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த (&lt;a href="http://www.friendstosupport.org/index.aspx" target="_blank"&gt;http://www.friendstosupport.&lt;wbr&gt;&lt;/wbr&gt;org/index.aspx&lt;/a&gt;) (&lt;a href="http://www.blooddonors.in/" target="_blank"&gt;http://www.blooddonors.in/&lt;/a&gt;)  இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி  எண்களை சேகரித்து, அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது. இதில் கிடைத்த 5  எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள். வாரம் ஒருமுறையாவது  எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது. உங்களுக்கு எந்தவகையான இரத்தம்  தேவைப்படுகிறது, நீங்கள் எந்த மாவட்டம், எந்த ஊர் போன்ற விபரங்களை  கொடுத்தவுடன் உடனடியாக அந்தப்&amp;nbsp; பகுதியிலுள்ள இரத்ததானம்&amp;nbsp; கொடுப்பவருடைய  முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம். பயனுள்ள தளம். மேலும் நீங்கள்  இரத்த தானம் செய்பவராகவோ, அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த  தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து  வைத்துவிடுங்கள். இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல்  இருங்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;•••&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ‘ஆணியை’  மருத்துவர் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது.  ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் ‘கிளிக்கு  ரெக்க முளைத்துடுத்து, ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து‘ கதையாகிவிட்டது. மொத்த  உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது. எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால்  ஆகிவிட்டேன். மருத்துவத்துறை முன்புபோல் இல்லை. புறங்கையில் ஒரு சுள்ளி  எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு.  எதற்கெடுத்தாலும் பிளேட், கம்பி, ஸ்க்ரூ, ஆப்(பு)ரேசன், எதோ டெம்ப்போ  லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள், நல்லவேளை வெல்டிங் மிஷின்  மட்டும் இல்லை. இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு, க.கா.தி, அல்லது  நட்சத்திரம். படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை  கரந்துவிடுகிறார்கள் மடியில்(இல்)லாவிட்டாலும், நம்மிடம் அல்லது காப்பீடு  மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட  இருக்கிறார்கள். எண்ணெய்க்கட்டு, புத்தூர்கட்டு, மாவுக்கட்டு,  அறுவைசிகிச்சை, கம்பிகள்...&lt;b&gt; ;&lt;/b&gt; கழனித்தண்ணி, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை,  SKM மாட்டுத்தீவனம், ஊசிகள்....&amp;nbsp; &lt;/div&gt;&lt;br /&gt;••••&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.  பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து எங்கே  பேப்பர், எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை.  கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில்  விழுந்தது. வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை. மறுநாள் அந்தத்  திருமணம். அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்மீதான  குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கம்போல  விளக்கமாறுதான்.&amp;nbsp; மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன்.  தெருவில் ஓடவிட்டு அடித்தார். யாரோ ஒரு புண்ணியவான் உதவ, அதை  எடுத்துகொடுத்துவிட்டேன். விசயம் அதுவல்ல. சமீபத்தில் யப்பாரின் மேஜையை  பீராய வேண்டிய கட்டாயம், கரையான். பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள்,  தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள், 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள்,  என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு, கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும்.  நிறைய பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன்.  பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம். எனது நண்பன் ஒருவனின்  பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது. அவனிடமே  காட்டியும் மகிழ்ந்தேன். இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற  பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா.&amp;nbsp;  சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக  அலைபேசிக்கு அனுப்பினான், ‘புடவைடா (sarry) மாப்ள. ட்யூ டூ ஸார்டேஜ் ஆப்  இன்விட்டேசன்‘ இன்ன கிழமை, இன்ன தேதி, இன்ன நேரம், இவளுக்கும் எனக்கும்  இன்னக்‘கொடுமை’ யென்று.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம்  செய்தேன். என் புத்தி. &lt;/div&gt;&lt;br /&gt;••••&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு  புத்தியில்லையெனக்கு. ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும்  சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது. படித்து ஒருமாதமாகிறது.  இன்றளவும் அசைபோடுகிறேன். இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம்  தேடிதேடிச்சென்று படிக்கிறேன். சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள்  படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர  நினைவுகள். ஒரு அற்புதமான படைப்பு. கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும்  ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில்.  பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன், கூடவே சபலம், ஆற்றாமை,  குற்றவுணர்வுகள். ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து  உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார். ஒரு இடத்தில்  ‘மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான், நான் சாப்பிட  ஆரம்பித்தேன்’ என்றிருப்பார், அந்த கணம் மனதைப் பிசையும். ‘சிதம்பர ஸ்மரண’  என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு  தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி. ஷைலஜா. எனக்காக இதை  பரிந்துரைத்தவர் திருமதி. பத்மஜா. இருவருக்கும் என்றென்றும் நன்றிகள்.&amp;nbsp; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;••&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-4155873108218669292?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/4155873108218669292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=4155873108218669292' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/4155873108218669292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/4155873108218669292'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/05/blog-post.html' title='ஒரு கூடும் சில குளவிகளும்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-8236195414050963</id><published>2011-04-26T18:25:00.002+05:30</published><updated>2011-04-26T18:28:37.480+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>யரலவழள</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;* &lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பினுள் தூங்கும் அந்தப் பூனைக்கு&lt;br /&gt;தெரிந்திருக்க நியாயமில்லை&lt;br /&gt;எதுவுமில்லா வீட்டில் &lt;br /&gt;எலியும் இருக்காதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;•••&lt;br /&gt;&lt;br /&gt;யாசித்துக் கிடைக்காத &lt;br /&gt;பிச்சையை வீதியெங்கும் &lt;br /&gt;வீசிச்செல்கிறான் பிச்சைக்காரன்&lt;br /&gt;சாபமாக....&lt;br /&gt;&lt;br /&gt;•••&lt;br /&gt;&lt;br /&gt;பசியில் இறந்தவன் &lt;br /&gt;உயிர்நாற்றம் குப்பையில்&amp;nbsp; &lt;br /&gt;சிதறிக்கிடக்கிறது&lt;br /&gt;தலைவாழை இலையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;•••&lt;br /&gt;&lt;br /&gt;பகலில் தூங்கி&amp;nbsp; &lt;br /&gt;இரவில் எழுகிறது &lt;br /&gt;காய்ந்த வயிற்று&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;வேசியின் சேலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-8236195414050963?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/8236195414050963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=8236195414050963' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/8236195414050963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/8236195414050963'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/04/blog-post.html' title='யரலவழள'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5142879340087490202</id><published>2011-03-30T17:03:00.004+05:30</published><updated>2011-04-20T20:01:25.494+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>தஞ்சாவூர் சிறுக்கி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;90, 91 வாக்கில் என்று நினைக்கிறேன், 2 வகுப்பு. ஒரு மூன்று அடி சுவரு. செந்தாமரை டீச்சர் முன்பு பயில்வான் பக்கிரிசாமியாக காட்டிக்கொள்ள துள்ளிக் குதித்து விளையாடியதில் விழுந்து இடது கை முட்டியில் செங்கல் மோதி மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குமார் வாத்தியார்தான் ஒரு அடி ஸ்கேல் மூன்றை இரண்டு இரண்டாக உடைத்து சணல்போட்டு கையில் இறுக கட்டி வீட்டிற்கு அனுப்பினார். அம்மா அழுதாள், ‘க’னா பய மொவன், சும்மாயிருக்கவேமாட்டான்’ அப்பா அடிக்காமல் திட்டினார்.&amp;nbsp; மாயவரம் சுப்பையா டாக்டர் அப்போது பிரபலம். மனிதர் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சார்மினார் சிகரெட் வீதம் பற்றவைத்தப்படியேதான் வைத்தியம் பார்ப்பார். ஒரு மாதம் கைக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து சுபமங்களம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;மீண்டும் 2001-2002 கல்வியாண்டு. ஸ்கிப்பிங் கையிற்றை இருவர் பிடித்துக்கொள்ள உயரம் தாண்டுதலில் கோலோச்சிக்காட்டியதில் அதே இடதுகை முட்டியில் ஒரு எலும்புத்துண்டு விவாகரத்துக்கு விரும்பிவிட்டது. விடமுடியுமா?, மீண்டும் சுப்பையா, சார்மினார் சிகரெட் மருத்துவம், விவாகரத்து தள்ளுபடியாகி எலும்புத்தம்பதிகள் ஒன்றுசேர்ந்தனர். இந்தமுறை வீட்டிற்கு தெரியாமல் கட்டுப்போட்டுவிட்டு கலைமகள் ஸ்கூல் ஸ்டாப்பிங்கில் இறங்கி வீட்டிற்கு செல்லும்போது அம்மா முந்தானையில் மூக்கை சிந்தியபடி எதிரே வந்துவிட்டாள். ‘ஏன் தம்பி ஒனக்கு?’ அழுதாள். நண்பன் தேற்றினான். ஒரு மாதம் கல்லூரிக்கல்விக்கு விடுப்பு கொடுத்துவிட்டு காதல் கல்வியைத் தொடங்கினேன். உமா என்னை முழுதும் அடைத்துக்கொண்டது அந்தக்காலகட்டம்தான். ஸ்கிப்பிங் கயிறை இறுகப்பிடித்து என் கையை உடைத்த அதே நண்பனின் தங்கை, பழிக்குப்பழி. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் என் வீரவரலாற்றுக் கல்வெட்டுக்களின் இண்டு இடுக்குகளில் காணப்படும் இரண்டு முத்துக்கள்தான். எப்போதுமே எனக்கு எண்ணிக்கையில் மூன்று பிடிக்கும். ‘பொதுவாழ்விலும்’ முதலில் சுஜா, பிறகு பவானி மூன்றாவதாக காதல் ரசம் கரைத்தூட்டிய உமா, கடைசியாயும்கூட. நெருங்கிய நண்பர்கள்கூட மூன்றுபேர்தான். உருப்படாத கோவிலில் உண்டக்கட்டி வாங்கித்தின்ன கூட்டம் நாங்கள்தான். இன்றும் எவனும் விளங்கவில்லை என்னையும் சேர்த்து. இப்போது 2011, பொதுவாகவே புஜபல பராக்கிரமசாலியான எனக்கு மீண்டும் அந்த எலும்புத்தேவன் கோவில் மணியோசை வலதுகை சுண்டுவிரலில் கேட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிணத்தின் கால்கட்டைவிரல்களின் கட்டை அவிழ்த்துவிட்டு மூக்கில் உள்ள பஞ்சிகளையும் நீக்கிவிட்டு ஒருநாள் உயிர்க்கொடுத்தால் அந்த பிணம் என்ன செய்யும்? என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகள் அப்படிதான் 6.30க்கு விடிகின்றன. யாருக்கு எப்படியோ, எனக்கு விளையாட்டு புத்திதான் மோகித்திருந்தது. மைதானம், மட்டை, பந்து, எதிரணியில் ஒன்பது ஜாம்பவான்கள். ஆளும் அணியில் ஒன்பது. ஒரு(ரே) பந்து சுண்டுவிரலை நக்கியதில் உள்ளெலும்பில் மணியோசை. உடைந்துவிட்டது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை நண்பர்களைத்தவிர வீட்டிற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, மூக்கு சிந்தவும், ‘ஏந் தம்பி, ஏந் தம்பி ஒனக்கு?’ என்று ராகங்களை இசைக்கவும் அம்மா, அப்பாவுக்கோ, அக்காளுக்கோகூட தெரியாது. வழக்கம்போல இரவு 8 மணிக்கு அழைத்து ஏம்மா? நல்லாருக்கியா? சாப்டியா? போதும். என் நலத்தையும் அறிந்துகொள்வாள். பத்துநாளில் ஊருக்கு போகவேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டை எனக்கு. அப்போது இதை எப்படி தாங்கிக்கொள்வாள். ம்ம்ம்.... அது கிடக்கு கழுதை, இந்த அம்மா எப்போதும் இப்படிதான், அப்பாவைப்போல உள்ளுக்குள் பரிந்துகொள்வதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-dw4DqhfqDNw/TZMS4hcufKI/AAAAAAAAA94/HmJHnluNvWU/s1600/tut_filtered.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-dw4DqhfqDNw/TZMS4hcufKI/AAAAAAAAA94/HmJHnluNvWU/s400/tut_filtered.jpg" width="280" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஒரு அறுவை சிகிச்சை. கோணி ஊசி அளவு ஒரு கம்பியை உள்ளே செருகியிருக்கிறார் டாக்டர்.இன்னொசென்ட் (பெயரில் மட்டும்) நல்ல விபரம். ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? கேட்டுவிட்டுதான் இரண்டுநாள் படுக்கவைத்தார்.&amp;nbsp; நாலைந்து செவிலிப்பெண்கள். ஒருத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உமாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள். புருவத்து முடிகளை ட்ரிம் செய்து, நெற்றியில் சிறிய கருப்புநிற ஒட்டுற பொட்டு, அதே அளவு, நிற மூக்குத்தி. உமாவைவிட நல்ல நிறம். நன்றாக சிரித்து பேசவும் பழகவும் செய்தாள், எளிமை காட்டினாள். என் காட்டில் பெய்த இந்த மழையில் சிலீரென்று அந்த இருதய நரம்பு துருத்திக்கொண்டது. கட்டணம், ரசீதுகள் மற்றும் இத்யாதிகளை முடித்துக்கொண்டு எல்லாப்பெண்களிடமும் விடைபெற்றுக்கொண்டேன். ‘அடுத்தமொற ஒங்களுக்கு வாயில அடிபடணும்’ ஒருத்தி விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னாள். வாயை மூடிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘அண்ணே நாலுநாள் கழிச்சி வாங்க, கட்டுப்போடணும்’, &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘எவடி அவ?’ திரும்பிப்பார்த்தேன், உமாவை உரித்துவைத்த அந்த தஞ்சாவூர் சிறுக்கிதான், பாதகி, கிராதகி. கையிலும் வலித்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;•&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-5142879340087490202?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/5142879340087490202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=5142879340087490202' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5142879340087490202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5142879340087490202'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/03/blog-post_30.html' title='தஞ்சாவூர் சிறுக்கி'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-dw4DqhfqDNw/TZMS4hcufKI/AAAAAAAAA94/HmJHnluNvWU/s72-c/tut_filtered.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5249964953980153913</id><published>2011-03-10T18:20:00.003+05:30</published><updated>2011-03-10T19:40:06.553+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இவளும் பெண்தான்..</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவள் அப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாள். பள்ளிக்கூடம் திறப்பதற்கு ஒன்றரை மாதகால அவகாசம் இருந்தது. பத்தாம் வகுப்பு செல்வதற்கான கனவுடனிருந்தாள். தெருவில் வரும் கிளி ஜோசியன் அவளுக்கான வாழ்க்கை சீட்டை கையில் வைத்துக்கொண்டு கூவி வருகிறான். அவளின் பெற்றோர்கள் அவனை அழைத்து ஆரூடம் பார்க்கின்றனர். தெருவில் சில்லிக்கோடோ என்னவோ விளையாடிக்கொண்டிருந்தவள் ஆர்வத்துடன் கிளிக்காகவோ, ஜோசியத்துக்காகவோ அந்த இடத்தில் அமர்கிறாள். விளையாட்டுப்போக்கில் அவளுக்கும் 2 ரூபாய் மொய்வைத்தப் பிறகு&amp;nbsp; ராஜாத்தியென்றோ பாப்பாத்தியென்றோ அழைக்கப்படும் அந்த பச்சைக்கிளி ஒரு சீட்டை எடுத்துப்போடுகிறது. பிரித்துப்பார்த்த ஜோசியக்காரர் பலவிசயங்களை சொல்லிவிட்டு இவளுக்கு இந்நேரம் வரம் பார்த்திருக்கவேண்டும் இல்லையென்றால் இன்னும் சொற்ப நாட்களில் வரம் வந்துவிடும், கிழக்கிலிருந்துதான் வருவான். சொந்தக்காரன், சீமைத்தண்ணி குடிப்பவனாக இருப்பான் போன்றனவும் இன்னும் சிலவும் வாயில் வசம்பு தேய்த்ததுபோல் சொல்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘இவள் படிப்பில் கெட்டிக்காரி’ என்று அந்த ஜோசியன் சொன்னதை இரவு முழுக்க கனவாக காண்கிறாள். பெற்றவர்கள் வரப்போகும் வரனை அவனோ, இவனோ, எவனோ என்கிற யூகத்தில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சொல்லிவைத்தார்போல ஒரு ராஜன் (வயது 28) அந்த ராணிக்காக துபாயிலிருந்து பொத்துக்கொண்டு திருவெண்காட்டில் குதிக்கிறான். அவன் ராணிக்கு மாமன் முறை, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட அல்லது கேடுகெட்ட. துபாயில் கதாநாயகன் சித்தாளோ, கொத்தனாரோ என்னயெழவோ. மார்பில் சங்கிலியும் கையில் மோதிரமும், ஒரு மைனர் குஞ்சு போல மூர்த்திக்கடை மிக்ஸரும்,&amp;nbsp; அல்வாவும் வாங்கிக்கொண்டு அக்கா வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு நம் ராணி அக்கா மகள் (முறையில்). இவள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். பேச்சிப்போக்கில் தனக்கு பெண் பார்த்துக்கொண்டிருப்பதாக அக்கா, மாமாவிடத்தில் சொல்லிவைக்கிறான். விருந்து கருமங்கள் முடிந்தது. நாயகன் நாயகியை ஓரக்கண்ணால் ஒரு லுக், அவள் அந்த மிக்ஸருக்காக ஒரு லுக், அவ்வளவே.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கோ தட்டிய பொறி அவள் பெற்றோர்களுக்குள் பற்றிக்கொள்கிறது. சரி அவர்களாக கேட்டால் நாமும் பேசலாம் என்று முடிவாகிறது. அந்த சனியனும் அடுத்தவாரமே நடந்துவிட்டது. மூன்றாம் நபர் வழியாக ராணியை பெண் கேட்டு தூது வருகிறது. இவளின் குடும்பத்திற்குள் குதூகளம். அக்கம்பக்கத்திலுள்ள மொத்தம் 10 டூ 15 குடும்பங்களும் இவர்களுக்கு சொந்தம்தான். அனைவருக்கும் இந்த சம்பந்தம் பிடித்தாலும், ‘சின்னவயசுல இவளுக்கு எதுக்கு இப்ப கல்யாணம்?, நாலு வருஷம் தள்ளி பண்ணா ஆவாதா?’ என்று சொல்லிப்பார்க்கிறார்கள். ம்கூம். காதில்லாதவன் காதில் ஊதியென்ன, செவிட்டில் அப்பிதான் என்ன புண்ணியம்?. மறுபடியும் சிங்கானோடை ஜோதிடனிடம் ஜோடிப்பொருத்தம் பார்க்கிறார்கள். ஜோடிப்பொருத்தத்தில் ஒன்பதோ, எட்டோ பொருந்தியிருக்கவேண்டும். முடிவாகிவிட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நகை, நட்டு, சீர்வரிசை, அப்போதே இருபத்தைந்தாயிரம் செலவு செய்து கட்டில், பீரோ கூடவே ஒரு ஹெர்குலஸ் சைக்கிளோ, டி.வி.எஸ் வண்டியோ எனக்கு மறந்துவிட்டது. ஜாம் ஜாம் திருமணம் திருவெண்காடு அந்த பிரசித்திப்பெற்ற கோவிலில். ராணியின் கூடப்பிறந்தவர்கள் இருவர், ஒரு அண்ணன், ஒரு தம்பி. அந்த தம்பியும் நானும் பால்ய நண்பர்கள். பக்கத்துவீடுதான். ஜாதியில் வேற்றுமையிருந்தாலும், பெரியம்மா, பெரியப்பா உறவுப்பிணைப்புடையது எங்களின் குடும்பங்கள். நானும் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்கும் ஒன்றுமறியாத வயது. எல்லாம் முடிந்தது. இது நடவாமலிருந்தால் இந்நேரம் அவளுக்கு பத்தாம் வகுப்பு&amp;nbsp; ஆரம்பித்திருக்கும். ஆனால்..?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;6 மாதங்கள் ஓடிவிட்டது. அனைவருக்கும் சந்தோஷம், சென்னை ஏர்போர்டில் மாமனுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு சென்ற காரிலேயே திருவெண்காட்டிற்கு திரும்புகிறார்கள் ராணி. ஆறுமாத சந்தோஷ வாழ்க்கை இந்த பிரிவில் அவளுக்கு ஆற்றமுடியா சங்கடத்தைக்கொடுக்கிறது. பிறந்த வீட்டிற்கு 3 மாதம் வந்து தங்கிக்கொள்கிறாள். அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த மூன்றுமாத காலமும் அவளின் நடத்தை யை அசிங்கப்படுத்தி இவளின் குடும்ப எதிரிகள், அந்த மாமியாருக்கு வாராவாரம் கடிதம் எழுதுகிறார்கள். அப்படி செய்வது மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்தான், அவளுடன் இன்னும் இரண்டு பெண்டுகள். மாமியார் வீட்டில் புகைச்சல் அதிகமாகிறது. அவர்களும் நம்புகிறார்கள். ‘அவ இங்க இருக்கும்போதே அப்டித்தான் இருந்தா, அப்பன் வீட்லன்னா கேக்கவாவேணும்’ இது மாமியார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்நிலையில் 9 வது மாதம் வளையல் காப்பு (சீமந்தம்) முடிகிறது. மனதில் குமைச்சலுடன் மாமியாளும் நாயகன் வீட்டு உறவினர்களும் கலந்துகொள்கிறார்கள். பத்தாவது மாதம் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. மூன்றுமாதம் கழித்து சாஸ்த்திரத்திற்கு திருவெண்காட்டுக்கு அழைத்து செல்கிறார் மாமியார். மீண்டும் ஆறுமாதங்கள் சண்டை சச்சரவு, மாமியார் கொடுமை நடத்தையை குத்திக்காட்டி, பச்சையான, கொச்சையான வார்த்தைகள். பச்ச உடம்புக்காரி ஓரளவிற்கு மேல் தாங்கமுடியாமல் அந்த ஒரு வயதை அடையப்போகும் தன் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு வருகிறாள், கணவனும் சேர்ந்து கைவிட்ட நிலையில். அடுத்த ஒரு வருடங்கள் சமாதானப்பேச்சு, இரண்டு மாதம் அங்கே, இரண்டு மாதம் இங்கே. வேலைக்காகவில்லை. அதே கொடுமை. நிரந்தரமாக பிறந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பித்தளை சொம்பில் ஜோடித்த கரகத்தை எந்த துணையுமின்றி தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு அரங்கம் அதிர ஆடிய அவளேதான் இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாய். அனாதரவான நிலையில். பெற்றவர்கள் தலையில் போட்ட இந்த பாறாங்கல் அவளை தற்கொலைக்குக்கூட தூண்டியது. காப்பாற்றிவிட்டார்கள். ஊர், தெருமக்களின் இழிச்சொற்கள், வாழாவெட்டி என்ற அந்த பட்டம், எதிரி குடும்பத்தாரின் ஏளனச்சிரிப்பு, எல்லாவற்றிற்கும் மேல் இந்த நிர்கதிக்கு துணைநின்ற கணவன், மாமியார் மயிரை அறுக்கவேண்டும் இவை அனைத்தும் சாத்தியப்பட அவள்முன் எதிர்காலம் கனிந்துகிடக்கிறது. ஆனது ஆயிற்று அடுத்தது விவாகரத்து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. எந்த சட்டப் புடுங்கிகளாலும் அந்த 18 வயது நிரம்பாத அந்த அபலைக்கு நீதி கொடுக்கமுடியாத சூழ்நிலை. சீர்வரிசை நகை நட்டில் பாதிதான் திரும்ப வருகிறது. வேறு இம்மியளவுக்கூட அசைக்கமுடிவில்லை. துபாய் துரை ஃபாரின் கிளம்புவதற்கு முன் இன்னொரு இடத்தில் பெண் பார்த்துகொண்டிருப்பதாக கேள்வி. ராணியின் அண்ணணும் தம்பியும் அவனை அடித்து வெளுக்கிறார்கள். மறுபடியும் வழக்கில் சிக்கல். தீர்ந்தபாடில்லை. அவளின் நிலை பார்க்கும் நல்லுள்ளங்களுக்கு பரிதாபம், எதிராளிக்கு இளக்காரம். கூனிக்குருகி வீட்டின் மூலையில் முடங்கியே கிடக்கிறாள். செய்த தவறை உணர்ந்தும் செய்வதறியாது அப்படியே காலத்தை ஓட்ட முனையும் பெற்றோர்கள். எங்கோ ஒரு வெளிச்சம் தெரிந்தது அவளுக்கு. அது....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;3 வயது நிரம்பிய தன் மகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டாள். தன் படிப்பையும் தொடர்ந்தாள். பத்தாவது, பனிரெண்டாவது... முடிந்தது. அடுத்து ஒரு டிகிரி படிக்கவேண்டும். அவளின் அனைத்து வழிகளுக்கும் உதவ பெற்றவர்கள் தயாராகவே இருந்தனர். டிகிரியும் முடித்தாயிற்று. பிறகு ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டும். ஏதோவொரு வெறி முளைத்துக்கொண்டேயிருந்தது அவளுள். இடையில் துபாய் துரை வரும்போதெல்லாம் ராணியின்&amp;nbsp; அண்ணன் தம்பிகளிடம் உதைவாங்கி கொண்டுதானிருந்தான். ஐ.ஏ.எஸ் ரெண்டாம்கட்ட தேர்வில் தோல்வி. ஓரளவிற்கு மேல் அவளாலும் முடியவில்லை. அந்த நேரத்தில் நமது ஊரின் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் பணி ஒருவருடத்தில் காலியாகும்போல் தெரிந்தது. பி.பி.டி.கோர்ஸ் சேர சிதம்பரம் செல்கிறாள். வெற்றிகரமாக முடிந்தது. வேலை கிடைக்கவேண்டிய சூழ்நிலை கைகூடியது. அண்ணணுக்காக அதை விட்டுக்கொடுக்கவேண்டிய நிலையும் வந்தது. அப்படியே செய்துவிட்டாள். வேறு என்ன செய்யலாம்....??&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்நாடு காவல்துறையின் எஸ்.ஐ. பணி தேர்விற்காக விண்ணப்பித்திருந்தாள். அதற்காக அனைத்துவிதத்திலும் தன்னை தயார்படுத்திக்கொண்டாள். எல்லாம் சுபமாக முடிந்தது. சில லகரங்களில் வேலையும் கிடைத்தது. ஒரு புதியதோர் வாழ்க்கை பிறந்தது. ட்ரெய்னிங் இத்யாதிகள் முடிந்து சீர்காழியில் ட்ரெய்னிங் எஸ்.ஜ. அங்கேயே கொஞ்சகாலம் சகவாசம். பெற்றவர்கள் மறுமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள், அவளும். இப்போது எதிராளியாக இருந்த குடும்பங்களும் நெருங்கிவிட்டார்கள். அனைவரும் ஒற்றுமை.&amp;nbsp; இந்த நேரத்தில் அந்த செய்தி உச்சந்தலையில் இடியை இறக்குகிறது. அவள் மகள் பருவமெய்திவிட்டாள். அனைவரும் நொடிந்துபோனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கையை பிசைந்துகொண்டிருந்த பெற்றோர்கள் ஒரு வருடம் பொறுத்திருந்துவிட்டு நம் ராணிக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராணியின் விருப்பப்படி அவளே தேர்ந்தெடுத்த அல்லது காதலித்த வரனுக்கு அவளை கட்டிக்கொடுக்கிறார்கள். எல்லாம் சுபம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது லட்சத்து சொச்சம் டெம்ப்ளேட் &lt;span class="z19Dle" id="col-z13xgzlg3o3hzn1rp04cjfzgsvqagffpwz40k"&gt;&lt;span class="zo"&gt;கதைகளில் துவைத்து காயப்போட்ட&amp;nbsp; சம்பவமாக &lt;/span&gt;&lt;/span&gt;இருக்கலாம். ஆனால் இதுவும் உண்மை. இப்போது ராணி நாகை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர். அந்த துபாய் துரை இன்னொரு திருமணம் முடித்துவிட்டு எங்கோயிருக்கிறான். இந்நிலையில் அவனை ஸ்டேஸனில் வைத்து மானியிலேயே உதைக்க அவளால் முடியும். ஆனால் அவள் அப்படியில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-5249964953980153913?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/5249964953980153913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=5249964953980153913' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5249964953980153913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5249964953980153913'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/03/blog-post.html' title='இவளும் பெண்தான்..'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5848590224508220011</id><published>2011-02-25T18:19:00.002+05:30</published><updated>2011-02-26T11:04:28.127+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நடுநிசி நாய்கள், பயணம் அல்லது இரண்டுமில்லை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று அம்மா சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;•••••••••&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;வழக்கமாக 8 மணிக்கே எல்லாவேலையும் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். இன்று கொஞ்சம் நேரமானது. அடுத்த பஸ் பத்தரை மணிக்குத்தான். ‘டி.எல்’லோ, ‘எம்.ஓ.எச்’சோதான் வரும். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங் கிடையாது. ஆக சாதாரணமாக எல்லா பஸ்ஸூம் அங்கே நிற்காது. ராத்திரி நேரமென்றால் அபரிதமாக கருணையடிப்படையில் நிப்பாட்டுவார்கள். எனது சைக்கிளை அங்கே பட்டாபி நைனா வீட்டில்தான் போட்டிருந்தேன். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங்கில் இறங்கி உள்ளே கீழ்மாத்தூருக்கு செல்ல ஆறேழு மைல். அங்கேதான் எனது வீடு. கொஞ்சம் பொழுது சாய்ந்தாலே இந்த இடைப்பட்ட தூரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். மீறி இரவு நேரத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் செம்பனார்கோயில் கடைத்தெருக்கு சென்று மளிகைச்சாமானும், காய்கறிகளும் வாங்கிவிட்டு திரும்பச் செல்பவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் மண்டியில் நெல்லை போட்டுவிட்டு (மாட்டு)வண்டியில் திரும்புபவர்களாக இருப்பார்கள். தினமும் எனக்கு இப்படித்தான்&amp;nbsp; வழித்துணை கிடைக்கும். ஆனால்... &lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸை விட்டு இறங்கியதும் பட்டாபி நைனா வீட்டு கதவை தட்டவேண்டியதாயிற்று. மணி பத்தே முக்கால், படுத்திருப்பார்கள். கரண்ட் வேறு இல்லை. டார்ச் லைட்டை அடித்துகொண்டே கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“யாரு??” &lt;br /&gt;&lt;br /&gt;“பாலாஜி”&lt;br /&gt;&lt;br /&gt;கயத்துக்கட்டிலில் சமுக்காலத்தை விரித்து தலையணை வைத்துக்கொண்டு வராந்தா கேட் அருகே தூங்குவதுதான் நைனாவின் பழக்கம். இன்றும் அப்படித்தான். தட்டியவுடன் எழுந்துவிட்டார். “வாய்யா.. என்னா இவ்ளோ நேரம்??” &lt;br /&gt;&lt;br /&gt;“கட பூட்ட லேட்டாயிடுச்சு நைனா” நைனா என்றால் அப்பா என்று பொருள்படும். இங்கே எங்கள் பகுதியில் நைனா என்றழைக்கப்படுபவர்கள் அப்பாவாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பிரியம் மற்றும் அன்போ, பாசமோ அல்லது பெரும்பாலானோர் அப்படி அழைத்தால்.... அதுபோதும்.&lt;br /&gt;&lt;br /&gt;“சேரி.. இருட்டாவேற கெடக்கே, தனியாவாப்போற, இங்கயே படுத்திட்டு காலலேக்கி போயேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல நாங்கிளம்பணும். காலைல மாமா கல்யாணமிருக்கு, நேரமா போனூம்” &lt;br /&gt;&lt;br /&gt;“சேரி பாத்துப்போ.. சைக்கிள்ல லைட்டு இருக்குல்ல.”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல”&lt;br /&gt;&lt;br /&gt;“பின்ன.. பேட்ரி லைட்டுன்னா வேணுமா? ரொம்ப இருட்டால்லருக்கு” &lt;br /&gt;&lt;br /&gt;“வாண்டா, நாங் போயிக்கிறேன்.” &lt;br /&gt;&lt;br /&gt;“பாத்துப்போப்பா” என்று விடைகொடுத்த நைனாவிடம் என்மீதான அக்கரை கொஞ்சம் தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பினேன். கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் நான் கடையைப்பூட்டும்போதே கரண்ட் இல்லை. இங்கிருந்து 20, 25 கி.மீ. சுற்றளவுக்கு பேச்சாவடி மின்சார சரகம்தான். அதனால் எங்குமே கரண்ட் இருக்காது. பாவம் தமிழகத்தை ஆள்பவர்கள், என்னதான் செய்வார்கள் லச்சத்து சொச்சம் கடனை வைத்துக்கொண்டு, கஷ்ட ஜீவனமல்லவா!! எனது முடிவு தப்போவென்று தோன்றியது. 11 மணி. ஆள் அரவமற்ற நேரம், ஒரு மினிபஸ் செல்லக்கூடிய அளவிற்கான சிகப்பு கப்பி சாலைதான். ஆனால் மினி பஸ் இந்த மார்க்கத்தில் செல்வதில்லை. வசூல் சரியாக இல்லையென்பது காரணமாக இருக்கலாம். பின்ன? ஒன்றிரண்டுவாட்டித் தவிர மற்ற நேரமெல்லாம் காத்துவாங்கினால் யார்தான் இந்த ஊருக்கு பஸ் விடுவார்கள். வழுக்கைத் தலையிலிருக்கும் ஒன்றிரண்டு முடிகளைப்போல ஆங்காங்கே தெரியும் தூங்குமூஞ்சி மரங்களும் பனைமரமும். கூடவே அந்த ஒற்றைப் பனைமரமும். ஒற்றைப்பனைமரம்.. கொஞ்சம் வியர்க்கும்போலிருந்தது. வேகமாக சைக்கிள் பெடலை அழுத்தத்தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்... இப்போதுதான் அம்மா சொல்லும் சிலக்கதைகள் எனது ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவுக்கு ஒருமாதிரியான பயங்காட்டும் கதைகள் அத்துப்படி. அதுவும் இந்த பேய் கதையென்றால் என் இரவுத்தூக்கத்தை விழிபிதுங்க வைக்குமளவுக்கு தத்ரூபமாகச் சொல்லுவாள், உண்மைப்போலவே. சொல்லமுடியாது, உண்மையாகவும் இருக்கலாம். “ஒத்தப்பன மரத்துக்கிட்ட எங்க சின்ன நைனா மாட்டு வண்டியில வரும்போது திடீர்னு மாடுல்லாம் மெரண்டுபோயி மூச்சுபோச்சில்லாம நிக்குமாம். மாட்டுவண்டிய வுட்டு ஆளு எறங்கினா அவ்ளோத்தான். ஆள அடிச்சிடும். அப்பறம் ஒருவாரத்துக்கு காய்ச்சல் வந்து படுத்தப் படுக்கையாப்போட்டிடும். கொஞ்சநேரம் அப்டியே வண்டியிலேயே உட்காந்து கொலதெய்வத்த வேண்டினாப்போதும், மெரண்ட மாடு சரியாயி கௌம்பிடும்” இதுதான் அம்மா சொல்லும் நான்கைந்து கதைகளின் அடிநாதமாக இருக்கும். பெரும்பாலும் இப்படித்தான் சொல்லுவாள். மேலும் “மஞ்ச வாய்க்காங்கரையோட ராத்திரில வரும்போது&amp;nbsp; மல்லிப்பூ வாசன அடிக்கும். கையில இரும்பு, கரித்துண்டோட வரணும், சாமிய வேண்டிட்டே வரணும்.. இல்லன்னா மோகினிப் புடிச்சிடும். போனவாரம் ரெங்கபாஷ்யத்து மொவங்கூட மாட்டி ஒருவாரம் எந்திரிக்க முடியாம கெடந்தான். அப்பறம் இன்னொன்று “அந்த பனைமரத்துப்பக்கம் வானொசர (வான் உயர) ஆம்பிளை வெள்ள வேட்டி சட்டையோட நெடுநெடுன்னு அரிவாள் வைச்சிகிட்டு நின்று பார்த்ததாகவும் ஒரு கதை அம்மாவிடம் இருந்தது. உசரமென்றால் அந்தப் பனைமரத்து அளவுக்காம். இதையெல்லாம் கேட்கும் முன்னர்கூட நான் தனியாக அந்த வழிகளில் போனதுமில்லை, வந்ததுல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாகவே நானொரு பயந்தாங்கொள்ளி. ராத்திரியில் ஒண்ணுக்கு இருக்க போகணும் என்றாலே அம்மாவை எந்நேரமாகயிருந்தாலும் எழுப்பி அழைத்துச்செல்வேன். ஓரளவுக்கு மீசையரும்புகிற வயசு வந்தப்பிறகு இதைக் குறைத்துக்கொண்டேன். ஆனால் தெருவில் ஏதேனும் சாவு என்றால் அப்பாவை எழுப்பிக்கொண்டு போவேன். இப்போது ஒருவழியாக சட்ராஸை கடந்துவிட்டேன். இருள் சாலையை முழுதும் அடைத்திருந்தது. அமாவாசைக் கழித்த மூன்றாம்நாள். சிகப்பு கப்பி சாலையென்பதால் வழி அனுமானிக்ககூடிய அளவுக்கு தெரிந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தேன். ஒற்றைப்பனை மரமும் ஒரு திருப்பமும்தான் பாக்கி. அதை கடந்துவிட்டால் அடுத்தது ராமானுஜம் நைனா வீடு வந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று சைக்கிள் ஒரு குழியில் இறங்கி ஏறியது. கிட்டத்தட்ட ஃபோர்க் உடைந்துவிடக்கூடிய நிலைமை. நல்லவேளை அதுபோல் ஆகவில்லை. நாய்கள் அந்த அடர்ந்த வயல்வெளில் எங்கோ ஊலையிட்டது, நரிகள்போல். இதுபோல் நாய்கள் ஊலையிட்டால் அது கெட்டதுக்கான அறிகுறி என்பார்கள். மறுநாளே பலித்துவிடும். அய்யோ.. நான், என்.. ஆ... நான் பயந்த்துபோலவே......ம்... அரைபர்லாங் தூரம், அந்த ஒத்தைப்பனைமரத்து அருகில் அல்லது அந்த திருப்பத்தருகில், முன்பு அம்மா சொன்னாளே அதேபோன்றதொரு வானொசர உருவம். வெள்ளைவேட்டி சட்டை.. அதேதான்.. ஆனால் கையில் ஒன்றுமில்லை. விதுக்கென்று ஆகி உடலில் சட்டை ஒட்டிக்கொண்டது. சிலிப்பர் செப்பல் வியர்வையில் நனைந்துவிட்டது. அவ்வளவு வியர்வை. கைகாலெல்லாம் வெடவெடக்கத்தொடங்கியது. என் கையிலிருந்த ஒரே இரும்பு ஆயுதம் என் சைக்கிள் மட்டும்தான். “இரும்புச் சாமான் கைலருந்தா அது நம்மள நெருங்காது” என்று அம்மாதான் சொல்லியிருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பாதி வந்தப்பிறகு திரும்பிப்போக முடியாது. செல்போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்தேன். நடக்கும் பாதைக்கு வெளிச்சம் காட்டியது. யாரையாச்சும் போன் பண்ணி கூப்பிடலாமென்றால் டவரும் இல்லை. கைகள் நடுங்கியதை நன்றாக உணர்ந்தேன். எது நடந்தாலும் நடக்கட்டுமென்ற வரட்டு தைரியமிருந்தது, கூடவே சைக்கிளும். விருவிருவென்று சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே சென்றேன். ஆனால் ஒன்று உறுதியாகத்தெரிந்தது அந்த உருவத்தின் உயரம் 20, 25 அடியிருக்கலாம். அம்மா சொல்வதுபோல் பனைமர உயரமெல்லாம் கிடையாது. தலையில் முடியில்லாததுபோல்தான் தெரிந்தது. இரவு நேரமென்பதால் முகமும்கூட இருளாகத்தான் தெரிந்தது. மீசையும் தெரியவில்லை. வேட்டி காற்றில் ஆடுவதுபோலவும் தெரிந்தது.&amp;nbsp; என் வியர்வை அடங்வில்லை. தன்னிச்சையாகவே நடந்துகொண்டிருந்தேன். பெத்தாரண்ண காப்பாத்து, பெத்தாரண்ண காப்பாத்து.. என்று குலதெய்வத்தை வேண்டி முனுமுனுத்துக் கொண்டேயிருந்தது வாய். உள்ளங்கைகூட வியர்த்திருந்தது. இதோ நெருங்கிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 30 அடித்தூரம், 20 அடித்தூ.....10 அடி.... அடக்கடவுளே... ச்ச்ச்சீ...தூ...தூ... செல்போன் டார்ச் லைட்டை அடித்து அது அதுதானா என்று உறுதிசெய்துகொண்டேன். நெஞ்சில் படபடப்பு மட்டும் அடங்கவில்லை. நாம் பார்த்தது உண்மையில் இதுதானா? ஆமாம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். அதன் காலடிக்கு கீழே இப்படித்தான் இருந்தது “இலவச தொலைக்காட்சி வழங்க வருகைத்தரும் எங்கள் ஏழைகளின் ஒளியே, வருக!! வருக!! இடம்: கீழ்மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம்...” மின்துறை அமைச்சருக்கான வரவேற்பு பதாகை. நெஞ்சின் படபடப்பு கொஞ்சம்போல் ஓய்ந்தது. கால்தான் ஓய்ச்சலாக இருந்தது. சைக்கிளை மிதிக்கமுடியாமல் மிதித்துச்சென்றேன். இந்த அம்மாவேறு வந்ததும் வராததுமாக “ஏன் இவ்ளோ லேட்டு, போன் பண்ணி சொல்லவேண்டியதுதான..”.... ஆச்சா ஊச்சாவென்று கத்தினாள்....” எனக்கோ அடக்கமுடியாத கோபமும், படபடப்பும். எல்லாம்சேர்த்து அம்மாவைப் பொறிந்து தள்ளிவிட்டேன், நடந்ததையும் சொல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குதான் அம்மா “‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-5848590224508220011?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/5848590224508220011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=5848590224508220011' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5848590224508220011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5848590224508220011'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/02/blog-post_25.html' title='நடுநிசி நாய்கள், பயணம் அல்லது இரண்டுமில்லை'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5602663877984254012</id><published>2011-02-03T15:18:00.003+05:30</published><updated>2011-02-03T16:04:38.924+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>ஒரு கூடும் சில குளவிகளும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிகாலை 7 மணி இருக்கலாம். தேநீர் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில்  திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு திருப்பம், அங்கே லாரி ஒன்று எனது திசையில்  வலதுபுறம் நிறுத்தப்பட்டிருந்தது. காலைநேரப் பனி, குளிர். நாசியில் நுழைந்த தூசிக்காற்று குறுகுறுத்ததில்  கண்களை மூடி ஒருகை வாய்பொத்த தும்மிவிட்டேன். அதேநேரம் எதிரே ஒரு வயதானவர் டி.வி.எஸ்  வண்டியில் வந்துகொண்டிருந்தார். சற்றேறக்குறைய இருவரும் மோதிவிடும் நிலைமை.  கொஞ்சம் அவரோ அல்லது நானோ சுதாரித்துக்கொண்டு மையிரிழையில்  மோதிக்கொள்ளாமல் தப்பித்தோம்@தார். மோதியிருந்தால் அவர் லாரியின் ஓர  பட்டைகளில் அடிபட வாய்ப்பிருந்தது. நான் வெறுமனே தரையை  தடவியிருக்கக்கூடும். இருவரும் ஒருவரையொருவர் கடந்து பத்தடி இடைவெளியில்  நின்றுவிட்டோம். அவர் என்னை திட்ட ஆரம்பித்தார். ‘ஏன்டா காத்தால  வர்ரீங்க..என்ன நெனப்புல போறானுங்களோ தெரியல’ இன்னும் இன்னும்.. அப்படியே  கொஞ்சம் ‘ஒத்தச் சொல்லால தனுஷாக என்னை அவர் நினைத்திருக்கக்கூடும். என்மீது  தவறு, உணர்ந்துகொண்டேன். நின்று திரும்பி கை சின்னத்தைக்காட்டி ‘சாரிங்க’ என்றேன். அவர் வாக்காளனைப்போலவே  கருவிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அவர் அருகில் சென்றேன்.  ஒருமாதிரி மருண்ட விழிகளுடன் பார்த்தார். பிறகு தமிழில்  ‘&lt;b&gt;மன்னிச்சிடுங்க&lt;/b&gt; தப்பு என்மேலத்தான், திடீர்னு தும்மல்  வந்திடுச்சு...அதான், இனிமே நடக்காம பாத்துக்கிறேன்’ என்று அமைதியான  குரலில் சொன்னேன். முன்பிருந்த கோபம் முற்றிலும் அவரிடம் இல்லாமல்போனது.  போலவே சாந்தமான குரலில் ‘பாத்துப்போ கண்ணு’ என்றார். ஒரே சொல்தான், முன்பு  சொன்னதற்கும் இதற்கும் பொருளும் ஒன்றுதான், சொற்களின் ஒலியளவுகளில்  வேண்டுமானால் சற்று வித்யாசம் இருக்கக்கூடும், ஆனால் இங்கே இருவேறானது  மொழிகள்தான். அந்தச்சொல் கொடுக்கிற அழுத்தம் மனதை புரட்டிப்போடுகிறது.  அதுதான் தமிழ்.&lt;/div&gt;&lt;br /&gt;•••••••&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாரமொருமுறை இரவு உணவுக்கு செல்லும் ஒரு சிற்றுண்டி  கடை. ஒரு தாத்தன்தான் பிரதான பாத்திரம், ஒரு அம்மாக்காரியும்,  பெரியம்மாக்காரியும் துணை. ஒரு குழந்தை இங்கே நாயகி. எப்போதும் துருதுருவென  ஓடுவாள் ஒடியாறுவாள், நாம் சிரித்தால் சிரிப்பாள், முறைத்தால் முறைக்காமல்  அவளம்மாவின் கொசுவத்தை பிடித்துக்கொள்வாள். நேற்று அவள் அம்மாவும்,  பெரியம்மாவும் இல்லை, பிரதானச்சாலையில் அடுத்தசாரியில் கால் பர்லாங்கு  தள்ளியிருக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கக்கூடும். எப்போதும்  பூச்சிகளைக் கண்ட பூனையைப்போல் இருப்பவள் கொஞ்சம் சுணங்கியிருந்தாள்.  கொஞ்சநேரத்திற்கெல்லாம் அழவும் தொடங்கிவிட்டாள். தாத்தனைத் தவிர  வேறுயாரும் கடையிலில்லை. அவரே சமையல்காரர், பறிமாறுபவர், துடைப்பவர்  இத்யாதி.... நை..நை யென்று அழத்தொடங்கியவள், தாத்தன் தண்ணீர் மொள்ளப்போனால்  பின்னாடியே... கைலியைப்பிடித்துகொண்டே, இலையெடுக்கப்போனால்&amp;nbsp; ....பிடித்துக்கொண்டே, தோசை ஊற்றப்போனால்....கொண்டே, காசு வாங்கி கல்லாவில்  போட்டால் ...ண்டே... இன்னும். இந்த சூழ்நிலையைப்  பார்த்துக்கொண்டிருந்த எனக்குகூட எரிச்சல் வந்து அவளை சமாதானப்படுத்த  முயன்றேன், ம்கூம். அவளுக்கு இப்போது வீட்டிற்கு செல்லவேண்டும். அதற்குதான்  அடம், அழிச்சாட்டியம். கடையில் என்னைப்போலவே  சாப்பிடும்&amp;nbsp; மற்றவர்களும் சமாதானம் செய்ய முயன்றார்கள்  முடியவில்லை. கூடவே தாத்தனும். சாப்பிடுபவர்களை அப்படியே  விட்டுவிட்டு கூட்டிச்செல்ல அவராலும் முடியாதுதான். ‘இரும்மா,  இரும்மா.. தோ அம்மா வந்திடுவா.. ஒனக்கு என்னவேணும் சொல்லு, வாங்கியாறேன்.. அழாத..’ ம்கூம்..... இதே  நானாகயிருந்தால் ஓங்கி செவுள் செவுளென்று அறைந்திருப்பேன், ருக்கலாம்.  ப்ப்ப்ச்ச். என்னுடைய வியப்பு இப்போது அந்த முதியவரிடத்தில்  திரும்பியது. எப்படியிவர் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்!!!. கொஞ்சம்கூட அந்த  குழந்தையை கடிந்துகொள்ளவில்லையே!!. ஆனால் அவரிடத்தில் ஒரு இயலாமை, தன்னையே  நொந்துக்கொள்ளும் கடுமை. பிறகு மீண்டும் ‘அழாத என்னவேணுஞ்சொல்லு, தாத்தா  வாங்கியாரேன், சரி வாப் போலாம்’ என தூக்கிக்கொண்டு எதிர்த்த மளிகைக்கடைக்கு  சென்றார். ஒரு லேய்ஸ் மற்றும் வாட்டர் பாக்கெட் அழுதுவீங்கிய கன்னம் மலர  தேவைப்பட்டிருக்கிறது. ‘மீண்டு’ம் வந்தார், முகத்தில் சாதனை.  எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு  குழந்தையாகமுடிகிறது. எல்லா பெற்றோர்களும்தான் ‘இங்கே’  பேதையாகிருப்பார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;•••••••• &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;வழக்கம்போலவே ஒரு விடுமுறைநாள். எப்போதும்  சிந்திப்பதைவிட அதிகம் முயன்றதில்&amp;nbsp; 2 வருடங்களுக்கு முன்பு சென்ற&amp;nbsp;  சென்னிமலை முருகன் ஞாபகம் வந்தார். நண்பனும் நானும் மயில்வாகனனுக்காக  இருச்சக்கர வாகனத்தில் கிளம்பினோம். சரியாக மதியம் ஒன்றரை மணி. மலையேற  ஆயிரத்து முன்னூத்திச்சொச்சம் படிகளும் கூடவே பசியும் துணை. முருகனுக்கு  கோபம் வந்தால் பொசுக்கென்று மலையுச்சியில்  ஆண்டியாக உட்கார்ந்துகொள்கிறார். எல்லோரும் பணத்தைப் பணத்தால் எடுக்க அவரை மலையில்  தேடுகிறார்கள், இயல்பு அல்லது ஆசை மற்றும் நப்பாசை என்னைப்போலவே!!!. போனமுறை  நண்பனும் நானும் மேலே சந்நதிக்குப் பின்புறம் மலைக்கற்களைப் பொறுக்கி  ஆளுக்கொரு வீடு கட்டினோம், சும்மா, கூம்பாக, அடுக்கடுக்கி. உள்ளே ஒரு  நெய்விளக்கும். இந்தவருடம் நண்பனின் ஆசை நிறைவேறியதற்காக ஒரு நன்றிகடன்,  நான்&amp;nbsp; இம்முறையும் கற்கள், கூம்பு, நெய்விளக்கு. இந்தமுறை  மரங்களில்லாத இடத்தில் கட்டவேண்டும்...டினேன் (குறியீடு). மேலேறும் போது  பிரித்துவைத்த புளிச்சோரு மூட்டையுடன் ஒரு குடும்பத்தை பார்க்க நேர்ந்தது.  எவ்வளவு காலமாகிறது, இந்த கட்டுச்சோறு சாப்பிட்டு, குறைந்தது நான்கு,  ஐந்து. உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற  எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடையின் முன்னமர்ந்து பார்த்த  அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று  கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது. கீழே  இறங்கிவந்தபோது நான்கு மணி. மலையடிவாரம், கொஞ்சம் ‘கொஞ்ச’ லாம்போல் தென்படுகிற  சுடிதார் யுவதிகள். பசிக்கு தின்ற பத்துரூபாய் பொரியும், கலவைக்காரமும்  அடிவயிற்றை ஐம்பதுபைசா பலூன் அளவுக்கு ஆக்கியது. தைப்பூச திருவிழாக்கடைகள்  இன்னும் எடுக்கவில்லை. சுற்றும் ராட்டினம், சில குழந்தைகள். நாமும் ஏறலாமா?  வேண்டாமா? கொஞ்சம் குழப்பமும் கூச்சநாச்சமும் வேண்டாமென்றது, காரணம்  பனிக்கூழ் நக்கியவாறான அழகு பெண்கள் மற்றும் கடந்துவந்த என் வயது. அருகருகே  தள்ளுவண்டிகளில் பலாச்சுளை, வேர்க்கடலை, கீத்துப்போட்ட அண்ணாச்சிப்பழம்... ம்கூம்.. முக்கினாலும் முடியாது, சோற்றுப்பொரியால் வந்தவினை,&amp;nbsp; நாங்கள் வண்டியை கிளப்பினோம்,  வயிறும் மனதும் புடைத்தேயிருந்தது. வஞ்சனை வாழ்க்கை.&amp;nbsp; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: #888888;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;span style="color: #888888;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-5602663877984254012?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/5602663877984254012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=5602663877984254012' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5602663877984254012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5602663877984254012'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/02/blog-post.html' title='ஒரு கூடும் சில குளவிகளும்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-3366647991449139745</id><published>2011-01-13T17:47:00.003+05:30</published><updated>2011-11-25T19:57:48.568+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>ஒரு விமர்சனம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TS7qGgeArcI/AAAAAAAAA54/1jkOkhWMxL8/s1600/thenmerkuparuvakatru01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘கள்ளிக்காட்டில் பெறந்த தாயே’ என்று தொடங்கும்போதே இந்த ஒத்தையடிப்பாதை எந்த மையத்தில் செல்லப்போகிறது என்று தெரிந்துவிடுகிறது. பெயர்கள் ஓடும்போது வருகிற செஃபியா டோன் புகைப்படங்கள் அத்தனை கிராமத்து முகங்களையும் ஒத்தியெடுத்திருக்கிறது. கூடவே எனக்கு அண்ணன் &lt;b&gt;&lt;a href="http://www.flickr.com/photos/30041161@N03/"&gt;கருவாயனின்&lt;/a&gt;&lt;/b&gt; புகைப்படங்கள்தான் ஞாபகத்திற்கு வந்தது.&amp;nbsp; படம் தென்மேற்கு பருவக்காற்று, இயக்கம் சீனு ராமசாமி அவர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;நசநசத்த மண்ணும் தூரிக்கொண்டிருக்கும் மழையுமாக பட்டிகளுக்குள் அடைந்துகிடக்கும் செம்மறியாட்டு கூட்டங்களை காட்டும்போது கூடவே படத்துடன் அடைந்துபோவதைத்தவிற வேறுவழியில்லையெனக்கும். எல்லா நகர மனிதனுக்குள்ளும் பிதுங்கிவழியும் அந்த கிராமத்துமண் ஏக்கம் காரணமாக இருக்கலாம். வாயில்லாப்பூச்சிகளை வசைக்குள்ளாக்கும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வீதிகளில் செல்லும் டயர்வண்டி மாடுகளை பார்க்கும்போது அதன் முதுகில் உள்ள தார்க்குச்சி புள்ளிகளில், மாட்டுக்குச் சொந்தக்காரனின் ‘வீரம்’ தான் முதலில் தெரிகிறது. இதில் பசுமாடுகளும், ஆடுகளும் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு, இறுதியில் பலியானாலும்கூட. ஆடுகளை கொஞ்சி வளர்ப்பதும், அவைகளுக்கு சீக்குவந்து கழிந்தால்கூட கண்ணீர் சிந்துமளவுக்கு பாசங்காட்டும் பொம்பளைகள் இன்னும் கிராமத்தில் இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;போக... ஆடு மேய்க்கும் தொழிலு‘முடைய குடும்பத்திற்கும், அவைகளை களவாடி இறைச்சியாக்கி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பத்திற்கும் கொஞ்சம் காதலுடன் கட்டப்பட்ட கதை. படத்தின் நாயகன் நாயகி என்று காட்டப்படும் இரண்டு முகங்களைத்தாண்டி ஓடியாடி உழைத்திருப்பது ‘நாயகனின்’ நாயகி&amp;nbsp; சரண்யாவும்,&amp;nbsp; ஒளிப்பதிவாளர் செழியனும், இயக்கிய சீனுராமசாமியுந்தான் என்பதே சரி. சிற்றுந்துகள் தூரத்திலிருந்து வரும்பொழுது பின்னாலொலிக்கும் இசையில்,&amp;nbsp; இளையராஜாவின் இசைச்சுவற்றில் கொஞ்சம் சுண்ணாம்பைச்சுரண்டி&amp;nbsp; எடுத்ததுபோல் தெரிகிறது. மேலும் ஆரம்ப இறுதி மற்றும் இடையில்வரும் ‘கள்ளி கள்ளிச்செடி’ பாடல்களைத்தவிர மற்றெதுவும் பெரிய தாக்கத்ததை தரவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கதை, திரைக்கதை, செம்மண் வசனங்கள் இதர பாத்திரங்கள் மற்றும் மற்ற இத்யாதிகளை ஓரங்கட்டிவிட்டு இங்கே பார்க்கவேண்டியது பொன்வண்ணனின் பொண்டாட்டி முகத்தையும் நடிப்பையும். மேலுதட்டுக்கு மேலே ஓட்டைகள்தெரிய புடைத்த அந்த மூக்கே போதும். பார்ப்பவர்கள் ராட்சஸி பட்டம்தர ஏற்ற இந்த பொம்பளையை,&amp;nbsp; ‘ச்ச்சே என்ன பொம்பளடா’ என்று நவநாகரீகத்தார் நினைத்துக்கொள்ளலாம். ஆயினும் கிராமத்து புழுதியை எண்ணெய்த்தலையில் சுமந்தலைந்தவர்களுக்கு அவள் ஒரு பழக்கப்பட்ட முகமாகவே தெரிவாள். எனக்கு அப்படித்தான். இந்த ராங்கி ரப்பு இல்லாத பொம்பளைகளை எங்கள் தெருவில் பார்ப்பதரிது. மயிலாம்பாள், சரசு, முருகனோட அம்மா, வைத்தி பொண்டாட்டி, பக்கத்து தெரு ராசாவோட அக்கா என்று பட்டிவாய்ப் பொம்பளைகளுடன் புழங்கியப்பொழுதுகள் படம் முடிந்தபொழுதும், கனவிலும்கூட வந்து தொலைத்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TS7qJGO5f_I/AAAAAAAAA6A/ITXvDoZbPtE/s1600/images1jpg.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TS7qJGO5f_I/AAAAAAAAA6A/ITXvDoZbPtE/s400/images1jpg.jpg" width="400" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘இந்த ரத்தம்லாம் அப்பனாத்தா இல்லாத புள்ளைங்களுக்கு குடுப்பாங்களா!!?’ என்று கேட்டுவிட்டு ரத்தம் கொடுக்க போகுமிடத்தே தொடங்குகிறது அவளின் அலப்பறை. ‘தோ பாரு, நா வாக்கு குடுத்திட்டேன், மீறி நடக்கணும்னு நெனச்ச சங்கருத்துடுவேன்’ என்று மகனை மிரட்டும் காட்சியாகட்டும், கடைசியில் தாலியை திருப்பிக்கொடுக்க வந்த நாயகியை மனம்மாறி ஏற்றுக்கொண்டபிறகு அவள் அண்ணனை எதிர்க்க ஊர் முனையில் தடியோடு நிற்பதாகட்டும், கத்தியால் குத்துப்பட்டபின்பு ‘களவாணிப் பய குத்திட்டான்னு தெரிஞ்சா மானம்போயிடும் யார்டையும் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வீராப்பாகட்டும், அதற்கு முன்பு ‘இந்தா வெத்தலப்பாக்கு வச்சிருக்காயாடா?’ என்று கேட்டுவாங்கி அப்பவே 101 யை வைத்து நிச்சயம் செய்யுமிடமும்...., ‘முண்டச்சி வீட்ல சம்பந்தம் பண்ணக்கூடாதுன்னு அப்பவே எல்லாம் சொன்னானுக.. நாங்கேட்டனா?... நீ நல்லாவே இருக்கமாட்ட...நல்லாவே இருக்கமாட்ட’ என்று அந்த தம்பிமுறையான் மண்ணை தூற்றிவிட்டு செல்லுமிடத்தில், அவமானத்திலும் ஆங்காரத்திலும் விழிபிதுங்கும் இடமும்............இந்த பொம்பளை வாழ்ந்திருக்கிறாள். எனக்கென்னமோ எல்லாரையும் தாண்டி அப்படியே என் சரசு அத்தையை ஞாபகப்படுத்தினா‘ள் அல்லது ‘ர்’.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கருவாச்சி பெண்ணும் வருகிறாள். ‘நீங்க எனக்கு தூரத்து சொந்தந்தான்’ என்று தொங்கட்டான் குலுங்க தலையாட்டிப்பேசும் பேச்சே போதும்..செமத்தியான சிறுக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஆங்காங்கே இழுத்து இழுத்து பேசும் நண்பனின் வசனமும், மூடியக்கையில் நொழுந்திய வெங்காயப்பக்கோடா போன்ற ஒரு கிளைமாக்ஸ் காட்சியும் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இவையெல்லாம் அந்த தாயின் கலப்பையில் அரைந்துபோன மண்புழுப்போலதான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படத்தின் நாயகியைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக என்று யாராவது கேட்கக்கூடும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TS7qIIcEi2I/AAAAAAAAA58/oJ6OfsjpNhI/s1600/heroin.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TS7qIIcEi2I/AAAAAAAAA58/oJ6OfsjpNhI/s400/heroin.jpg" width="312" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு அலக்குக்குச்சிக்கு பாவாடைத்தாவணி போட்டதுபோல்தான் நாயகி. முனை அருவாளை கண்ணில் வைத்திருக்கிறாள். கள்ளிப்பழத்தை சாப்பிடும்போது மோவாயில் குத்துகிற பூமுற்களைப்போல நெஞ்சில் குத்துகிறாள். அந்த உதட்டெச்சிலைத் தொட்டு வெறுமனே கன்னத்தில் வைத்துக்கொள்ளலாம்போல. என் முகத்தில் பருக்கள் வந்து காலமாகிவிட்டது. மீண்டும் இக்காலத்தே வரலாம். (கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட?)&amp;nbsp; வேறொன்றுமில்லை. கண்களால் நடிக்கத்தெரிந்தவளுக்கு வளையவளைய வந்தாலும் பெரிதாய் சொல்’லமுடியாத ‘வாய்’ப்பூ.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல படைப்பையும், சரண்யாவின் முழு நடிப்புத்திறனையும் திரையுலகிற்கொணர்ந்த இயக்குநர் சீனுராமசாமிக்கு எக்காலமும் நன்றி. &lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;நல்லாயிரு தாயீ&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TS7qJqqVkiI/AAAAAAAAA6E/VkYcF7tePU0/s1600/saranya1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TS7qJqqVkiI/AAAAAAAAA6E/VkYcF7tePU0/s400/saranya1.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-3366647991449139745?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/3366647991449139745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=3366647991449139745' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3366647991449139745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3366647991449139745'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/01/blog-post_13.html' title='ஒரு விமர்சனம்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TS7qJGO5f_I/AAAAAAAAA6A/ITXvDoZbPtE/s72-c/images1jpg.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-3663587327477405708</id><published>2011-01-12T20:02:00.000+05:30</published><updated>2011-01-12T20:02:38.655+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை...'/><title type='text'>வேறென்ன வேண்டும்</title><content type='html'>. &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணிக்கு&lt;br /&gt;ஒருகால் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம்பக்க பிள்ளைகளுக்கு&lt;br /&gt;அவள் அத்தையாகியிருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் பெரியம்மா பெரியம்மா என்பார்கள்&lt;br /&gt;நானும்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;செல்லையன் மட்டும்&lt;br /&gt;அம்மா என்றுதான் கூப்பிடுவான்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத்தெரிந்து&lt;br /&gt;கல்யாணிதான் பலருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுப்பிறந்த பொண்டு பொடிசுகளால்&lt;br /&gt;ஆத்தாவும் ஆகிவிட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன வேண்டும்&lt;br /&gt;கல்யாணிக்கு கல்யாணம்தான் ஆகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-3663587327477405708?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/3663587327477405708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=3663587327477405708' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3663587327477405708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3663587327477405708'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/01/blog-post_12.html' title='வேறென்ன வேண்டும்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-238443321150382077</id><published>2011-01-07T19:28:00.003+05:30</published><updated>2011-01-07T19:54:05.960+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசோகமித்ரன்'/><title type='text'>அசோகமித்திரனுக்கு சாரல் விருது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_CzN6sqqg0ak/TSbrD09CEhI/AAAAAAAABLY/eIAZ3y4pXBc/s1600/asoka.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5559389241022222866" src="http://2.bp.blogspot.com/_CzN6sqqg0ak/TSbrD09CEhI/AAAAAAAABLY/eIAZ3y4pXBc/s320/asoka.JPG" style="cursor: pointer; display: block; height: 174px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;அன்பிற்குரிய நண்பருக்கு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt;"&gt;,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;வணக்கம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;நலம் தானே.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;நானும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt;"&gt;, &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;நண்பர் தேனுகாவும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt;"&gt;,   &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;திரு  மா.அரங்கநாதன்   அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும்  சாரல் இலக்கிய விருதின்   நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;இந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும்   எழுத்தாளர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-size: 12pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: 12pt;"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt;"&gt;&lt;a href="http://www.robertarockiamtrust.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=61&amp;amp;Itemid=73" target="_blank"&gt;&lt;span lang="TA" style="font-size: 10pt;"&gt;திரு அசோகமித்திரன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TSch2pBfSZI/AAAAAAAAA44/QpyL1IddkuI/s1600/asokamithran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TSch2pBfSZI/AAAAAAAAA44/QpyL1IddkuI/s400/asokamithran.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;உங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;நன்றி!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;"&gt;அன்பாக&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&lt;span lang="TA" style="font-size: 10pt;"&gt;&lt;a href="http://www.ravisubramaniyan.com/" target="_blank"&gt;ரவிசுப்ரமணியன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt;"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable" style="width: 554px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;   &lt;td rowspan="3" style="background: none repeat scroll 0% 0% white; padding: 0in; text-align: center; width: 19%;" width="19%"&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;   &lt;td style="background: none repeat scroll 0% 0% white; padding: 0in;"&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சாரல் விருது வழங்கும்   விழாவும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஜேடி ஜெர்ரியின்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt; &lt;a href="http://robertarockiamtrust.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=58&amp;amp;Itemid=76" target="_blank"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கலம்காரி நூல்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வெளியீட்டு விழாவும் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center" class="MsoNormal" style="text-align: center;"&gt;   &lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td style="background: none repeat scroll 0% 0% white; padding: 0in;"&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;   &lt;td colspan="2" style="padding: 0in;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Georgia,serif;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt;"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable" style="display: inline ! important; width: 554px;"&gt;&lt;tbody style="display: inline ! important;"&gt;&lt;tr style="display: inline ! important;"&gt;&lt;td colspan="2" style="display: inline ! important; padding: 0in; text-align: center;"&gt;&lt;div class="MsoNormal" style="display: inline ! important;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பங்கேற்போர்:&lt;br /&gt;பிரபஞ்சன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;| &lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆர். பி. பாஸ்கரன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;| &lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எம்பெருமாள் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;| &lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ச   தமிழ்செல்வன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;|   &lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பாரதிமணி &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;| &lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இயக்குனர் லிங்குசாமி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td colspan="2" style="display: inline ! important; padding: 0in;"&gt;&lt;div class="MsoNormal" style="display: inline ! important;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td colspan="2" style="display: inline ! important; padding: 0in;"&gt;&lt;div class="MsoNormal" style="display: inline ! important;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td colspan="2" style="display: inline ! important; padding: 0in;"&gt;&lt;div class="MsoNormal" style="display: inline ! important;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அன்று இரவு&lt;/span&gt; 8 00 &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மணிக்கு ஜேடி ஜெர்ரியின்&lt;/span&gt; &lt;a href="http://www.robertarockiamtrust.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=72&amp;amp;Itemid=57" target="_blank"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கலம்காரி ஆவணப்படம்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;திரையிடப்படும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இடம்: பிலிம் சேம்பர் அரங்கம், சென்னை, &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: center;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நாள்:9.01.2011 நேரம் மாலை 6 மணி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://kalapria.blogspot.com/"&gt;நன்றி கலாப்ரியா&lt;/a&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;••••••••••••&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆங்கிலத்திலும் படைப்பிலக்கியங்களை எழுதியவர். கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், பதினெட்டாவது அட்சக்கோடு உள்ளிட்ட நாவல்களும் காலமும் ஐந்து குழந்தைகளும், இன்னும் சில நாட்கள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதிய இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 2009-ம் ஆண்டில் எழுத்தாளர் திலிப்குமாருக்கும் 2010 ஆம் ஆண்டில் கவிஞர் ஞானக்கூத்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விருதுக்குழு நடுவர்களாக எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், ரவிசுப்ரமணியன் கலைவிமர்சகர் தேனுகா செயல்பட்டனர். வரும் ஞாயிற்றுக்கிழமை (9.1.11) அன்று பிலிம்சேம்பரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எம்.பெருமாள், ச. தமிழ்ச்செல்வன், பாரதிமணி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;விளம்பரப் படஉலகில் முன்னணியில் இருக்கும் இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரி இருவரும் இந்த இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். விழாவில் ஜெர்ரி இயக்கிய கலம்காரி என்ற ஆவணப்படம் திரையிடப்படும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நன்றி தினமணி&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;••••••••••&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-238443321150382077?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/238443321150382077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=238443321150382077' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/238443321150382077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/238443321150382077'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/01/blog-post_07.html' title='அசோகமித்திரனுக்கு சாரல் விருது'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_CzN6sqqg0ak/TSbrD09CEhI/AAAAAAAABLY/eIAZ3y4pXBc/s72-c/asoka.JPG' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-1253291110172860403</id><published>2011-01-05T17:51:00.003+05:30</published><updated>2011-01-05T19:02:14.318+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயலாமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஒரு இறுக்கம் தளர்ந்த இரவுப்பொழுது என்றுதான் வாய்க்குமோ தெரியவில்லை. ஒவ்வொரு நாள் அடர்த்தியும், அழுத்தி கொடுக்கிற முத்தத்தால் விளையும் கன்னத்து எச்சில்களாய் கொஞ்சம் சில்லிடலும் கொஞ்சம் அருவருப்புமாய் தொலைகிறது. கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TSRvhAsXUcI/AAAAAAAAA4c/LBHPB6ZlL9Q/s1600/IMG_0008.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TSRvhAsXUcI/AAAAAAAAA4c/LBHPB6ZlL9Q/s640/IMG_0008.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தினமும் விடிகிற காலையைப்போல்தான் அன்றும் விடியப்போகிறது. வேறெந்த எழவும் நடக்கபோவதில்லை. ஒரு திருவிழாவிற்குண்டான பரபரப்பினை பள்ளிக்கூடங்களைச் சூழ்ந்த கடைகண்ணிகள் கொண்டிருக்கும். கலர் கலர் தோரணங்களும் பதாகைகளும் தார்ச்சாலையில் அம்மா வாங்க அய்யா வாங்க என்றழைக்கும் சுண்ணாம்புக்கோடுகள் தோரணையில் திருவோடுகளும், ஓரங்களில் வாடகைக்கடையோ அல்லது டெண்ட்டோ போட்டு ‘டேய் அண்ணன் வந்திட்டாருடா, 3 வது வார்டு, கரைட்டா நோட் பண்ணிக்கொடு, அண்ண மறந்திடாதண்ண மேலேர்ந்து மூணாவது பட்டன் நம்மளோடது, அழுத்தினா சவுண்ட் வரும் பாத்துக்க’ இயல்பாய் பாடத்துடன் ஒலிக்கும் குரல்களும் கேட்டுகொண்டேதானிருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நடக்கமுடியாத இராசாயாக்கிழவியும், நவநீயும் ஜகஜ்ஜோராக வண்டியில் பொக்கைப்பல் தெரிய ‘நானெல்லாம் ஓட்டுப்போட்டு என்ன ஆவப்போது‘என்று சிரித்துகொண்டே போவார்கள். டவுசரை மறந்து லுங்கியைச் சுற்றியதுகளனைத்தும் பக்கோடா பொட்டணத்திற்கும், ‘டீ’க்குமாக பூத் ஏஜண்டாகவோ, வெளியில் வார்டு எண் குறித்துதரும் பொம்மைகளாகவோத்தான் வீற்றிருக்கப்போகின்றன. கன்னக்கோல் வைத்து திருடும் கூட்டத்திற்கு வெள்ளைவேட்டியும் சட்டைகளும்வேறு. நேற்றைய மழையில் முளைத்த இன்னொரு காளானாக ஆகப்போகும் புதிதாய் வாய்க்கப்பெற்றவன் இந்த நாட்டின் முதல்குடிமகனான பிரம்மையில்&amp;nbsp; வேகாத வெய்யலில் நின்று கையில் வைத்த மையை திரும்பத்திரும்ப பார்த்து பிரமித்துபோகப்போகிறான் அரும்பிய மீசையை தடவித்தடவி இன்புறுவதுபோல். இன்னொரு ஏப்ரல், மே, இன்னொரு சனி ஞாயிறு, இன்னொரு விடுமுறை, இன்னொரு 2ஜியோ புண்ணாக்கோ என்ன புடலங்காயோ.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘ஆணவம் தலைக்கேரிய மன்னா, உன் ஆணவம் அழியப்போகிறது..... லொக்..லொக்..’&lt;br /&gt;&lt;br /&gt;‘அழிவாம் அழிவு, என்னை அழிக்க எவனடா வருவான்...ஹா..ஹா..ஹா.. ’&lt;br /&gt;&lt;br /&gt;கட் கட்..கட்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="main" style="visibility: visible;"&gt;&lt;span id="search" style="visibility: visible;"&gt;ங்ஙஞீஞீங்ங்ஞேஞே&lt;wbr&gt;&lt;/wbr&gt;.. &lt;/span&gt;&lt;/span&gt;குதிரையும் அதன் கணைப்பும், பேக்ரவுண்டில் டண்டண்டய்ங்ங் இசையும் சூழ ஒரு உக்கிரபுத்திரன் வருவான் இவ்வுலகைக்காக்க...&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா.. அஹ்ஹஹ்ஹா... தட்டுடா கைய....என திரைச்சித்திரத்தின் நீட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போவதோடு இம்மண்ணின் மனிதகுலம் மாட்சியுறும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன? வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-1253291110172860403?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/1253291110172860403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=1253291110172860403' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/1253291110172860403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/1253291110172860403'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2011/01/blog-post.html' title='அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TSRvhAsXUcI/AAAAAAAAA4c/LBHPB6ZlL9Q/s72-c/IMG_0008.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2819376685262481858</id><published>2010-12-27T18:10:00.003+05:30</published><updated>2010-12-27T20:36:50.302+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கமம்‘2010'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி'/><title type='text'>நன்றி என்னய்யா பெரிய நன்றி...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அலைபேசிக்கு ஒரு பழக்கமிருக்கிறது, எப்போதும் ஊமையாகவே இருப்பது. அதற்கு அடிமையாகாமல் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கதைவிட்டாலும் அந்தளவிற்கு எனக்கு அழைப்புகள் வருவதில்லையென்பது உண்மை. மேலும் சீக்குவந்த கோழியின் தலைபோல அலைபேசியில் பேசிக்கொண்டேயிருப்பதும் எனக்கு பிடிக்காத செயல்தான். இந்த இரண்டு நாட்களாக என் அலைபேசி ‘சிரித்து’க்கொண்டேதானிருந்தது. சங்கமத்தைப்பற்றிய அழைப்புகள் மற்றும் கலந்துகொள்ளும் நண்பர்களின் அழைப்புகளென்று இந்த திருவிழாவில் பங்கேற்ற பெருமை என் அலைபேசிக்கும் உண்டு. இரட்டிப்பு மகிழ்ச்சி இப்போது உள்ளது. இப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள் எல்லோரையும்&amp;nbsp; முதற்கண் வணங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய மலையை இரண்டுகைகளினால் புரட்டிப்போட்டதுபோன்ற பிரமிப்புணர்ச்சி எங்கள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இந்த முல்லைச்செடியை வளர்த்தது நாங்கள்தானென்றாலும் தேர்கொடுத்தவர்கள் நீங்கதானே. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் எங்களின் சங்கமத்தில்&amp;nbsp; இத்தனைப் பதிவர்கள் கலந்துகொண்டதையெண்ணி மிகவும் மகிழ்கிறேன்.&amp;nbsp; நாட்கள் நெருங்கநெருங்க எனக்கு கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தவேண்டுமே என்கிற இதயத்துடிப்புதான் அதற்கு காரணம். இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிறப்பாக கூறும் போது எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஒவ்வொருவருடைய வாழ்த்தும் வருகையும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியில் அடங்கியுள்ளது. ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டவர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துவகையிலும் உதவியவர்களுக்கும் எனது நன்றியை தனிப்பட்ட முறையிலும், குழுமத்தின் சார்பாகவும் தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி என்னய்யா பெரிய நன்றி... கண்கள் பனித்ததும் இதயம் இனித்ததும்&amp;nbsp; (கலைஞர் உபயம்) எப்படியென்று மனதார உணர்ந்தேன். எல்லோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: yellow;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;நன்றி...நன்றி...நன்றி சொந்தங்களே!!!!&lt;/b&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://erodetamizh.blogspot.com/2010/12/blog-post_27.html" target="_blank"&gt;&lt;b&gt;சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியல்&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://erodetamizh.blogspot.com/2010/12/blog-post_27.html" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;/h3&gt;மேலும் விரிவான இடுகை &lt;b&gt;&lt;a href="http://www.erodekathir.com/2010/12/blog-post_26.html" target="_blank"&gt;ஈரோடு கதிர் அவர்கள் பக்கத்தில்&lt;/a&gt;&lt;/b&gt; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span lang="EN-US" style="font-family: Latha,sans-serif;"&gt;&lt;span style="color: red; font-size: medium;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;a href="http://picasaweb.google.com/kathir7/Sangamam2010#" target="_blank"&gt;சங்கமம்‘2010 படங்களைக் காண இந்த சுட்டியை சொடுக்கவும்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;.&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-2819376685262481858?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/2819376685262481858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=2819376685262481858' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2819376685262481858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2819376685262481858'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/12/blog-post_27.html' title='நன்றி என்னய்யா பெரிய நன்றி...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-9104460676147160778</id><published>2010-12-24T18:27:00.001+05:30</published><updated>2010-12-24T18:30:22.775+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள் வட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கமம்‘2010'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மார்கழி மகோற்சவம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இந்த மாதத்து காலைகள் இப்படித்தான் விடிகின்றன. வாசல் முருங்கை மரத்தில் அடைந்த கோழிகள் எழுந்துவர ஆறு ஆறரை ஆகிவிடுகிறது. உடலில் போர்த்திய போர்வையின் கதகதப்பை எரித்துக்கொண்டிருக்கிறது குளிர். குடிசைக்குள்ளிரங்கும் பனித்தூரல் பூனைகளின் உறக்கத்தைக்கூட கொஞ்சநேரம் வேடிக்கைப்பார்க்கிறது. முகனைப் பிள்ளையாரை துயிலெழுப்ப 4 மணிக்கே ஆயத்தமாகின்றனர் மைக்செட் காரர்கள். ‘கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?‘&amp;nbsp; மதுரை சோமுவின் குரல் அதிகாலைக் கனவினை முருகன் பக்கம் திருப்ப முயல்கிறது. போதாக்குறைக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ’ நாகேஷின் நடுங்கும் குரலில் திருவிளையாடல் வேறு. எப்பூவும் சூடாத கோலங்கள் இப்பொழுதான் சுமங்கலி வேடம் கொள்கிறது. மேலும் மழைவேறு பெய்தால் கேட்கவாவேண்டும்? தாழ்வாரத்தில் கட்டிவைத்த தூங்குமூஞ்சி சுப்பிக்கட்டுகள் மிதந்துபோகும். அடுப்பில் வறட்டித் துண்டுடன் காடா விளக்கில் மண்னெண்ணையை ஊற்றிப் பற்றவைக்கும் அம்மாவிடம் உதைவாங்கும் புகை, தென்னங்கூரையினூடே மலையைக் குடையமுனையும் மேகமாய்க் கடப்பதும் ஒரு கவர்ச்சிதான். விளாமிச்சைவேருக்கு விடுதலைக் கிடைத்து காய்ந்துகிடக்கும். வாசலில் சாணந்தெளித்து கூட்டவும், பெருக்கவும் தேவைப்படும் அதிகாலைப்பொழுது மழைகூட்டலில் அடைந்து போனதில் இன்னும் வேலைமிச்சம். அப்பாக்களின் தேநீர் கடைகள் அப்படியல்ல, எப்போதும் போலவே காதொட்டி முண்டாசு கட்டின தலைகளுடன் நிறைந்தோடும். மாட்டுத் தொழுவங்களின் நசநசத்துப்போன போன நாத்தம் வீதியெங்கும் விரவிக்கிடக்கும். கொஞ்சம் கொஞ்சம் தலைக் காட்டும் கதகத கதிரொளி தெருக்குழாய்களை நிழற்கோடாக்கிச் சிரிப்பதுகூட அழகுதான். நிற்க&lt;/div&gt;&lt;a href="http://www.blogger.com/goog_367022813"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;a href="http://erodetamizh.blogspot.com/2010/01/20-2009.html"&gt;அந்தக்கரையில்&lt;/a&gt;&lt;/b&gt; கூடின அலைகளின் நுரைக் குமிழ்கள் இன்னும் உடையவில்லை. &lt;b&gt;&lt;a href="http://erodetamizh.blogspot.com/2010/01/20-2009.html"&gt;அந்தக்கூடத்தில்&lt;/a&gt;&lt;/b&gt; சூழ்ந்த அனைவரின் மூச்சுக்காற்றும்கூட இன்னும் அங்கேயேத்தான் இருக்கும். மார்கழிக்குளிரில் ஒரு தந்திக்கம்பியில் ஒட்டியொட்டி அமர்ந்திருக்கும் குருவிகளை பார்த்திருக்கிறீர்களா? அந்த உடற்சூட்டில் ஒளிந்துகிடக்கும் நட்பெனும் செருக்கை உணர்ந்ததுண்டா? வாருங்கள் &lt;b&gt;&lt;a href="http://erodetamizh.blogspot.com/2010/12/2010_21.html"&gt;நமது ஈரோடு சங்கமத்திற்கு&lt;/a&gt;&lt;/b&gt;. ஒரு சேர கரம் கோர்க்கலாம். யார் யாருக்கோ எதெதுக்கோ பனிக்கும் கண்கள் நமக்கும் இந்நிகழ்வில் பனிக்கட்டும். மின்னஞ்சல் வழியும், அலைபேசிகள் வழியும் வந்துகுவியும் வாழ்த்துக்களும், வருகையை உறுதிப்படுத்துவதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரங்கு இந்த ஜனத்திரளை தாங்குமா என்பதை பயத்துடனும் எதிர் நோக்குகிறோம். எப்படியாயினும் இதுவொரு மார்கழி மகோற்சவம்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-9104460676147160778?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/9104460676147160778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=9104460676147160778' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/9104460676147160778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/9104460676147160778'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/12/blog-post_24.html' title='மார்கழி மகோற்சவம்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4234669928935108174</id><published>2010-12-22T18:01:00.000+05:30</published><updated>2010-12-22T18:01:42.075+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>ஒரு குழந்தையின் குமுறல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TRHr91MjAaI/AAAAAAAAA3U/yhQEBpr2iRE/s1600/cryingboy2.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TRHr91MjAaI/AAAAAAAAA3U/yhQEBpr2iRE/s1600/cryingboy2.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளை நிலங்களை விற்றாகிவிட்டது&lt;br /&gt;மூலைக்கொரு வீடும் வந்துவிட்டது&lt;br /&gt;காவலுக்கிருந்த அய்யனார்&lt;br /&gt;கட்டிடத்திற்குள் வந்துவிட்டார்&lt;br /&gt;இனி கவலையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம்&lt;br /&gt;சாயுங்காலம் டியூசன்&lt;br /&gt;விடுமுறையென்றால் வீடியோ கேமும் உண்டு&lt;br /&gt;வேறென்ன குறைச்சல் &lt;br /&gt;எங்கள்வீட்டு நாய்க்குட்டியும் இப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிக்கும் நடிகனுக்கும் &lt;br /&gt;பளபளக்கும் பதாகைகள்&amp;nbsp; &lt;br /&gt;பட்டினியில் செத்தவன் பிள்ளை&lt;br /&gt;சிரிக்கிறான் வலது ஓரத்தில்..&lt;br /&gt;பெரியதாய் படம்போட்டு...&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;விதர்பாவைப்பாருங்கள்&lt;br /&gt;தண்டகாருன்யாவைப்பாருங்கள்&lt;br /&gt;அய்யோ என் இனமே செத்துவிட்டதே&lt;br /&gt;போராடுவோம்.. போராடுவோம்...&lt;br /&gt;திரட்டியில் இணைத்தால் வேலை முடிந்தது&lt;br /&gt;ஹலோ? என் கேபினுக்கு டீ வரல.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் திருடனுங்க&lt;br /&gt;அத்தனையும் ஊழல்&lt;br /&gt;யாருவீட்டு காச யாரு திங்கறது?&lt;br /&gt;இந்தமுறை ஓட்டுப்போட&lt;br /&gt;தலைக்கு ரெண்டாயிரம் வேணும்...&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;அக்காளுக்கு போட்ட நகைநட்ட &lt;br /&gt;நம்ம கல்யாணத்துல புடுங்கிடலாம் &lt;br /&gt;கூடவே ஒரு டூவீலரும் கெடைச்சிடும்&lt;br /&gt;ஜாம்..ஜாம் கல்யாணம்தான் &lt;br /&gt;தாலிதானே குத்தும்.. பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;செத்தவன் சேதி சிறுத்துக்கிடக்கும்&lt;br /&gt;முக்கியமானது ஒரு மூலையில்&lt;br /&gt;அரசியல்வாதி கோமணம் அங்கங்கே&lt;br /&gt;போதும் போதும்.. ஆனது ஆகட்டும்&lt;br /&gt;நடிகனின் மசிருக்குள் தேடலாம் &lt;br /&gt;பத்திரிக்கை தர்மத்தை. &lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-4234669928935108174?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/4234669928935108174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=4234669928935108174' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/4234669928935108174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/4234669928935108174'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/12/blog-post_22.html' title='ஒரு குழந்தையின் குமுறல்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TRHr91MjAaI/AAAAAAAAA3U/yhQEBpr2iRE/s72-c/cryingboy2.gif' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-624794239545781232</id><published>2010-12-14T16:32:00.001+05:30</published><updated>2010-12-14T16:34:30.924+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்கள் வட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கமம்‘2010 அழைப்பு'/><title type='text'>அனைவரும் வருக!!!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;அதிகாலைநேரத்தில் பனிப்புகையுடன் தொண்டையில் பரவும் சூடான தேநீர், மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவே வருகிற &lt;b style="background-color: yellow;"&gt;திசம்பர் 26 ம் தேதி&lt;/b&gt; ஈரோட்டில் நடைபெறவிருக்கின்ற பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கான மாபெரும் &lt;a href="http://erodetamizh.blogspot.com/2010/12/2010_07.html"&gt;&lt;b style="background-color: yellow;"&gt;சங்கமம்‘2010. &lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் இணைந்த கண்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும். காத்திருக்கிறோம் அனைவரின் அகமும் புறமும் மகி(ழ)ழ்த்த.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TQdAO6hn3vI/AAAAAAAAA20/FDv0KYCxiZU/s1600/sangamam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="167" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TQdAO6hn3vI/AAAAAAAAA20/FDv0KYCxiZU/s320/sangamam.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="background-color: lime;"&gt;நாள்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; : 26.12.2010 ஞாயிறு&lt;/span&gt;&lt;br style="background-color: lime;" /&gt;&lt;span style="background-color: lime;"&gt;நேரம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; : காலை 11.00 மணி&lt;/span&gt;&lt;br style="background-color: lime;" /&gt;&lt;span style="background-color: lime;"&gt;இடம் &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; : டைஸ் &amp;amp; கெமிக்கல்ஸ் மஹால்&lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="background-color: lime;"&gt;URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;நிகழ்ச்சி முன்னோட்டம்: - &lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* பதிவர்கள் அறிமுகம்&lt;br /&gt;* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்&lt;br /&gt;* சிறுகதைகளை உருவாக்குவோம்&lt;br /&gt;* புகைப்படங்களில் நேர்த்தி&lt;br /&gt;* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்&lt;br /&gt;* உலகத்திரைப்படங்கள்&lt;br /&gt;* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்&lt;br /&gt;* பதிவர்கள் கலந்துரையாடல்&lt;br /&gt;&lt;br /&gt;காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்&lt;br /&gt;உங்கள் வருகையே நம் வெற்றி!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புகளுக்கு:&lt;br /&gt;erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-624794239545781232?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/624794239545781232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=624794239545781232' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/624794239545781232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/624794239545781232'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/12/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95.html' title='அனைவரும் வருக!!!'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TQdAO6hn3vI/AAAAAAAAA20/FDv0KYCxiZU/s72-c/sangamam.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-1661514666274607541</id><published>2010-12-10T18:03:00.000+05:30</published><updated>2010-12-10T18:03:26.096+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>காஞ்ச மலர்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;எந்த திசையுமின்றி விசைகளுக்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. பறவையன்றி, விமானத்தின் நிழல்போல ஒரு செயற்கை நேர்கோடு பின்தொடர்ந்தே வருகிறது. குருவிகள் இறந்தபின்னும் கூண்டுக்குள் சிதறிக்கிடக்கும்&amp;nbsp; இரைகள்போல எதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. எதேச்சையாக பார்க்கின்ற ஓர் உயிரின் மீதான பரிவும் பச்சாதாபமும் ஆயிரம் மரங்களில் தன்னுடைய வசிப்பறியும் கோடைக்கால பட்சிகளாய் அமர்ந்துகொண்டு பழையதை உடைத்துக்காட்டுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த இலுப்பைத் திடலில் சுள்ளிப் பொறுக்கும் பெண்களுக்கும், காலைநேரத்தில் நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் செய்து உடலைக்கரைக்கும் ஜாம்பவான்களுக்கம்,&amp;nbsp; அருகிலுள்ள சாராயக்கடையில் மொய்க்கும் ஈக்களுக்கும்கூட அவளை நன்றாகவே தெரியும். நான் பார்க்கும் பொழுதுகளில் எப்போதும் ஒரு இலுப்பை மரத்தை உதைத்துக்கொண்டேயிருப்பாள். புழுதியில் கருத்துப்போன நாடா அறுந்த பாவாடையும், அதன்மேல் இறுக்கி கட்டப்பட்ட ஒரு சணல் கயிறும், ஜாக்கெட் என்று சொல்லமுடியாதபடிக்கு ஆங்காங்கே உறிந்து தொங்கும் ஏதோவொரு மேலங்கியும் அவளின் அடையாளத்திற்கு போதுமானது. பள்ளிப்பருவத்தில் அதன் பக்க மைதானத்தை மேயும்&amp;nbsp; இளம்பிஞ்சிகளுக்கு அவள் ஒரு பொருட்டல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகட்டத்தில் அவளை அன்றாடம் காண்பது என் வழக்கமாயிற்று. மரத்தை அவள் உதைக்கும்போது வசை வார்த்தைகள் சரமாரியாக வந்துகொண்டேயிருக்கும். கண்டிப்பாக அவள் ஒரு ஆண்மகனை உருவகப்படுத்திதான் மரத்தினை உதைத்திருக்கிறாள். சரிதான் எத்தனைப் பெண்களுக்குத்தான் தைரியம் இருந்திருக்கிறது புத்தி சுவாதீனத்துடன் ஓர்&amp;nbsp; ஆடவனை&amp;nbsp; உதைக்க? அவளைக் கடந்தபின்பும் வெகுநேரம் அவளிடமே மனது சுற்ற ஆரம்பித்தது. இவள் மட்டும் ஏன், இப்படி, எப்படி, உண்டு, உடுக்க என்ன செய்வாள்? எத்தனையோ கேள்விகள் அலைந்துகொண்டேயிருக்கும். ஒருநாள் மாலைவேளையில்தான் கவனித்தேன். எவனோவொருவன் ஒரு பாக்கெட்டை (சாராயம்) அவளிடம் கொடுத்தான். வாஞ்சையுடன் அவரசமாக மடிக்குள் புதைத்துக்கொண்டாள். மறுபடி அவன் நின்றானா போய்விட்டானா என்பதை கவனிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அருகிப்போன மானுடப்பண்பு எங்கும் கோலோச்ச இனியேதும் காலமிருக்கிறதாயென்ன? கொஞ்சமாக அவளை கவனிக்கத் தொடங்கினேன். அவள் உடலில் மாற்றம். சிறுது காலம் கழித்து அவள் கைகள் நிறைய பழைய வளையல்களை அணிந்திருந்தாள். நெற்றியில் எதோ கொஞ்சம் சிகப்பு நிறம். முதலில் ரத்தமாக இருக்குமென்று நினைத்தேன். இல்லை. அவள் உடலில் வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்தது.&amp;nbsp; எனக்கு புரிந்தது, அவள் கருத்தரித்திருந்தாள். நாடெங்கிலும் அலையும் காமக்கண்களுக்கு ஏது பஞ்சம், எவனோ ஒருவன் காரணமாக இருக்கலாம். ஒரு புத்தி சுவாதீனமற்றவளை தின்றுப்பார்த்தவன் எந்தக்கொம்பனாக இருப்பான்? என்னால் யூகிக்க முடியவில்லை. மீண்டுமொரு இடைவெளி. பிறகு அவளைப் பார்த்தநாள் ஆற்றமுடியாத பாரத்தை கொடுத்தது. அவள் இறந்துகிடந்தாள், ஈக்கள் மூடிய உடலுடன். அருகில் கிடந்த அவளின் கிழிந்த ஆடைகளெங்கும் மர்மக்கறைகள். அந்த இலுப்பை மரம் அப்படியேத்தான் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-1661514666274607541?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/1661514666274607541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=1661514666274607541' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/1661514666274607541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/1661514666274607541'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/12/blog-post.html' title='காஞ்ச மலர்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-6880889313389213864</id><published>2010-11-26T18:43:00.001+05:30</published><updated>2010-11-26T18:47:34.715+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>கௌரவம் - ஆ</title><content type='html'>காதுல கிடக்கிற&lt;br /&gt;குண்டுமணி சைஸ் தோடும்&lt;br /&gt;கையில இந்த&lt;br /&gt;அலுமினிய வளையலும் போதும்&lt;br /&gt;&lt;br /&gt;கழுத்துக்கு மட்டும் எப்போதும்போல&lt;br /&gt;சந்திராவோட முருக்கு செயின்&lt;br /&gt;ஏன்னா..&lt;br /&gt;அதுதான் எடுப்பாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளும்&lt;br /&gt;அதே கல்யாணத்துக்குப்போனா&lt;br /&gt;இருக்கவே இருக்கு&lt;br /&gt;சரசோட இன்னொரு சீரகச் சங்கிலி&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே தெருவுல விஷேசம்னா&lt;br /&gt;வேறவழியில்ல..&lt;br /&gt;கழுத்தொட்டிக் கருத்துப்போன&lt;br /&gt;சிதம்பரம் கவரிங்‘தான்&lt;br /&gt;&lt;br /&gt;கிராக்கி பண்ற&lt;br /&gt;சகுந்தலாகிட்டயும் கல்யாணிகிட்டவும்&lt;br /&gt;எப்பவுமே கேட்கிறதில்ல&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குன்னு&lt;br /&gt;ஒரு கௌரவம் இருக்குல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;••••••••••••••••••••&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூன் கட்டின மூங்கித்தடியும்&lt;br /&gt;ஒரு கம்பி விட்டுப்போன குடையுந்தான்&lt;br /&gt;தர்மலிங்க தாத்தாவோட அடையாளம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கல்யாணம் காட்சி&lt;br /&gt;நம்ம திம்மன்னா&lt;br /&gt;சும்மா கூப்பிட்டாப்போதும்&lt;br /&gt;எட்டு மொழ வேட்டியும்,&lt;br /&gt;காசித்துண்டோடையும் வந்திடுவாரு&lt;br /&gt;&lt;br /&gt;வாசல்ல நிக்கிறவன்&lt;br /&gt;வாங்கன்னு&lt;br /&gt;கூப்பிடலன்னா அவ்ளோத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;மொய்ய எழுதிட்டு&lt;br /&gt;வீராப்பா போயிடுவாரு&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கால்லதானயா செருப்பில்ல&lt;br /&gt;கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://balasee.blogspot.com/2010/02/blog-post_19.html"&gt;கௌரவம் - அ&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-6880889313389213864?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/6880889313389213864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=6880889313389213864' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/6880889313389213864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/6880889313389213864'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/11/blog-post_26.html' title='கௌரவம் - ஆ'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2160096440513219675</id><published>2010-11-19T18:10:00.000+05:30</published><updated>2010-11-19T18:10:46.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உறவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>ஏன்யா இந்த காண்டுவாதம்?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சாதாரணமாவே கல்யாணம் முடிச்சு புதுபொண்டாட்டிய அம்மாவோட விட்டுட்டுப்போற வெளியூரு மாப்ளைகள் பாடு திண்டாட்டம். இதுல பயபுள்ள ஃபாரின்ல இருந்தா கேக்கவாவேணும். இப்டித்தான் எதுத்த வீட்லையும், பக்கத்தால லலித்தாக்கா, அதுக்கடுத்தால ஆனந்தி பெரிம்மா வீட்லையும் பசங்களுக்கு கல்யாணம் முடிச்சி அந்தப்பயலுங்க மூணுமாசம் லீவு முடிஞ்சி ஃபாரின் போயிட்டானுங்க. ஒரு வருசம் முடிஞ்சி புள்ளப்பெத்தபெறவுன்னு அதுவரைக்கும் மாமியா மருமகக்குள்ள எந்த பிரச்சனையுமில்ல. பாராட்டத்தான் செய்யணும். லைட்டா ரெண்டாவது வருசம் தீவாளி, பொங்கலுக்கு வரிசை வய்க்கிறப்பத்தான் எழவெடுத்த சண்ட ஆரம்பிச்சுது. முதல்ல லலித்தாக்கா வீட்ல. அஞ்சு தட்டு நெறைய சாமான்ங்கள&amp;nbsp; பொங்கச்சீரா அடுக்கிக்கொண்டுவந்தாலும் நொட்டாரம் சொல்ற மாமியாக்காரிங்க எங்கதான் இல்ல. அந்த நொல்லக்கண்ணு லலிக்கு மட்டும் இல்லாமலா போயிடும். என்மொவன் வெளிநாட்ல அவ்ளோ சம்பாரிக்கிறான், நாதியத்த குடும்பத்துல பொண்ணுகட்டி ஒண்ணுத்துக்கும் வழியில்லாம போயிடுச்சுன்னு அக்கம்பக்கத்து அக்காக்களோட சாயந்தரம் ஆனா கதையளக்க ஆரம்பிச்சிடும். கடைசியிலப்பாத்தா இந்தம்மாளோட பொண்ணுக்கு புருஷங்காரனவிட்டு மணியார்டர்ல 200, 300 ஓ அனுச்சிட்டு அடுத்தவன கொறசொல்லும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆத்துக்குப்போறவ அன்னாந்துகிட்டே போவாளாம், கூத்துக்குப்போறவன் குனிஞ்சிகிட்டே போவானாம் அந்த கதையா பெட்ரூமு, பைப்படி, அடுப்படி, சன்டிவி, ஆனந்தவிகடன், மாட்டுக்கொட்டா, ஏனம் வௌக்கறது, துணி தொவைக்கிறதுன்னு தன்னோட கோவத்தல்லாம் காட்டிட்டே பொழுத ஓட்டுற மாட்டுப்பொண்ணு சும்மாவா இருப்பா. தன்ன திட்டினாலும் கோவப்படாத எந்த பதுசான மனுஷிக்கும்&amp;nbsp; அப்பனாத்தால திட்டனா பொசுக்குன்னு வரத்தான் செய்யும். கோவத்துல ஒன்னு அழுவா, இல்லன்னா டக்குன்னு எதாவது ராங்கி ரப்பான வார்த்தையா கொட்டிடுவா. மாமியாளோட ஆட்டத்த ஆரம்பிக்க இதோட காரணம் வேணுமாயென்ன. அப்பறமென்ன ஈருகுளில்ல மாட்டின பேன் கதைதான் புதுப்பொண்ணோட பொழப்பு•. அது என்னமோத் தெரியல. எல்லா மாமியாக்காரிகளும் அம்மாவா இருக்கிறவரை நல்லாத்தாங்க இருக்குதுங்க. மருமக வந்தா அப்டியொரு குஜால் ஆயிடுதுங்க. சிக்கிட்டாடா ஒரு அடிமைங்கிறமாரி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈர நாக்குல யாருக்குத்தான் எலும்பிருந்திருக்கு. தெருக்கள்ல பாத்திங்கன்னா கட்டுக்கழுத்திங்கன்னு நாலுபேரு இருக்கும்ங்க. எங்கன கல்லு கருமாதி, நல்லதுகெட்டது, சாதி சடங்கு, சீமந்தம், வளயகாப்புன்னாலும் ஆரத்தியெடுக்கறதுக்கும் அம்மிக்கல்ல தூக்கி நேரா மூணு சுத்து, ரிவர்ஸ்ல மூணு சுத்து சுத்தறதுக்கும் இதுங்கத்தான் முன்னாடிப்போயி நிக்குங்க. ‘யக்கா பாத்துப்பாத்து கொண்டாந்த மருமவ ஒன்னையே எதுத்து பேசிட்டாம்ல. அப்டி என்னக்கா அவ்ளோ அதப்பா அவளுக்கு’ன்னு மூக்குப்பொடிய மூஞ்சிலத்தூவினாமாரி ஏத்தி விட்டுடுங்க. இதுக்கெடையிலத்தான் ரூமுக்குள்ள குமுறி குமுறி உட்காந்திருக்கிற மருமவ சிறிக்கி ஏர்மெயில் கவர் வாங்கி கண்ணீர் கடிதத்த ஆரம்பிக்கும்.. ‘அன்புள்ள அத்தான், அவ்வ்வ்வ்வ்வ்வ்....... ’ அதுக்கப்பறம் சொல்லவா வேணும், வந்தது போனது, நடந்தது நடக்காதது எல்லாத்தையும் நாலு பக்கமா எழுதி போஸ்ட் ஆயிடும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுக்கு முன்னாடியே ஆத்தாக்காரி 8 பக்கத்துக்கு கொறயாம எதுத்தவீட்ல எவனாச்சும் என்னாட்டம் இளிச்சவாயன் இருந்தான்னா எழுதச்சொல்லி ‘இங்க பாருடா மோகனு, உம் பொண்டாட்டி சரியில்ல, எது சொன்னாலும் எதுத்து எதுத்து பேசுறா, எதாச்சும் வேல சொன்னா மூஞ்ச சுழிச்சிக்கறா, ஆவூன்னா ரூமுக்குள்ள போயிடுறா, கரண்டு இல்லன்னா இந்த கொடகல்லுல ஆட்டுனா என்னா? அதகூட செய்யமாட்டுறா, அதென்னமோ குசுகுசுன்னு ஒரு நாளைக்கு ரெண்டு தரம் அவவீட்டுக்கு போன் பண்ணி கொறசொல்றா, போன் பில்லு நறையா வருது, சோறு போடுறப்ப தட்ட கீழ வச்சி சல்லுன்னு தள்ளிவிடுறா, உங்கொழந்தைய கொஞ்சநேரம் கொஞ்சக்கூட விடறதில்ல, சாயந்தரம் ஆனாவே பொட்டுதான் பூவுதான் சென்ட்தான். மேக்கப் போட்டுகிட்டு சித்ரா வீட்டுக்கு போயிடுறா, அவளும் இவளும் என்னதான் அப்டி பேசுவாங்களோ தெரியல, திரும்பி வர 9 மணிஆவுது. அதுவரைக்கும் எனக்கு சோறு போடறதில்ல. பேசி முடிச்சிட்டு வந்தப்பறம்தான் எனக்கு சோறு போடுறா. நானே போட்டு சாப்புட தெம்பாயிருக்கு. அவளோட சேர்மானம் சரியில்ல சொல்லிட்டேன் ஆமாம். அப்பா அன்னைக்கு எதோ சொன்னதுக்கும் எதுத்து பேசுறா, இது சரியில்ல. நானும் நீ மனசு கோணக்கூடாதேன்னுதான் எல்லாத்தையும் பொருத்துக்கிறேன். இப்பவும் நீ நல்லாருக்கனும்னுதான் நெனக்கிறேனே ஒழிய நான் என்னத்த மூட்டக்கட்டிகிட்டு போவப்போறேன் (ரெண்டு சொட்டு கண்ணீரு) சொல்லு. உம்பொண்டாட்டிய அடக்கி வைய்யி, இல்லன்னா உம் அம்மாவ நீ உசிரோட பாக்கமுடியாது. அவ்வ்வ்வ்வ்’ அப்பறம் எடையில எடையில மானே தேனே பொன்மானே.....&lt;br /&gt;&lt;br /&gt;ங்ங்கொய்யால இந்தமாதிரி லெட்டர படிக்கிறவன் துபாயிலையும், சிங்கப்பூருலையும் நிம்மதியா வேலை செய்யமுடியும்கிறீங்க. ஏறச்சொன்னா எருதுக்கு கோவம் வரும், இறங்கச்சொன்னா நொண்டிக்கு கோவம் வரும்னு ஒரு பழமொழி உண்டு. இந்த மத்தளத்துல ரெண்டுபக்கமும் அடிவாங்குற தோலு மாதிரி கல்யாணம் முடிச்சிட்டு ஃபாரின் போற மாப்பிள்ளைங்க பொழப்பு நாத்தப்பொழப்புங்க. இதுங்க ரெண்டுபேரையும் சமாளிச்சு ஒருவழியா ஓஞ்சிப்போயிடுவான் அந்த படுபாவி. அது ஏன்டா உனக்கு இந்த ஃபீலிங்குன்னு நினைக்கிறீங்களா? ஏரி நிறைஞ்சா கரை கஸ்ஸ்ஸ்ஸியத்தானங்க செய்யும். எங்கத்தெருவில அஞ்சாரு குடும்பங்கள்ல இந்த நெலமத்தாங்க. இதெல்லாம் நெனச்சுப்பாக்குறப்பதான் ஏன்யா இந்த காண்டுவாதம்னு தோணுது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TOZv0Z5EydI/AAAAAAAAA04/IPZC3Nh4DtY/s1600/smileyfight.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TOZv0Z5EydI/AAAAAAAAA04/IPZC3Nh4DtY/s1600/smileyfight.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-2160096440513219675?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/2160096440513219675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=2160096440513219675' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2160096440513219675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/2160096440513219675'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/11/blog-post_19.html' title='ஏன்யா இந்த காண்டுவாதம்?'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TOZv0Z5EydI/AAAAAAAAA04/IPZC3Nh4DtY/s72-c/smileyfight.gif' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7388564725797661022</id><published>2010-11-12T17:53:00.000+05:30</published><updated>2010-11-12T17:53:42.839+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை...'/><title type='text'>பாட்டி...</title><content type='html'>வெற்றிலைக்காம்பை கிள்ளி&lt;br /&gt;வெகுசுலபமாய்&lt;br /&gt;வாசல் குப்பைகளில்&lt;br /&gt;போட்டுவிடுகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டுத் தொங்கும்&lt;br /&gt;காதுமடல் குண்டலத்தை&lt;br /&gt;இழுத்து விளையாடும் விரல்களிலிருந்து&lt;br /&gt;விடுதலையும் கிடைத்தாயிற்று&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கச்செய்யப் பாடும்&lt;br /&gt;‘என் செல்லமே கண்ணுறங்கு’&lt;br /&gt;தாலாட்டும் கதைகளும்&lt;br /&gt;நின்று காலமாகிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;முந்தியில் முடிந்திருக்கும்&lt;br /&gt;ஒன்றிரண்டு ரூபாயைப்பிடுங்கி&lt;br /&gt;கடுக்காய் மிட்டாய் வாங்கிச்&lt;br /&gt;சாப்பிடவும் யாருமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;குடலேற்றம் வந்தால்&lt;br /&gt;முதுகை தட்டி வயிற்றை நீவி&lt;br /&gt;குணமாக்கவேண்டிய கடமையும்&lt;br /&gt;இல்லாமல் போனது&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டில்...&lt;br /&gt;மின்சாரம் நின்றால் திரும்பிப்பார்க்க&lt;br /&gt;அம்மியும் இருக்கிறது&lt;br /&gt;அவளும் இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-7388564725797661022?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/7388564725797661022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=7388564725797661022' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7388564725797661022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7388564725797661022'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/11/blog-post.html' title='பாட்டி...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7262719413527398108</id><published>2010-10-29T18:03:00.001+05:30</published><updated>2010-10-29T18:19:56.067+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நந்தி...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பிரதோஷந்தோரும் மௌன விரதமிருக்கும் பழக்கம் எனக்குண்டு. ஏன் ஆரம்பித்தேனென்று தெரியவில்லை. பெரும்பாலான ஆண்கள் இவ்விரதமிருப்பதில்லை. ஆனால் நானிருக்கிறேன். இந்தநாளில்தான் ஒருவேளை உணவுக்கும், அவ்வப்போதைய தொண்டை நனைத்தலுக்கும் இந்த உதடுகளை புணரவிடுதல் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஒரு தனி அறை முற்றிலுமொரு மயான அமைதியை தரவல்லதாதலின் இவையெல்லாவற்றிற்கும் உகந்தது. இன்று மாலை ஈஸ்வரன் கோவில் செல்லும்வரை இதுதான் என்னுலகம். இந்த சாலை பார்த்தமாதிரியான சன்னலும் வடக்கிலிருந்து வீசும் மெல்லிய கிழிசல் காற்றும் அனுபவிக்க அனுபவிக்க சுகந்தம். மனிதிலிருக்கும் தாண்டவ அமைதி இந்த நாளை தவிர்த்து மற்றைய நாட்களில் கிடைப்பதில்லை என்பது என் அனுபவ உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தனியறையில் வியாபித்திருக்கும் அத்தனைப்பொருட்களுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. அதையுணரக்கூட எனக்கிந்தப் பொழுது தேவைப்படுகிறது. இந்த நாற்காலி, மேசை, அரிக்கன் விளக்கு, சுவர் மூலையிலிருக்கும் அடுக்குப்பானைகள், மேசைமீது அடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள், அந்த எம்ப்ராய்டரிங் திரைச்சீலைகள் இப்படியாவும் இந்தவொருநாளில்தான் அழகாய் தெரிகிறது, மற்ற நாட்களில் எனையாட்கொள்ளும் இயந்திரத்தன்மை இவையனைத்தையும் கண்மூடி மறைத்துவிடுகிறது. இந்த நாளும், நான் பார்க்கும் இந்த சாலையும் அதில் பயணிக்கும் மனிதர்களும் என் பெருஞ்சுமையென்பது யாருக்குத்தெரியும்?. ஏனோ தெரியவில்லை, இதையனைத்தையும் நானே விரும்பி ஏற்கிறேன். ஒரு நாள் முழுதும் மலரும் அனைத்துப்பூக்களும் பூஜைக்குரியதாகவோ அல்லது ரசிப்பதற்குகந்ததாகவோவா இருந்துவிடுகிறது? எதோவொன்றேனும் குறைபட்டுதான் விடுகிறது. அதுபோலவே நான்பிறந்த அன்றையநாளில் என்கால்கள் விண்ணப்பட்டிருந்தது. ஈஸ்வரன்கோவில் நந்தியினுருவம் உங்கள் மனதிலிருக்கும். அதுபோல்தான் எனக்கும் எப்போதும் அமர்ந்தநிலை. அதற்காக எந்த ஈஸ்வரன் என்னெதிரே அமர்ந்திருக்கிறான் அல்லது அனுதினம் விஷேசப்படுகிறானென்று தெரியவில்லை. அதன் கால்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தப்பெரிய நந்தியின் கால்கள் எவ்வளவு சிறிதாக சோம்பிக்கிடக்கும், அதேதான். இப்போது என்னை உருவகப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி மக்கள், குடும்பச்சுமை, உறவுகள், நல்லதுகெட்டது, நாள் கிழமை இப்படியிவை எதுவுக்கும் லாயக்கற்றவனென்பது எனக்கு கொடுக்கப்பட்ட வரம். கொஞ்சம் வசதியானதுதான். சென்றமாதம் நான்சென்ற வினோத்தின் திருமணம் நீங்கலாக வேறெதிலும் நான் பங்கேற்பதில்லை. அவன் என் பால்ய சிநேகிதன். அவனல்லால் வேறொருவன் என்னை வெகுவாக கவர்ந்ததில்லை. ஒவ்வொருநாளும் என்னை மொய்க்கும் பரிதாபக்கண்களுக்கு மத்தியில் அவன் என்னை உணர்ந்தவன் என்றால் மிகையில்லை. எவ்வளவு ஆழமான நட்பு அவனுடையது. நினைத்துப்பார்க்கையில் இப்போதும் இனித்துக்கொண்டேயிருக்கிறான். பதினெட்டு வருட நட்பில் இடையில் மனக்கசப்பில் ஒருவருடம் பேசாமல் இருந்திருக்கிறோம். என்தவறுதான் அது. அதுவொரு ஆழ்ந்த வலி, இருவருக்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய நாளில் எனக்கு அறிமுகமானவன்தான் சிவா. அவன்மூலம்தான் இந்த அலுவலகப்பணி எனக்கு கிடைத்தது. இதுவும்கூட ஒரு ஆத்மார்த்தமான நட்பு. ஆயினும் என்னுள் எழும் பொறாமைக் குணம் அனைத்தையும் கெடுத்துவிடுமோ என்ற அச்சம்மட்டும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொருநாளும் அவன் அலுவலகத்திற்கு வரும்விதம், நடையுடைகள், பாவனைகள். வெகுவாக இம்சிக்கிறது. கட்டுடலும்  செந்தோல் கவர்ச்சியுமிக்க ஒருத்தியை கண்கொட்டும் பார்வையில் அள்ளித்தின்னும் உணர்வு எந்தவொரு பருவமெய்தவனுக்கும் இருக்கத்தான் செய்யும். அதுபோலவே அவனின் தோற்றமும் நடையுடையும் என்கண்களை கொத்திக்கொள்கிறது. என்ன செய்ய? என் ஊனம் பிச்சிப்பிடுங்கும் கழுகாக சாகடிக்கிறது. நான் வணங்கும் தெய்வம் எனையேன் இப்படி சபித்தது, சபிக்கிறது என்று எண்ணும்போதெல்லாம் இவ்வுடலின் மீதுரும் வெறுப்பு அளவில்லாதது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மாற்றுத்திறனாளியாம், சிறகற்றப் பறவைக்கு இச்சமூகம் காட்டும் அற்ப அக்கறை. எந்த கொம்பனுக்கு தெரியும் என் அன்றாட அவஸ்தைகளும், வேதனைகளும் இன்னபிறவும். பார்ப்பதற்கு நானொரு சக மனிதன்தான். ஆனால்..ஆனால்...இந்த கால்...ச்சை..ச்சை.. சிவா மீதான நட்பு எப்போதும்போலிருப்பினும் அவன் மீதான வெறி என்னுள் தலைதூக்கத்தொடங்குகிறது. அதிலும் அவன் கரும்பச்சை பேண்ட், அதற்கு தகுந்தார்ப்போல் அணியும் வெளிர்நிற சட்டையும் நடக்கும்போது இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுச் செல்வதும்.... என்ன சொல்ல? அவன் கோப்புகளைச் சுமந்து  எனைகடக்கும்போதும், அலுவலகத்தில் இடையிடையே நடந்துசெல்லும்போதும் என்னையறியாமல் அவனை சபிக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள். என் மீது எனக்கே பரிதாபம் உண்டாகும் அல்லது உண்டாக்கும் கணங்கள் யாவிலும் என் சாபம் எவரையோ நோக்கி பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் என்னைப்பற்றி என் நாட்குறிப்பேட்டில் எழுதிய வரிகள் ஒன்று ஞாபகம் வருகிறது. ‘என் வாழ்க்கை இருட்டறையில் எழுதப்பெற்றதொரு தொடர்கதை‘ எவ்வளவு உண்மை. இதையேன் எழுதினேன் தெரியவில்லை. எதோவொரு அற்பாசையும் அதன்மூலம் பெற்ற வெறுமையும் இதை எழுத காரணமாயிருந்திருக்கக்கூடும். இப்போது ஞாபகம் வருகிறது. ஒரு நாள் நான் எழ முயன்றேன். என் உள்ளங்கால்களை இப்புவியிலழுத்தி நிற்க முயன்றேன். எவர்எவர் மீதானோ ஈர்ப்போ வெறியோ எனையிப்படி செய்யத்தூண்டியது. ப்ச்..இது தோல்விதான் என்பது தெரிந்தே செய்யப்பட்ட முயற்சி. எல்லோருக்கும் ஒரு கனவிருக்கும். எனக்கும் இருக்கிறது இவ்வாழ்நாளில் ஒருநிமிடமேனும்  சிவாவைப்போல வாழ்ந்து இல்லையில்லை நடந்துவிடவேண்டும். ஸ்டைலாக இந்தக் கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு கோப்புகளை அலுவலக அறையெங்கும் எடுத்துச்செல்லவேண்டும். அப்படியே இறந்துவிடலாம். என் பிறவிப்பயன் முழுமைபெறும். இப்போது ஈஸ்வரன்கோவில் செல்கிறேன். வழக்கம்போல நந்திதான் இன்றைய முக்கியஸ்தர். எனக்கு அதன் கால் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-7262719413527398108?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/7262719413527398108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=7262719413527398108' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7262719413527398108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7262719413527398108'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/10/blog-post_29.html' title='நந்தி...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-680542326048179759</id><published>2010-10-25T18:20:00.001+05:30</published><updated>2010-10-25T18:27:38.820+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>ஒரு கூடும் சில குளவிகளும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;" id=":19o"&gt;நான் வந்த பேருந்தில் ஏறியவர்கள் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். தொடை  உயரம் ஒரு மகன், இன்னொரு குழந்தை அப்பன் தோளில் தூங்கியது. அவர் கையில்  பால் பாட்டிலும் தயாராகவே இருந்தது. பேருந்தினுள் நான்குபேர் இடைவெளியில்  இருவரும் நின்றுகொண்டார்கள். மூக்கொழுகும் பெரிய மகன் அவளின் காலை  கட்டிக்கொண்டான். ஒரு கையால் மேல்கம்பியை பிடித்துக்கொண்டாலும், மறுகையில்  துணியடைத்த குச்சிப்பையை வைத்துக்கொண்டாள். ஒருவரின் மூச்சுகாற்று  அடுத்தவர் முதுகில் சூட்டைப்பரப்புமளவு கூட்டம். இருவர் இருக்கையில்  அமர்ந்திருந்த குண்டு சிறுக்கிகளுக்கு மூன்றுபேர் இருக்கையே தாங்காது.  அவர்களின் தள்ளுமுள்ளலும் இவளுக்குத்தான் இடைஞ்சல். அவ்வப்போது விலகும்  மாராப்பையும், இடுப்புச்சேலையையும் சரிசெய்துகொண்டாள். அருகருகே நிற்கும்  ஆண்களின் இடிசலுக்கும், நடத்துநர் நடையழகுக்கும் ஓர் உடலங்கத்தை அவள்  ஒதுக்கிவைத்தே ஆகவேண்டும். இந்த மேடுபள்ள சாலையில் பயணிப்பதில் ஆண்களுக்கே  அடிவயிறு கலக்கும் அபாயம் உண்டு. ஐந்தாவது முறையாக பெரிய மகனின் ஒழுகும்  மூக்கை முந்தானையால் துடைத்துவிட்டாள். ஒரு வேகத்தடையை கடந்தது பேருந்து.  அப்பனிடம் தூங்கிய குழந்தை விழித்துக்கொண்டது. இவளைப்பார்த்து  அழத்தொடங்கியது. அவர் பாலைக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார்,  குடிக்கவில்லை. அனைவரும் கவனிக்க தொடங்கினர், சிலருக்கு எரிச்சலும்கூட.  அப்பன் கையில் திமிரிய அந்தப்பொடிசை அவளே வாங்கிக்கொண்டாள்.  ‘ச்ச்சுச்சூ...ச்ச்சுச்சூ...ஏஞ்&lt;wbr&gt;செல்லம் அழுவுறீங்க.....’ என்றபடியே  இடுப்பில் அமர்த்தி முத்தமிட்டாள், அவ்வளவுதான்....அதுவும் சிரித்தது,  அவளும் சிரித்தாள்..... நான் இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;•••••••&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா மகள் தன் குறிப்பேட்டைக்காட்டி ’மாய்மா...இத பாறேன்’ என்றாள். ‘அ’னா‘வை அழகாக எழுதியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ரொம்ப நல்லாயிருக்கே நீங்களா எழுதினீங்க?’என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ம்ம்ம்’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘எந்த மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க?’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹர்ஸா மிஸ்’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓ...எங்க மறுபடி எப்டின்னு போட்டுக்காட்டுங்க பார்ப்போம்’&lt;br /&gt;&lt;br /&gt;‘பர்ஸ்ட் மேலவொரு ஸ்மால் சர்க்கிள் இப்டி போட்டுட்டியா, அதுக்கு கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசான்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோத்தான்.......’&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள், மாமா பூரித்திருந்தார். ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழ்பண்டிட் பொன்னுசாமி அய்யா என் விரலைப்பிடித்து சிலேட்டில் ‘அ’ எழுதிக்காட்டியதை நினைத்துக்கொண்டிருந்தேன். விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;•••••••••&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் அவளை நினைத்துப்பார்ப்பதை குறைத்துவிட்டேன். ஓர் அகண்டவாய் ஏனமாக இன்றைய நிலை மாறிவிட்டதாலோ என்னமோ கொண்டதெல்லாம் கொண்டுவிடுகிறது. அவளென்னுள் படிந்த வேகம் ஒரு குறுகிய காலம். ஒரு ஜென்ம பகையும், ஏழு ஜென்ம நினைவுகளையும் மனதிலிருந்து சுரண்டமுடியாமல் செய்துவிட்டாள். ஒரு பெட்டிக்குள் அடைபட்டுள்ள துணிகளாய் வர்ணவர்ணமாய் அவளின் காதல் அடைந்துகிடக்கிறது. அவ்வப்போதைய கனவுகளும், சில பெருவெளி தனிமையும்  அணிந்துகொள்வதோடு சரி. முக்கி முனகி நான்கு வருடங்களை கடந்துவிட்டேன். அண்ட சராசரங்களனைத்தும் ஒரே ஜீவனுக்குள் அடக்கிவைத்திருந்திருப்பதாய் பாரமாகவே கழிகிறது பொழுதுகள். ஒரு கழுமரமும் அதிலமர்ந்த காகமுமாய்த்தான் மடிந்து புலரும் பொழுதுகள் கண்ணாம்பூச்சிக்காட்டி ஓடி ஓடி மறைகிறது. எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டி மட்கசெய்துவிடத்தான் பார்க்கிறேன். போகும் வழியெங்கும் சேகரிப்பது குப்பைகளாகவே இருப்பின் எதை எங்கே கொட்ட.&lt;br /&gt;&lt;br /&gt;•••••••••&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய இரவுப்பொழுதை பேருந்துப்பயணம் மேயந்துகொண்டது. காலையிலதுமிழ்ந்த வெளிச்ச உலகில் மாற்றமேதுமில்லை. சென்றவருடத்தைவிட இப்போது 2 கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். தா(டி)டை முடிகள் சற்றே கூர்மையடைந்து காணப்படுகிறது. மீசை(?!!!)யில் கருமை அடர்ந்துள்ளது. வலது காதுமடல் மேல் ஒரு வெள்ளை மடையானின் இறகு நீட்சி. சென்றவருடம் இது இல்லை. ஒரு இருட்டறையும், அதிலமர்ந்து வாசிக்கும் தொடர்கதையுமாக இவ்வாழ்க்கை புரண்டுகொண்டேயிருக்கிறது எதுவும் புலப்படாமல் அல்லது படுத்தாமல். வெறுமனே புரட்ட 27 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் மணலில் காற்கூடு கட்டிக் கழித்த வயதுதான் இப்போதைய கனவுகளை சொரிந்து சுகப்படுத்துகிறது. வேறென்ன சொல்ல. இந்த நாளையினிமையாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த  நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-680542326048179759?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/680542326048179759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=680542326048179759' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/680542326048179759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/680542326048179759'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/10/blog-post_25.html' title='ஒரு கூடும் சில குளவிகளும்'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-1107218878080001868</id><published>2010-10-14T19:08:00.002+05:30</published><updated>2010-10-14T19:21:32.214+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>புராதானங்கள் அபாய நிலையில்!!!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TLcFuzuPEYI/AAAAAAAAAzs/2ueP1lB0jrQ/s1600/mg_6254.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TLcFuzuPEYI/AAAAAAAAAzs/2ueP1lB0jrQ/s320/mg_6254.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5527893369336828290" border="0" /&gt;&lt;/a&gt;ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி, (இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TLcFozaZ_TI/AAAAAAAAAzk/0Amod7sgwdk/s1600/mg_6242.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TLcFozaZ_TI/AAAAAAAAAzk/0Amod7sgwdk/s320/mg_6242.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5527893266174442802" border="0" /&gt;&lt;/a&gt;தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color:red;"&gt;மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கீழ்கண்ட மின் அஞ்சலை அனுப்புங்கள்.&lt;/span&gt; &lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="color: red;"&gt; வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு  செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி:-&lt;br /&gt;&lt;div&gt; &lt;a href="mailto:collr.tnpdk@nic.in" target="_blank"&gt;collr.tnpdk@nic.in&lt;/a&gt; மற்றும் &lt;a href="mailto:collrpdk@tn.nic.in" target="_blank"&gt;collrpdk@tn.nic.in&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செய்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial black,sans-serif;"&gt;To&lt;/span&gt; &lt;div&gt; &lt;span style="font-family:Arial Black;"&gt;The Collector,&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;span style="font-family:Arial Black;"&gt;Pudukottai Dist.&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;span style="font-family:Arial Black;"&gt;Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;span style="font-family:Arial Black;"&gt;Regds:\&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;http://fourthpillar.wordpress.com/ மற்றும் பதிவர் &lt;a href="http://arurs.blogspot.com/"&gt;ஆரூரன் விசுவநாதன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குறிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;இந்த இடுகைக்கு பின்னூட்டப்பெட்டி மூடப்பட்டுள்ளது. பின்னூட்டமிடும் நேரத்தில் எளிதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-1107218878080001868?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/1107218878080001868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=1107218878080001868' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/1107218878080001868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/1107218878080001868'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/10/blog-post_14.html' title='புராதானங்கள் அபாய நிலையில்!!!'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TLcFuzuPEYI/AAAAAAAAAzs/2ueP1lB0jrQ/s72-c/mg_6254.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-8048806975692062921</id><published>2010-10-09T18:30:00.001+05:30</published><updated>2010-10-09T18:36:04.557+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>இன்றிரவும்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TLBkNdkt2aI/AAAAAAAAAzc/i3ed7lJG6NE/s1600/children-car-window_6751_600x450.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 384px; height: 288px;" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TLBkNdkt2aI/AAAAAAAAAzc/i3ed7lJG6NE/s320/children-car-window_6751_600x450.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526026925223303586" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் தெரியும்&lt;br /&gt;யார்தான் அறியாதவர்&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் தோப்புத்தெரு&lt;br /&gt;அடுத்து மேலவீதியும்&lt;br /&gt;கலைஞர் காலனியும்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் கிடைக்காமற்போனால்&lt;br /&gt;எப்போதுமில்லாத அக்ரஹாரம்&lt;br /&gt;&lt;br /&gt;கடைத்தெரு செல்லும்போது மட்டும்&lt;br /&gt;கிடைத்துவிடவாப்போகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;யாசிப்பவளின் இடுப்பெலும்பில்&lt;br /&gt;வெறித்திருக்கும் சிசுவிற்கு&lt;br /&gt;&lt;br /&gt;இன்றிரவும் கிடைக்கலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;வேப்பெண்ணை வாசமும்&lt;br /&gt;அதே உதிரமும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-8048806975692062921?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/8048806975692062921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=8048806975692062921' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/8048806975692062921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/8048806975692062921'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/10/blog-post.html' title='இன்றிரவும்...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TLBkNdkt2aI/AAAAAAAAAzc/i3ed7lJG6NE/s72-c/children-car-window_6751_600x450.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5428876005995893804</id><published>2010-09-28T18:20:00.000+05:30</published><updated>2010-09-28T18:26:03.990+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>விட்டு விடுதலையாகி...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. ராஜவேலுவை அழைத்துக்காட்டினேன். எழத்திராணியற்ற அதனை கைகளுக்குள் அடக்கிக்கொண்டான். வேண்டாம் விட்டுவிடலாம் என்றேன். அவன் கேட்கவில்லை. வளத்தலாம் என்றான். எனக்கு அவன் செயல் பிடிக்கவில்லை. கூண்டுக்குள் ஒரு உயிரை அடைப்பதும் நெஞ்சிக்குழியில் துடிக்கும் இதயக்குமிழை வெளியே எடுப்பதும் ஒன்றாகவே தெரிந்ததெனக்கு. தரிகெட்ட சுதந்திரமே அதன் பிறப்புரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்குள்ளிருந்த வெங்காய கூடையை எடுத்து உத்திரத்தில் சணல் கயிறைக்கட்டி தொங்கவிட்டான். பானைபோன்ற கூடையின் இடையே ஒரு வேப்பங்குச்சியை சொருகினான். குருவியினை உள்ளேவிட்டு பூஸ்ட் குடுவை மூடியில் நெற்மணிகளை கொட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான். இவனுக்கு தம்பினானது என் துரதிஷ்டம் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TKHjh41GpKI/AAAAAAAAAzE/7A3cjn9jUFI/s1600/Photo0647.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TKHjh41GpKI/AAAAAAAAAzE/7A3cjn9jUFI/s320/Photo0647.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5521944789463245986" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைக்கு எட்டாத கூண்டைவிட்டு அந்த உயிருக்கு விமோசனம் அளிக்க நான் அவ்வளவு உயரம் வளரவில்லை. ஒரு நாற்காலியைப்போட்டு அந்தப்பணியைச்செய்ய ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த வெங்கடாஜலபதியும் தைரியத்தைக்கொடுத்து அருள்பாலிக்கவில்லை. பாவம் என்று கொஞ்சநேரம் வெறித்து பார்த்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா அப்பாவும் கண்டுகொள்ளவில்லை. அவன்தான் செல்லம். அன்றைய மாலை, அடுத்தநாள் காலை அடுத்து... அடுத்து... மூன்றுநாளும் அந்தக்குருவிக்கு நெற்மணிகளும், சோற்றுப்பருக்கைகளும், எதிர்வீட்டு வாசற்படலில் பழுத்திருந்த கோவைப்பழமும் உணவாகப் படைக்கப்பட்டன. என் விருப்பமான இங்க் பழத்தைமட்டும் அவன் கொடுக்கவில்லை. அண்ணனாம் அண்ணன், மனதிற்குள் திட்டித்தீர்த்தேன். ஆனாலும் அந்தக்குருவி எதையும் திரும்பிப்பார்த்ததாய் தெரியவில்லை. கூண்டிற்குள் எல்லாமே காய்ந்து கிடந்தது. அதில் எனக்கு திருப்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம்நாள். அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது.  நடுவில் சொருகியிருந்த குச்சியில் தலைகீழாக தொங்கி சாகசம் காட்டியது. ராஜவேலுவிடம் காட்டினேன். திறந்து பார்த்தான். விரைத்துப்போய் விழுந்தது அது. அண்ணன் அழத்தொடங்கினான். வெங்கடாஜலபதி சிரித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-5428876005995893804?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/5428876005995893804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=5428876005995893804' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5428876005995893804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5428876005995893804'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/09/blog-post_28.html' title='விட்டு விடுதலையாகி...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TKHjh41GpKI/AAAAAAAAAzE/7A3cjn9jUFI/s72-c/Photo0647.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7984373921219432301</id><published>2010-09-24T18:10:00.001+05:30</published><updated>2010-09-24T19:34:44.224+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>சுக்குமி ளகுதி ப்பிலி...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;கொல்லவாசல் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரத்துகள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்கொடுக்கிற அம்மா இப்பவும் அதேமாதிரிதான் இருக்கு. நானிங்கவந்து நைட்டு ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு பக்கத்து பொட்டிக்கடையில ‘அண்ணா ஒரு பழம்னா?’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாங்க. பொழைப்பத்த அம்மாக்கு பொழைக்கத்தெரியலையா இல்ல எனக்கான்னு தெரியல. இந்த பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;••••••••••••&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டுரூவாய தெருமொன ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்வாய்க்கு எப்பாருக்கு ஒரு பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல அதோட லாட்டரி சீட்டுக்கு நடுவுல வைச்சித்தர சுண்ணாம்போட கார்ரூவா கொட்டப்பாக்கு, கார்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச கார்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மாத்ரி.&lt;br /&gt;&lt;br /&gt;•••••••••••••&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி  வய்ச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரங்கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுகடையில வாங்கினா கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகால்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடயையும் சேர்த்து வித்துட்டு புள்ளைங்க சம்பாதிக்கறதே போதும்னு ஊட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.&lt;br /&gt;&lt;br /&gt;••••••••••••&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள்  எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட வந்தப்ப கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திராவீடு. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கு தாராளமா போதும். இந்தமாடு கறவ விட்டுட்டா அடுத்து அது, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம் பருத்திக்கொட்ட வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட மட்டுமில்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;•••••••••••&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மண்வெட்டி கால்ல விழுந்தாலுஞ்சரி, அருவா இல்லைன்னா கோடாளி எப்டிக்காயம்பட்டாலும் எலந்த இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும் வெட்டுக்காயம் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் தாத்தனுக்கு இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன என்னொடம்புக்கு அந்த டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும்.&lt;br /&gt;&lt;br /&gt;•••••••••••••&lt;br /&gt;&lt;br /&gt;அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-7984373921219432301?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/7984373921219432301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=7984373921219432301' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7984373921219432301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7984373921219432301'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/09/blog-post_24.html' title='சுக்குமி ளகுதி ப்பிலி...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4088062701917168722</id><published>2010-09-17T19:40:00.002+05:30</published><updated>2011-08-20T12:55:49.611+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை...'/><title type='text'>ராசம்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றுமில்லாது இன்று ஆளோடிக்கட்டிலில் கொஞ்சம் படுக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டினுள்ளே டங்..டங்.. என்று தரை அதிர்வதற்கு என் மனைவிதான் காரணம். பெயர் ராசம். இந்த 26 வருட திருமண வாழ்வில் அவளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியன நிறைய இருந்திருக்கிறது. ஆயினும் எந்த கணவனுக்குத்தான் மனைவியென்பவள் ஒரு மானுட ஜென்மம் என்பது அவ்வளவு எளிதாக புரிந்திருக்கிறது. நான் மட்டும் விதிவிலக்காயென்ன. சின்ன வயதில் தந்தையை இழந்த என்னை பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்தது என் அம்மாதான். மரப்பொந்தினிலிருக்கும் பருந்து குஞ்சுக்கு ஆகாரம் அவ்வப்போது கிடைத்துவிடும்தான். இருப்பினும் பறக்க கற்றுக்கொடுப்பது ஜென்ம இரத்தமின்றி  வேறென்னவாக இருக்கமுடியும். என் பாட்டன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படி மேலேபோய் என் தாத்தன் குடும்பச்சண்டையில் பாட்டியின் காலை கடப்பாறையால் முட்டிக்குமேலே ஓங்கி அடித்திருக்கிறான். அய்யோ..அய்யோ...என்று அடுத்தவீட்டுக்குகூட கேட்காதபடி அலறிவிட்டு அடுத்தவேளை சோற்றை பொங்கிப்போட்ட புண்ணியவதி அவளென்று குடும்ப வரலாறை கேட்கும்போதெல்லாம் என் அத்தை கண்ணீர்மல்க கூறுவாள். எவ்வளவு கொடியவன், கிராதகம் பிடித்தவன் என்று அப்போதும் நினைத்துக்கொள்வேன். இப்போது நினைத்தாலும் அப்படித்தான். பித்துக்குளி. நல்லவேளை நமக்கந்தளவுக்கு புத்திகெட்டுப்போகவில்லை என்பதற்கு என் படிப்பறிவோ, பகுத்தறிவோ காரணமாயிருக்கும்  அக்காவின் மகளை அவளின் 16 வயதில் கட்டிக்கொண்டேன். என் குடும்ப ரத்தம்தான் ராசத்திற்கு. அதனாலோ என்னவோ என்னிடம் அரைவாங்கி கண்ணம் வீங்கினாலும் எனக்கு சோறு உண்டு. 3 வருட தாம்பத்தியத்தில் பெற்றெடுத்ததை மலர்கொடி என்ற நாமம்சூட்டி ஒருவழியாக சென்றவருடம் கரையேற்றினேன். கரையேற்றினேன் என்பதுதான் அத்தனை சிரமங்களுக்குமான ஒற்றைச்சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே பெண் வேறெதுவுமில்லை. சிறுவயதில் அவள் சில்லிக்கோடு விடையாடும் அழகு தனிதான். கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நானும் ராசமும் மற்றவர்களுடன் அவள் போட்டிப்போட்டு துள்ளி துள்ளி நொண்டியடித்து விளையாடும் பாங்கை ரசித்திருக்கிறோம். ராசம்தான் அவளுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்தாள். ராசமும் சிறுவயதில் இந்த விளையாட்டில் தேர்ந்தவள்தான். பெண் பார்க்க நிச்சயமாகி சிங்காரத்தின் கூண்டு வண்டியை வாடகைக்கெடுத்து போகும்போதுகூட தெருவாசலில் விளையாடிக்கொண்டுதான் இருந்தாள். ‘விளையாட்டுப்பிள்ளையாவே வளந்துட்டா, போ..போ..மூஞ்சி கழுவியா’என்று அவளை துரத்திவிட்டு மாமா என்னிடம் அசடு வழிந்ததுகூட இன்னும் ஞாபகம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏணிப்படிகள்போல ஆறு பெட்டிகளுடன் கூடியதில் மலையிலிருந்து ஆரம்பித்து 5,4,3,2,1 வரை வந்து பிறகு, கைமேல் சில்லியை வைத்து நொண்டியடிக்கவேண்டும். புறங்கை, விரலிடுக்கு, கால், கால் விரலிடுக்கு, இறுதியாக மேட்டா கீட்டாவில் முடியும் அந்த விளையாட்டு தெருப்பெண்களின் சமயோசித விளையாட்டு, இன்னும் சொல்வதானால் பாரம்பரிய விளையாட்டு. மேட்டா கீட்டாவில் எந்த பெட்டியில் சில்லியை போடுகிறோமோ அந்த பெட்டி ஒரு உப்பு என்று விளையாடிய பெண் கோடுபோட்டுக்கொள்வாள். அந்த பெட்டியை எதிராளி நொண்டியடிக்கும்போது தாண்டித்தான் செல்லவேண்டும். விதிமுறை. வயதுக்கு வந்த பின்னும் மலருக்கு இந்த விளையாட்டு அலுக்கவில்லை. ராசத்திற்கும் வேடிக்கை பார்ப்பதும் அலுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகளை பெண்பார்க்க வந்தபோதும் சில்லிக்கோடுதான் விளையாடிக்கொண்டிருந்தாள். என் மாப்பிள்ளையிடம் நான் அசடுவழியவில்லை. சின்ன சின்ன குடும்பங்களில் ஒருவர் பிரிந்தபின் ஏற்படும் அதே வெறுமைதான் இப்போது என் வீட்டிலும். காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல பிரிவென்பது இந்த மூன்றுபேர் குடும்பத்தின் உச்ச வலி, பார்க்க அழகாயிருந்தாலும்கூட. நான் வேலைக்கு சென்றபின் ஆக்கி இறக்கி வைத்த நேரம்போக ராசத்தை வேறெந்த வேலைகளும் இழுத்துப்பிடிக்கவில்லை. மிஞ்சிப்போனால் என் துணிகளை துவைப்பாள். உண்டு தின்ற ஏனங்கள். அப்படியேதும் அவளின் தனிமையை ஆட்கொண்டதாக தெரியவில்லை, ஏன் நானும்கூட. என் வலியே அதிகம்தான். பெண்களுக்கான வற்றாத கண்ணூற்று முனுக்கென்றால் பொங்கிவிடுவதைப்போல, எந்த ஆண்மகனால் முடிகிறது. என் நெஞ்சிலும் அழுத்தம் இல்லாமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரவுகளில் ராசம் தூங்கும் போது எதோ நெஞ்சழுத்தக்காரியின் முகமாகத்தான் அவள் முகம் இருக்கும். என் முகத்தைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். சென்றமாதம்தான் அவளின் நெஞ்சாழ்மையை இந்தக்கோலத்தில் பார்த்தேன். ஒரு கண்ணாடியும் அது உடைந்தால் தெரியும் இரண்டு பிம்பங்களுமாய் என் முன் அவள். மலரின் அந்த பச்சைக்கலர் பாவாடை தாவணியை உடுத்தியிருந்தாள். இந்த 45வது வயதில் அவளுக்கு எடுப்பாகத்தான் இருந்தது என்று சொன்னால் நான் பைத்தியமோ என்று எனக்கே தோன்றும். சிகையில் இரட்டைப்பின்னல் வேறு. கொல்லையில் பூத்திருந்த திசம்பர் பூவைக் கட்டி சூடியிருந்தால். அந்த நெத்திச்சுட்டி ஏதென்று தெரியவில்லை. பார்ப்பதற்கு அகோரமான தோற்றம்தான். அருகில் செல்லும்வரை என்னைப்பார்க்காதவள் சென்றவுடன் விரைத்த உடலுடன் மலங்க மலங்க விழித்தது என் 52 வருட வயது முரட்டையும், திடகாத்திரத்தையும் பொலபொலவென விழ்த்தியது. இன்று நினைத்தாலும் ஒரு சொட்டாவது கண்ணீர் வரத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்வது அவளுக்கு தெரிகிறதோ என்னவோ, சமயத்தில் அவளிடம் அந்த பருவ நினைவு குடிபுகுந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் பைத்தியம் என்கிறார்கள். இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table background="http://images2.layoutsparks.com/1/201765/clean-mess-static-dots.gif" border="0" style="color: white;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;குறிப்பு-&lt;/b&gt; இச்சிறுகதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்&lt;b style="color: magenta;"&gt; &lt;a href="http://www.jeyamohan.in/?p=12992"&gt;அவரது தளத்தில்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;span style="color: yellow;"&gt; &lt;/span&gt;குறிப்பிட்டது கீழே :-&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;நன்றி திரு.ஜெயமோகன்&lt;/b&gt; &lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;•&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-4088062701917168722?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/4088062701917168722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=4088062701917168722' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/4088062701917168722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/4088062701917168722'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/09/blog-post_17.html' title='ராசம்...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-3377735240414705876</id><published>2010-09-13T18:18:00.000+05:30</published><updated>2010-09-13T18:19:48.620+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>மனிதம் சொட்டிய மலர்கள்...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: verdana;"&gt;பிடறியில் விழும் காலத்தின் அடி ஒவ்வொன்றும் வலுவாகவே இருக்கிறது. குன்றினில் ஏறியபின் மதிப்பற்றுப்போகும் கட்டாந்தரையை போலவே எல்லாமும் வளர்‘சிதை‘ ஆகிவிட்டது. கடந்ததை அசைத்துப்பார்ப்பதில் இருளடர்ந்த கனவுகள்கூட அள்ளிப்பருகொத்த அமிர்தம்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘செத்த இரு ஆத்தா தோ போட்டுக்கொண்டாறேன், கால்‘ல வெந்நீரயா ஊத்தியாந்த?’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘அட பொருடா, அதுக்குள்ள வந்தடமாட்டாங்கொப்பன்’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘யப்பா பிரவு கொஞ்சம் மணித்தாத்தாவுக்கு சட்ணி ஊத்துப்பா’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘வா மாப்ள ஊர்ல இருக்கியா!!?, இப்பலாம் ரோட்டுக்கடத்தான் கண்ணுக்கு தெரியுதானொக்கு’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘வாங்க சார், எதோ கெடக்கன், இது யாரு பேரனா?, பய அப்டியே ஒங்களயே உரிச்சி வச்சிருக்கானே’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘இரும்மா அம்மா வந்திடுவா, தாத்தா ஒண்டியா இருக்கன்ல, நிறைய பேரு சாப்டுட்டிருக்காங்க, எல்லாம் போனப்பின்னாடி நீக் கேட்டத வாங்கியாறேன் என்ன’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘என்ன பட்டாமணியாரே, பையனுக்கு எதோ வேணுமாமே துரைக்ட்ட சொல்லி வாங்கித்தர்ரது?’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘எய்யா செயா அங்காடியில என்னைக்குயா மண்ணன்ன போடுவ? பத்து தேதியாச்சுய்யா......’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: verdana;"&gt;‘என்னத்த சொல்றது மாமா, நாம படுறது நம்மளோட போவட்டும்னுதான் மொவனையாவது வேற வேலைக்கு அனுச்சிட்டு ஒண்டியாவே பாத்துக்கிறேன்‘ என கிராமங்களில் குடிசைக்குளியங்கும்  சின்னச்சின்ன உணவு விடுதிகளும்,  டீக்கடைகளும் உறவுகளுக்குள்ளும், உரிமையெடுப்பிலும் வாழ்ந்துகொண்டிருக்கும். புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே எல்லாவற்றிற்கும் விடையும் விடிவாகவும் கரைந்துகொண்டிருப்பதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TI4cnmf9PhI/AAAAAAAAAyw/fR_HEgLW65g/s1600/Photo0651.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 349px; height: 465px;" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TI4cnmf9PhI/AAAAAAAAAyw/fR_HEgLW65g/s320/Photo0651.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5516378060250496530" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்பொழுக பறிமாறப்படும் எந்த உணவிலும் பறக்கும் ஆவியுடன் எதோவொரு மனம் மற்றும் மண் சுவை இருக்கத்தான் செய்தது. அன்போ, பண்போ, பரிவோ, மனிதமோ, உறவு முறையுடன் வந்துவிழும் வார்த்தைகளோ ஏதோவொன்றின் மூலம்.   அப்பாவின் பெரியவராயின் பெரியப்பாவாகவோ, அம்மாவுக்கு அண்ணனாக்கி மாமாவாகோ, வயதின் மிகை அண்ணனாகவோ ஏதோவொரு முறையில் உறவாகிவிடுவார் அதன் உரிமையாளர். இன்றும் கீத்துக்கொட்டகையில் டீக்கடைகளையும், சின்ன உணவு விடுதிகளையும் சில இடங்களில் காணும்பொழுது நெஞ்சினில் உருளும் நினைவுகள் மலரவே செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;‘சித்தப்பா நீ படிச்சிப்படிச்சு சொன்னன்னுதான் அத்துப்போன ஒறவ ஒட்டலாம்னு பொண்ணு கேட்க வந்தேன். ஆனா அவன் என்னடான்னா முறுக்கிகிட்டுல்ல போறான்.‘&lt;br /&gt;&lt;br /&gt;‘அட இரு மோனே.. நாங்பேசிப் பாக்குறேன். ஒடனேவா கோச்சிக்கறது. எதார்ந்தாலும் பொறும வேணும்பா. இந்தா, டீய குடிச்சிட்டுப்போ நான் பேசுறேன் அவர்ட, நாஞ்சொன்னா மனுஷன் கேப்பான்யா.‘ என்று பிரிந்திருக்கும் உறவுகளை சேர்ப்பதில் தொடங்கி வாய்க்கால் வரப்பு தகராறு வரை தீர்த்துவைக்கப்படும் இவ்விடங்களில் ‘அரசியல் பேசாதீர்’ என்ற வாசகம் மட்டும் அழுத்தம் திருத்தமாக மாவுக்கட்டிகளால் தெரியும். எவரும் உறவாகவும், எல்லாம் இயல்பாகவும் மனிதம் சொட்டும் மலர்களாய் எப்படித்தான் நடக்கிறதோ இந்தக் கடைகள் என்று எண்ணத்தோன்றும் இவ்வேளையில், பளபளக்கும் கண்ணாடி மாளிகைக்குள் இயங்கும் தற்போதைய நவநாகரீக உணவு விடுதிகள் செங்கல்லும், சிமெண்டும் கலந்த புதர்களாகத்தான் காட்சித்தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு,  சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-3377735240414705876?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/3377735240414705876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=3377735240414705876' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3377735240414705876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3377735240414705876'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/09/blog-post.html' title='மனிதம் சொட்டிய மலர்கள்...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TI4cnmf9PhI/AAAAAAAAAyw/fR_HEgLW65g/s72-c/Photo0651.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-3100220029358708063</id><published>2010-08-27T18:10:00.003+05:30</published><updated>2010-08-27T19:18:58.165+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை...'/><title type='text'>வெவ்வேறானவை...</title><content type='html'>..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீப்பிலிருந்த தலைமுடியை&lt;br /&gt;கைவிரலில் சுருட்டிக்கொண்டிருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;எப்ப வந்த? என்று கேட்பதற்குமுன்...&lt;br /&gt;&lt;br /&gt;வாந்த...ஊர்ல இருக்கியா? என்றாள்..&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல இன்னைக்குத்தான்...&lt;br /&gt;ஆமா நீ? சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;நேத்து வந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;உம்பொண்ணா இது?&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்...&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கியணைத்து.. முத்தமிட்டேன்&lt;br /&gt;குழந்தையாய் பார்த்தாள்...&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை&lt;br /&gt;சின்னபொண்ணும், ராசுபொண்டாட்டியும்&lt;br /&gt;ஊரிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;காரம் கூடின குழம்புக்கு&lt;br /&gt;அவ்வப்போது பாட்டியும் திட்டுவாள்&lt;br /&gt;&lt;br /&gt;த்தூ.. என்னாக் கொழம்புடியிது&lt;br /&gt;புளிப்பு வாயில வய்க்கமுல்ல&lt;br /&gt;இது அப்பா&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒண்ணும் வாங்கியாரதில்ல..&lt;br /&gt;வரட்டும் வச்சிக்கிறேன் இந்த மனுஷனை’&lt;br /&gt;&lt;br /&gt;வைதுகொண்டிருப்பாள் அம்மா...&lt;br /&gt;அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;சோப்பு சீப்பெல்லாம்&lt;br /&gt;தனியா வச்சிக்கணும்யா..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா இதுல&lt;br /&gt;பவுடரும் எண்ணையும் இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பாய்த் தலையாணில்லாம்&lt;br /&gt;நீ மட்டுந்தான வச்சிக்கிற...&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொன்ன அப்பாவின்முன்&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...&lt;br /&gt;அவர் சட்டைசெய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-3100220029358708063?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/3100220029358708063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=3100220029358708063' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3100220029358708063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/3100220029358708063'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/08/blog-post_27.html' title='வெவ்வேறானவை...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-6198819381952957087</id><published>2010-08-20T18:44:00.000+05:30</published><updated>2010-08-20T18:45:36.636+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>ஒளிகளின் நீட்சி...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பட்டிக்குள் அடைபட்ட செம்மறியாட்டுக் கூட்டமென ஆசாபாசங்களை துறக்க பழகிவிட்டது இந்த காலும், கையும். விஞ்ஞான துணுக்கினை வீட்டிற்குள் அமர்த்திவிட்டு அடைகாக்கத்துணிந்த உடலும், மேலிமையை புருவங்கள் கட்டிவைக்க விடியல் வீழ்வதறியாமல் வெறித்திருக்கும் கண்களும் எதையெதையோ தின்றுகொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க...&lt;br /&gt;&lt;br /&gt;ராஜன் ஜவுளிக்கடைக்காரர் வீட்டுக்கு வந்தபொழுதான் தெரிந்ததெனக்கு தொலைக்காட்சிப்பெட்டியின் மகிமை. நக்கீரர் தெருவுக்குள் இந்த வி.வளர்ச்சியை இழுத்துக்காட்டிய பெருமை ராஜனுக்கு. வாசல் சன்னலில் தொங்கும் திரைச்சீலையை விலக்கி ஒட்டிஒட்டி பத்துப்பதினைந்து கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாக நின்று பருவமடைந்தவளை பதுங்கியிருந்து பார்த்தார்போல் படங்கள் பார்த்த பொழுதுங்கள் இப்போதுமந்த வீட்டின் வாசலில் நிழலாய் நிற்கிறது. பிறகு குருசாமி வீட்டில், அடுத்து ஹரி வீட்டில் இப்படியாக நீமுந்தி, நான் முந்தியென அவரவர் கௌரவம் வீட்டுக்கூடாரத்தை கருப்பு வெள்ளையாக்கியது. யார் வீட்டில் படம் பார்க்கலாமென ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படியில்லை. இந்த ஹை.ஃபி வானொலிப்பெட்டியும், அதில ஒலிக்கும் காரைக்கால் பண்பலையும் அவர்களின் அதிகபட்ச விஞ்ஞானமாக எண்ணியிருந்தனர். வேறெந்த பற்றும் அவர்களை ஆட்கொள்ளவில்லை. அப்பாவுக்கு இதுவரையும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் வள்ளித்திருமணத்தையும், மயான காண்டத்தையும் கொன்றுவிட்டு சாஸ்த்தா கடையிலிருந்து வாடகைக்கு அந்த தொ.கா. பெட்டியும், ஒரு ஒளிநாடா இயக்கு கருவியும் எடுத்து வைத்தனர். திருவிளையாடலில் ஆரம்பித்து வருஷம் 16 ஓடிக்கொண்டிருக்கும்பொழுது விடிந்தேவிடும். ‘பாரு,பாரு.... எந்த காமுட்டி கோயில்லடா தீவெட்டி புடிச்சே?‘ன்னு வாத்தியார் தலையில் தட்டும்பொழுதான் பள்ளியிலிருப்பதாய் கண்களுக்கு சுரணைவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏம்பாலாஜி சவுளிக்கடக்காரு வூட்ல படம் போடுற மெஷினு வந்திருச்சாம்ல. பாத்தியா நீயி’ ன்னு அப்போது கேட்ட அலமேலு அவ்வாவும்(பாட்டி) குத்துக்காலிட்டு திண்ணையிலமர்ந்து ‘இந்த ராசாயா கெழவிக்கும் அது மொவனுக்கு காலைலேந்து எதோ சண்டையாம்லடி நவநி, ஒனக்கு தெரியுமா?’ என்று ஊர் வம்புகளை உலையுடன் சேர்த்து கொதிக்கவைத்த அஞ்சுகம்அம்மாலும், குஞ்சம்மாளும் இப்போது உரலுக்குள் குத்துண்ட நெல்லாக வாசலை எட்டிப்பார்ப்பதில்லை. உறவுகளை வளர்த்ததும், ஊர்வம்புகளை வெற்றிலைப்பாக்குடன் கதைத்ததுமாகயிருந்த பாட்டிகளின் வெறித்தனமான ஆட்சி இப்போது தொ.கா.பெட்டி இயக்குகருவிப் பொத்தான்களுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரூபாய் 400 ஓ 600 ஓ மாதாமாதம் உதவித்தொகையாக வாங்கும் ஆதரவற்றோர்கள், கம்பிவழி அலைவரிசை இணைப்புக்கு ரூபாய் 100 யை இழக்கத்தயாராகிவிட்டனர். காரணம் அரசு அளித்த இலவச தொ.கா.பெட்டி. பொங்கித்தின்ன ஒரு ரூபாய் அரிசி கிடைப்பதும் அவர்களின் பலம். ஊன்றமுடியா காலுடன் வாழ்நாளின் உச்சியிலேறி உச்சிப்பிள்ளையாரைப்பார்த்த மகிழ்ச்சி அவர்களின் கண்களில் தொலைக்காட்சித் தொடர்களை காண்கையில் தெரிகிறது. தொடர்களைக்காண வீடுகள் தேடியலைந்த ஏக்கமும், தாகமும் தணிந்துவிட்டதெண்ணி ஒரு பெருமிதமும்கூட. நல்லதோ கெட்டதோ அவர்களின் வாழ்நாள் உறக்கம் முழுவதும் ஏதோவொரு தொ.காட்சித்தொடரின் நாயகியின் கண்ணீரில் கனவுகளாக கடந்துபோகுமென்பது மட்டும் திண்ணமாகத்தெரிகிறது.    &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியாயினும் ‘ந்த, ஏன் மாத்தர? 8 மணிக்கெல்லாம் போட்டுடுவான். வய்யி‘ என இப்போது அம்மாவும் அதட்டும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற காணம் தொடங்கும்முன் அலமேலுவை, சவுந்தர்ராசு நயினா வீட்டில்போய்  அமர்த்திவிட்ட ஒளிகளின் நீட்சியை இப்போதுதான் உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-6198819381952957087?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/6198819381952957087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=6198819381952957087' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/6198819381952957087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/6198819381952957087'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/08/blog-post_20.html' title='ஒளிகளின் நீட்சி...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-9048106092872131249</id><published>2010-08-18T17:25:00.002+05:30</published><updated>2010-08-18T17:30:59.247+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><title type='text'>எதோ வீ.ஏ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;‘எய்யா எதோ வீ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல நீ ஃபாம் அனுப்பிட்டியா’ன்னு எப்பாரு கேட்கும்போது ‘இல்ல’ன்னு சொல்லித்தொலைச்சிட்டேன். ஃபோன்லயே விட்டாரு பாருங்க டோஸு ‘அந்தப்பய மொவனே, இந்தப்பய மொவனே’ன்னு பாதி அவரையே திட்டிட்டு என்னையும் கொஞ்சமா கொதறி வச்சாரு. பெத்த மனுஷன் கத்தினா நல்லதுக்காதான இருக்கும். ஏழு கழுத வயசாயும் இன்னும் நமக்கிந்த புத்தி வரமாட்டுதேன்னு போஸ்டாபிஸ்க்கு போனாத்தான் தெரியுது, தலையில ஒட்டு முடிகூட இல்லாத கெழங்கட்டைகள்லாம் அவத்தால குத்தவச்சிருக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்துதே எனக்கு வீரம், அப்பிளிகேஷன் வாங்கலாம்னு போனா ஸ்டாக் இல்லயாம். ஒருபக்கத்தால ‘அவைலபில்‘ன்னு நோட்டீஸூ, இன்னொரு பக்கத்தால அவுட் ஆஃப் ஸ்டாக்குன்னு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGus1ExjREI/AAAAAAAAAvw/zMum6JHLi1s/s1600/Photo0585.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGus1ExjREI/AAAAAAAAAvw/zMum6JHLi1s/s320/Photo0585.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506684997205181506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGus6cjbSuI/AAAAAAAAAv4/OpLs9V16X30/s1600/Photo0587.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGus6cjbSuI/AAAAAAAAAv4/OpLs9V16X30/s320/Photo0587.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506685089487735522" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஒரு வழியா நண்பருகிட்ட வாங்கி ஃபில் பண்ணி போஸ்ட் பண்ணப்போனா ‘கொல்’லுன்னு ஒரே  கூட்டம்.  உள்ளப்போனொன்னே ஒரு செம ஃபிகர்தான் கண்ணுல பட்டுது. ரொம்ப நேரமா அந்த க்யூவுலேயே நின்னுகிட்டிருந்தேன். போஸ்ட் மாஸ்டர் கிட்டத்தால போனப்பதான் தெரிஞ்சிது நான் நிக்கவேண்டியது அடுத்த க்யூன்னு. கொஞ்சநேரத்துக்கெல்லாம் ‘அம்மே’ன்னு ஒருப்பயபுள்ள வந்து  அந்த ஃபிகர் கால கட்டிப்புடிச்சிது. அடக்கருமமே...நேத்து புள்ளபெத்தது, நாளைக்கு பெக்கப்போறதுலேர்ந்து நிக்குதுங்க. அதுங்களுக்கு அடுத்தால க்யூல புருஷனுங்களும் ஒரு கேரி பேக்கோட நிக்கிறாங்க. இந்த புள்ளையாண்டானுங்களுக்கு என்னா நம்பிக்க பாருங்க. எதோ காசு குடுத்தாதான் இந்த வேலையெல்லாம் கெடைக்கும்னு பேச்சுப்போக்குல சொல்லிக்கிட்டு திரிஞ்சதெல்லாம் சந்தடிச்சாக்குல அப்ளை பண்ணிட்டு வெளியில வருதுக. அதுசரி நம்பிக்கத்தான வாழ்க்கையே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;அந்த குண்டம்மா ஃபிரியட்ல கடைசிகாலத்துலதான் TNPSC-ய ஓப்பன் பண்ணுச்சு. எதோவொரு நம்பிக்கையில நானும் கடக்கு கழுதன்னு எக்ஸாம் எழுதுனேன். அதோட அந்தம்மா ஆட்டம் காலி. இப்பயும் அதே நம்பிக்கையிலத்தான் எழுதப்போறேன்.. பாப்போம்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurOMT1J2I/AAAAAAAAAug/9Mt7fhR5mlg/s1600/Photo0589.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurOMT1J2I/AAAAAAAAAug/9Mt7fhR5mlg/s320/Photo0589.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506683229701482338" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;போஸ்ட் ஆபிஸ் வாசல்தாங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGur5pq3KZI/AAAAAAAAAvQ/3HFyJO39vhk/s1600/Photo0599.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGur5pq3KZI/AAAAAAAAAvQ/3HFyJO39vhk/s320/Photo0599.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506683976317086098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஃபில் பண்ணவேண்டியத, ஒருநாளைக்கு முன்னாடிதான் பண்ணணும்னு விதி போல..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGur0SBXnSI/AAAAAAAAAvI/OYqvrb-03uo/s1600/Photo0598.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGur0SBXnSI/AAAAAAAAAvI/OYqvrb-03uo/s320/Photo0598.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506683884069690658" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;தோ பாருங்க இவரும்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGusl90_MpI/AAAAAAAAAvg/TQOhGk55T2o/s1600/Photo0596.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 269px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGusl90_MpI/AAAAAAAAAvg/TQOhGk55T2o/s320/Photo0596.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506684737642508946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;கடைசியா கண்ணாமுழி தெரியற மாதிரி ஒருத்தன் நிக்ரானே, அவன எவத்தையோ பாத்த மாதிரி தெரியுது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGur-l4ih9I/AAAAAAAAAvY/asX8x7xEt08/s1600/Photo0600.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGur-l4ih9I/AAAAAAAAAvY/asX8x7xEt08/s320/Photo0600.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506684061200058322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurullmwfI/AAAAAAAAAvA/1wiYiMFdbl0/s1600/Photo0596.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;ம்க்கும்... எந்த புள்ளைய பெத்ததுக்காக இந்த நெலமயோ தெரியல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurooBs96I/AAAAAAAAAu4/BG4sNSdmZUE/s1600/Photo0591.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurjbCx5GI/AAAAAAAAAuw/grbQmfuxnaA/s1600/Photo0590.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurjbCx5GI/AAAAAAAAAuw/grbQmfuxnaA/s320/Photo0590.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506683594433750114" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;வெய்யலுதான். என்னா பண்றது. வயிறு காயுதுல்ல. இந்த சீஸன்ல விய்க்கலன்னா எப்ப விய்க்க முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurooBs96I/AAAAAAAAAu4/BG4sNSdmZUE/s1600/Photo0591.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurooBs96I/AAAAAAAAAu4/BG4sNSdmZUE/s320/Photo0591.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506683683818239906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurclXtncI/AAAAAAAAAuo/H1OCydbNW74/s1600/Photo0588.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGurclXtncI/AAAAAAAAAuo/H1OCydbNW74/s320/Photo0588.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506683476946820546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;உள்ளபோன அம்மாக்காக வெயிட்டிங்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGuq0uBZIEI/AAAAAAAAAuY/NpKiA6dR2rY/s1600/Photo0586.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGuq0uBZIEI/AAAAAAAAAuY/NpKiA6dR2rY/s320/Photo0586.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506682792074354754" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;எதோ சீரியஸான டிஸ்கஸன் போலருக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGus1ExjREI/AAAAAAAAAvw/zMum6JHLi1s/s1600/Photo0585.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGutMq8itYI/AAAAAAAAAwI/zppoB2zYyO0/s1600/Photo0593.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGutMq8itYI/AAAAAAAAAwI/zppoB2zYyO0/s320/Photo0593.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506685402588820866" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGusvFXgj5I/AAAAAAAAAvo/bQsdMN-JJlM/s1600/Photo0594.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGusvFXgj5I/AAAAAAAAAvo/bQsdMN-JJlM/s320/Photo0594.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506684894285172626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;பேரெல்லாம் நல்லாத்தான் வச்சிருக்காங்க.. ஒரு நல்ல மனுஷங்க பேர விடுறதில்ல..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGutCyf7WeI/AAAAAAAAAwA/8ScEoErR9mE/s1600/Photo0592.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGutCyf7WeI/AAAAAAAAAwA/8ScEoErR9mE/s320/Photo0592.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5506685232817592802" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;இதுக்கு ஒண்ணும் சொல்ல தெரியல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;என்னதான் காமடி பண்ணினாலும் அரசாங்க வேலைக்கு எளசுங்கள்ட கிராக்கி  அதிகம்தான். நாரப்பயலுக அதையும் காச வாங்கிட்டு யாராருக்கோ பட்டாப்போட்டு குடுத்திர்ரானுங்க. என்னதான் அரசாங்கத்தோட தகுடுதித்தம் தெரிஞ்சாலும் எதோவொரு நம்பிக்கைதான் இவ்ளோ அலமலப்புக்கும் காரணம்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சும்மாவாச்சொன்னாங்க ‘எலிக்கு திண்டாட்டம், பூனைக்கு கொண்டாட்டம்’னு..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-9048106092872131249?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/9048106092872131249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=9048106092872131249' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/9048106092872131249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/9048106092872131249'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/08/blog-post_18.html' title='எதோ வீ.ஏ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TGus1ExjREI/AAAAAAAAAvw/zMum6JHLi1s/s72-c/Photo0585.jpg' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-889084682277983662</id><published>2010-08-05T17:45:00.002+05:30</published><updated>2010-08-05T17:48:53.500+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>கனவுகள் மேயும் காடு...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TFqHENA31fI/AAAAAAAAAuQ/p_H1s6dpBjc/s1600/boy_360.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TFqHENA31fI/AAAAAAAAAuQ/p_H1s6dpBjc/s320/boy_360.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5501858401069028850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify; font-family: verdana;"&gt;&lt;span style="font-family: verdana;font-size:85%;" &gt;மௌனத்து சீற்றங்கள் உறையத்தொடங்குகிறது இரவெங்கும். அலைகள் கொணரும் நுரையும், நுரையைக்கொள்ளும் கடலும் சொல்லும் சங்கதிகள், கனவுகளின் வழியொழுக அடைத்துக்கொள்கின்றன சிந்தைகள் யாவும். பெருவெளிப் புன்னைமரம் உச்சியில் கொண்ட  முற்கூட்டுடன் தனிமையில் அமர காத்திருக்கிறது காக்கையைப்போலவே மனமும். அரவங்களோ, அசைவுகளோ தெரிந்திடின் சீறிட்டு கரையத்தான் செய்கிறது அதற்கும். ஏனிந்த  இரவு, வெறுமை, தனிமை, தாகம், மனதுடனான தர்க்கம், சிந்தையற்ற நிலை, உழைப்பதற்ற ஓய்வு? இவைகொண்டு எதோவொன்றை கருகிய இருளோ, மூடிய இமைக்குள் இருட்டினில் தவிக்கும் விழிகளோ சொல்லிக்கொண்டே விழுங்கிப்பார்க்கிறது. சீரனமின்றி தவித்தும், சிரமேற்று தொங்கியும் உதிராத தணல் உடலெங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாளரமற்ற அறையில் புழுக்கத்துடன் சேர்த்து ஆயிரம், லட்சம், கோடியென கொடிகொடியாய் பரந்துபரந்து விரிந்துகொண்டேயிருக்கின்றன புள்ளிகளனைத்தும். சாம்பலான வார்த்தைகளை சேர்த்து குழைத்து குழைந்து நாவினடி ஊறும் கோழை எச்சில்கள்யாவும் படுத்தப்படியே உமிழ்ந்து  உடலெங்கும் எச்சங்களாய் எச்சில்கள். அனிச்சைக் கட்டளைகள் பிறந்து கரங்களிரண்டும் துடைத்து துவைத்து மேலெங்கும் ஈரக்கீரல்கள். சற்றைக்கொருதரம் சுவர்க்கோழிகளின் கீச்சிடும் குரல் குத்திக்குத்தி கிழிக்கிறது செவியின் உட்சுவற்றை. எதோவொரு நாதம் கிணற்றிற்க்குள்ளிருந்து அம்மா அம்மாயென்பதைப்போல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இரண்டுமுறை திடுக்கிடுகிறது கண்கள். கால்களின் ஆடுசதைகளில் படிந்த கோரைப்பாயின் வரிகளைத் தடவத்தடவ சுகமேற்கிறது.  அனூடே மயிர்கால்களும் சிலிர்த்துக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடைந்த மதிற்சுவரினடி மடிந்த எறுப்புச்சாரிகளில் ஒவ்வொன்று கைகால்களிழந்து முக்கி முனகி தப்பிக்கப் பார்ப்பதாய் மனமும் நினைவுகளும் இந்த கனவினை உதறிவிட்டு எங்கோ ஓடத்தான் விழைகிறது. முடிகிறதா? இல்லையே. தாயிடம் அருந்திய பாலின்று பூர்வீக மணத்துடன் நாசியை மூடிக்கொண்டே பயணிக்கிறது. காய்ச்சலில் சுருண்டிருக்கும் நாவிற்கு அவளின் சுக்குக் கசாயம் இனிக்கிற மாதிரியும் தெரிகிறது. கசக்கிற மாதிரியும் தெரிகிறது. ருத்ராச்சையை மென்றபடி நாத்திகம் பேசும் கடவுள், பார்வதியை ஏன் பக்கமிருந்து ஒதுக்கினான். பாம்புகள் எங்கே? மணிமுடியெங்கே? அதன் வழிச்சிதறும் கங்கையெங்கே? அவனின் தாண்டவம் ஏன் அதிராமல் அசைகிறது? என்ன நினைவில் திளைத்திருக்கிறோம். யானறியாமல் எல்லாமே பச்சரிசிக் கஞ்சிக்குள்ளும், நெத்திலிக் கருவாட்டுக்குள்ளுமே நடக்கிறதே. என்ன விந்தையிது!!. &lt;/span&gt;&lt;span style="font-family: verdana;font-size:85%;" &gt;உடல் சுடுகிறதா? அணல் உடலாயிருக்கிறதா? &lt;/span&gt;&lt;span style="font-family: verdana;font-size:85%;" &gt;எதைச்சொல்கிறது இந்த தனிக்கனவு?&lt;/span&gt;&lt;span style="font-family: verdana;font-size:85%;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இந்த இரவின் அஸ்தமனம் தொடங்கிவிட்டாற்போல் தெரிகிறது. கீழ்வானமும், கீழிமையும் செந்நிறத்தை விரட்டத்தொடங்கிவிட்டன. உடற்படிந்த உப்பு படிமங்கள் போர்வையுடன் சேர்ந்து கொட்டுகிறது. உள்மனமும், உத்திரத்து விசிறியும் தன்னகத்தேகொண்ட அகந்தையை அழித்துக்கொள்கிறது. எங்கோ மச்சிவீட்டின் மதிலை மூடின மல்லிகைக்கொடி, மலர்களை  பிரசவிக்கிறதுபோலும். காற்றெங்கும் வாசம், காற்றெங்கும் கானம், காற்றெங்கும் அகமும் புறமும் மிதக்கிறது. பகலவனின் வெண்மை உடலை இதமாக பிடித்துக்கொள்கிறது. அடடா&lt;/span&gt;&lt;span style="font-family: verdana;font-size:85%;" &gt;!&lt;/span&gt;&lt;span style="font-family: verdana;font-size:85%;" &gt; என்ன சுகம் இந்த உடலில்&lt;/span&gt;&lt;span style="font-family: verdana;font-size:85%;" &gt;!&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family: verdana;"&gt; காய்ச்சல் நின்றபின் கிடைத்த இந்த உடலில்தான் எத்தனை மினுமினுப்பு!, எத்தனை அழகு!, எத்தனைக்குளிர்ச்சி!. வரும் இரவும் இந்த தனிமையைக் குத்திக்காட்டும் கனவுகளுடன்தான் வருமோ?!! சூன்யமான அந்த கருமை வராமலிருந்தால்தான் என்ன? அப்பப்பா, இந்த விடியல் இப்படியே தொடர்ந்தாலே நலம்...நலம்...நலம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-889084682277983662?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/889084682277983662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=889084682277983662' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/889084682277983662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/889084682277983662'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/08/blog-post.html' title='கனவுகள் மேயும் காடு...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TFqHENA31fI/AAAAAAAAAuQ/p_H1s6dpBjc/s72-c/boy_360.jpg' height='72' width='72'/><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5794230373263111211</id><published>2010-07-21T18:09:00.003+05:30</published><updated>2010-07-21T19:45:12.162+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்லது கெட்டது...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஒட்டுவாரொட்டி...</title><content type='html'>&lt;div style="text-align: justify; font-family: verdana;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;முருகேசனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் முருகேசனுக்கு பத்திகொண்டுதான் வரும்.&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’&lt;/span&gt; இது முருகேசனின் அன்றாட புலம்பல்.&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’&lt;/span&gt; இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். &lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ &lt;/span&gt;என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’&lt;/span&gt;ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’&lt;/span&gt; என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் &lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ &lt;/span&gt;மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான்.  கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. &lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே.  நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’&lt;/span&gt; அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘வாங்கம்மா என்ன வேணும்?’. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘ஆப்பில் என்னவெல’.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘கிலோ 140’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘அரகிலோ போடுங்க’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘ம்ம்ம்’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘பை வச்சிருக்கீங்களா?’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘இருக்கு’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘இல்லப்பா’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘காலைல ஏது பங்காளி. இல்ல...’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’&lt;/span&gt; கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான்.  இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’&lt;/span&gt; குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;•••••••••••••••&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-5794230373263111211?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/5794230373263111211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=5794230373263111211' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5794230373263111211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5794230373263111211'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/07/blog-post_21.html' title='ஒட்டுவாரொட்டி...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5025392577205361329</id><published>2010-07-19T18:30:00.000+05:30</published><updated>2010-07-19T18:34:58.179+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடரிடுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><title type='text'>பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நண்பர் &lt;span style="font-weight: bold;"&gt;புலவன் புலிகேசி&lt;/span&gt; என்னையிந்த தொடரிடுகைக்கு அழைத்திருந்தார். அவருக்கு எனது நன்றிகள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TERIrDCgvvI/AAAAAAAAAtY/7SauM_ZQe9c/s1600/j0396175-main_Full.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TERIrDCgvvI/AAAAAAAAAtY/7SauM_ZQe9c/s320/j0396175-main_Full.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5495597349686263538" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;சி@பாலாசி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;இல்லை. க.பாலாசி என்பதுதான் எனது முழுமையான பெயர். முதலில் என்பெயரின் கடைசியெழுத்தான ‘சி’ என்பதை தலைப்பாக வைத்திருந்தேன். பிறகு மாற்றம்வேண்டி சி@பாலாசி என்பதாக மாற்றிக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;3)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;முதலில் கேபிள் சங்கரின் திரைவிமர்சனங்கள் படிக்க ஆரம்பித்து அப்படியே படிப்படியாக வலைப்பூவென்றால் என்னவென்பதை அறிந்து பிறகு ஏதோவொரு நப்பாசையில் எனக்கான வலைப்பூ ஒன்றை உருவாக்கிக்கொண்டேன். அனுபவங்கள், மனதில் உருவாகும் ஆக்கங்கள், சிலசமயம் சரி, தவறெனப்படுவதையும் பதிந்துகொண்டிருக்கிறேன். அவை கட்டுரையாகவோ கவிதையாகவோ இருக்கலாம். &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;தடியெடுத்தவர்கள் யாவரும் தண்டல்காரர்களில்லை. பிரபலம் என்ற அடைமொழி வலைப்பதிவாளர்களுக்கு பொருந்துமா என்றும் தெரியவில்லை. பாதையெங்கும் வியாபித்திருக்கும் பூக்களின் வாசம் சிலநேரம் ரம்மியமான மழையை மனதிற்குள் தூவிவிடும். சிலநேரம் அமர்ந்து அலவலாவ செய்துவிடும்.  அதுபோல் விரும்பியவர்களை மற்றும் விரும்பின இடுகைகளை வாசிக்கிறேன்,  பின்னூட்டமிடுகிறேன் அவ்வளவே.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;உண்டு. பகிர்வுக்காக சில அனுபவங்களை எழுதியிருக்கிறேன். அது நல்லதோ, கெட்டதோ யானறியேன். படிப்பவர்களின் ரசிப்பு மற்றும் பின்னூட்டங்களை தவிர்த்த விளைவுகள் என்று சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;நிச்சயம் பொழுதுபோக்கவும், போக்கிற்காகவும் அல்ல. சம்பாதிப்பதற்காகவும் அல்ல.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;ஒன்றுக்கு மட்டும்தான்.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;மற்ற பதிவர்கள் மீது கோபம் என்று இதுவரை வந்ததில்லை. மண்வாசனையும், மனிதத்தன்மையும், சூழ்நிலைச்சார்ந்த அக்கரையையும் வார்த்தைகளில் எடுத்தியம்பும் அனைவரும் பொறாமைகள் தவிர்த்த விருப்பத்திற்குரியவர்கள். அதையும் மீறின பொறாமை அவ்வப்பொழுது எழுவதுண்டு. இன்னாரென்று எளிய அடைப்புக்குள் புகுத்திவிடயியலாது.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;முதலில் பின்னூட்டமிட்டவர் கோவி.கண்ணன் என்று ஞாபகம். தொடர்புகொண்டு பாராட்டியவரெனில் அது ஈரோடு கதிர் அவர்களாகத்தான் இருக்கவேண்டும். எதோவொரு கவிதைக்கோ, கட்டுரைக்கோ கிடைத்த அவரின் பாராட்டும் ஊக்கமும் மென்மேலும் எழுதத்தூண்டியது. தவறெனில் சுட்டிக்காட்டவும் அவர் தயங்கியதாக தெரியவில்லை. அதுவே இன்றென் கூழாங்கல் நிலைக்கு காரணமும்கூட. பின்காலத்தில் வந்தமர்ந்த வானம்பாடிகள் அய்யாவின் தோள்தட்டலும் ஒருவித உற்சாக மனப்பான்மைக்கு பெரிதும் காரணம். இவர்கள் தவிர்த்த அனைத்து வாசிப்பாளர்கள் மற்றும் என்னுடன் பயணித்து படித்து பின்னூட்டமிடும் அனைவரும் என்னை தோள்நிறுத்தி பாராட்டும் வகையைச்சாருவர். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;" &gt;10)கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. மனம்போன வாழ்வென்றில்லாமல் முயன்று வாழ்கிறேன். மற்றபடி என் வாழ்காலம் இவ்வலைதள தலைப்பின் விரிவில் கூறினதுபோல அமையவேண்டுமென்றே விழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகையைத்தொடர நண்பர் &lt;span style="font-weight: bold;"&gt;முரளிக்குமார் பத்பநாபனை&lt;/span&gt; அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-5025392577205361329?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/5025392577205361329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=5025392577205361329' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5025392577205361329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5025392577205361329'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/07/blog-post_19.html' title='பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TERIrDCgvvI/AAAAAAAAAtY/7SauM_ZQe9c/s72-c/j0396175-main_Full.jpg' height='72' width='72'/><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5174739553276528739</id><published>2010-07-05T15:28:00.005+05:30</published><updated>2010-07-05T15:55:45.850+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வ.அ.த.ச.பே விழா மலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>கொஞ்சம் நடப்போம்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TDGsmYRAkYI/AAAAAAAAAss/WN5NglQQcSs/s1600/2010malarfront_1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 261px; height: 358px;" src="http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TDGsmYRAkYI/AAAAAAAAAss/WN5NglQQcSs/s320/2010malarfront_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5490359196090143106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div  style="text-align: justify;font-family:verdana;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;‘ஐயோவெனின் யான் புலி அஞ்சுவலே;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;அணைத்தனன் கொளினே, அகன்மார்பு - எடுக்கல்லேன்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;என்போற் பெருவிதிர்ப் புறுக. நின்னை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;இன்னாது உற்ற அறனில் கூற்றே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;நிரைவளை முன்கை பற்றி -&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;வரைநிழற் சேர்க- நடந்திற் சிறிதே’&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;(புறநானூற்றில் 255வது பாடல்; பாடியவர் வண்பரணர்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-family:verdana;font-size:130%;"  &gt;பாடல் விளக்கம்&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;ஐயோவென்று கூக்குரலிடின், புலி வந்துவிடுமோவென்று அஞ்சுகிறேன்.உன்னைச் சுமந்து செல்லலாம் என்றால் ரொம்ப கனமாக இருக்கிறாய். உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய நியாயமற்ற கூற்றுவன் என்னைப்போலவே பெரிதாக வருத்தப்படட்டும். தூரத்தில், மலையடிவாரத்தில் நிழல் உள்ளது. என் வளைக்கையைப் பற்றிக்கொள், கொஞ்சம் நடப்போம். (போர் நிலத்தில் காயமுற்று மரணமெய்ய காத்திருக்கும் தலைவனைக் கண்ட தலைவி, தன்னிலையெண்ணி புலம்புவதாக அமையப்பெற்றது)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;இங்கே என்மொழிக்காக என்னுள் அன்றாடம் ஒலித்திடும் வரிகள். இச்சூழ்நிலை வழியில் நம் கரங்களும், குரல்களும் இடையறாமல் இம்சிக்கும் என் தமிழை, நான் சுமந்தோடும் வழியில் கால்களையேனும் இடறாமல் இருக்கவேண்டுகிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TDGs5FYk6oI/AAAAAAAAAs0/TIfXIvrcxaA/s1600/Picture+080.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TDGs5FYk6oI/AAAAAAAAAs0/TIfXIvrcxaA/s320/Picture+080.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5490359517439126146" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இருமனச்சரம் கோர்க்கும் திருமண நிகழ்வில் ஓர் ஆண்மகன் விரும்புது ஒரு பதிவிரதையாகத்தான் இருக்கவேண்டும். அவளுக்கும் அப்படியே. இருபாலிலும் யாரோவொருவர் முன்னமே புணர்ச்சியடைந்திருப்பின் முகச்சுளிப்பிற்கு ஆளாக நேரிடும். அதை இச்சமூகம், என்சமூகம் விரும்புவதுமில்லை. பிறகெப்படியிங்கே வன்புணர்ச்சிகளொத்து என்மொழி மட்டும் இடையறாது கற்பிழக்கிறது என்றுதான் தெரியவில்லை. பிறன்மொழிக் கொண்டு என்மொழியில் பாலினக்கலப்பை புகுத்துவது எவ்வகையில் சிறப்பினையெய்த வழிக்கொணரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் வீட்டு தோட்டம் எழிலடைய நாமே விரும்பபாவிடின், அதன் தொண்மையை எத்துணை தலைமுறைவரை நம்மால் கொண்டுச் செல்லமுடியும்? பெற்றவளை புறந்தள்ளி, என் பூவனத்தைப் பயிர்மேயும் வேலியாக ஆட்கொண்ட கள்ளிச்செடியின் முலைகளில் வழிந்ததை, இதுவரையும் தாய்ப்பாலாக அருந்துவது சரிதானோ?&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் I am suffering from fever ல் தொடங்கிவைத்த இக்காய்ச்சலை எம்மருத்திட்டு குணப்படுத்த? என்பின் வரும் தலைமுறைக்கு எந்த மொழியை இதுவென் செம்மொழியாக சுட்டிவிட்டு போகப்போகிறேன். என்வீட்டில் நான் அடைகாத்த குஞ்சுகளுக்கு நிழல்தர கூரைகளுக்குப்பதில் சிலந்திப் பூச்சிகளின் எச்சங்களான ஒட்டடைகளையா விட்டுச்செல்லமுடியும்? கொட்டிக்கிடக்கும் இத்தனையெழுத்துக்களைவிடுத்து வேறெந்த மொழியுருவில் நான் என் மனதை, என் உணர்ச்சிகளை, என் மகிழ்ச்சி மற்றும் கண்ணீரை அடையாளப்படுத்திவிட முடியும். நிச்சயம் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றையநாளில் தமிழ்நாட்டு பள்ளிகளில் 5ம் வகுப்பில் ஆங்கிலமொழி படிப்புத்திறன் 81 சதம் மாணாக்கர்களுக்கு இல்லையென்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதே ஆய்வோர் எத்துணை மாணாக்கர்களிடம் தமிழ் மொழியின் படிப்புத்திறனை சோதித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படியாயின் 90 சதத்திற்குமேல் என்தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழினை இலக்கணப்பிழையின்றி எழுதப்படிக்க தெரியாது என்பதை உணரலாம். இது என்சமுதாயத்தின் அடித்தளமிழந்த நிலை. அவரவற்கு வாழ்நிலை ஏற்றங்களின்பால் கொண்ட ஈர்ப்பும், நாகரீகத்தின்மிகை கொண்ட நாட்டமும் மற்றுமின்னபிற பொருளாதாரமெனும் ஆடையிழந்த கவர்ச்சியும் என்மொழியை துச்சமென மதிக்கச்செய்துவிட்டது..விடுகிறது...விடும். இப்படியாயின் என்வாழ்காலத்திற்குள் என்மொழியினை நானே எரித்துவிட்டு சாம்பலாவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்போம் எவ்வளவுதூரம் ஊன்றுகோலினை காலெனயெண்ணி ஊனமாய் வாழ்வோமென்று...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;குறிப்பு:&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;1.  வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 23வதுஆண்டு விழா மலரில் வெளியான என்  கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;2. தேர்ந்தெடுத்த விழாமலர் குழுவினருக்கும், ஊக்குவித்த பதிவர்  வானம்பாடிகள் அய்யா அவர்களுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;3. அன்பு பதிவர்கள் &lt;a href="http://maniyinpakkam.blogspot.com/"&gt;பழமைப்பேசி&lt;/a&gt;, &lt;a href="http://maaruthal.blogspot.com/2010/07/blog-post_03.html"&gt;ஈரோடு கதிர்&lt;/a&gt;, &lt;a href="http://paamaranpakkangal.blogspot.com/2010/07/blog-post_04.html"&gt;வானம்பாடிகள்&lt;/a&gt; ஆகியோரின் கட்டுரையும் இம்மலரில் வெளியாகியுள்ளது. அதுசமயம் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-5174739553276528739?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/5174739553276528739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=5174739553276528739' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5174739553276528739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/5174739553276528739'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/07/blog-post_05.html' title='கொஞ்சம் நடப்போம்...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/TDGsmYRAkYI/AAAAAAAAAss/WN5NglQQcSs/s72-c/2010malarfront_1.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7818123036082874598</id><published>2010-07-02T18:15:00.002+05:30</published><updated>2010-07-03T18:17:52.235+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>யானை சவாரி...</title><content type='html'>&lt;span style="font-family:verdana;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அந்திப்பொழுதில் தொடங்குகிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;அம்மாவுடனான &lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;யானை சவாரி விளையாட்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவே யானை&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;மகன்தான் இப்பொழுதும் பாகன்&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் போ, அங்ப்போவாத, ம்ம் படு, எந்திரி......&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;எண்ணற்ற கட்டளைகளை&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;அவளிடம் மட்டுமே பிரயோகிக்கிறான்&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;சிலநேரங்களில் (மெல்ல) அடிப்பதும்கூட...&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுடன் விளையாட &lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இத்தனை சிரமங்களை கொடுப்பதில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;••••••••••••••••••&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்திப்பொழுதில் தொடங்குகிறது&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;அம்மாவுடனான &lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;யானை சவாரி விளையாட்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவை யானையாக்குவதில்&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;சில சவுகர்யங்கள்...&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மையான மேனி&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;அலுங்காத நடை&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;பிடிமானத்திற்கு நிறைய அவளுடன்&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொன்னால்&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;சொல்வெதெல்லாம் அப்படியே செய்வாள்&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கியப்பின்னும் &lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;'எஞ்செல்லமே' என்று &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;வாரியணைக்கத்தான் கைநீட்டுவாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் முதுகு அப்படியில்லை....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2399394462185156652-7818123036082874598?l=balasee.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balasee.blogspot.com/feeds/7818123036082874598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2399394462185156652&amp;postID=7818123036082874598' title='47 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7818123036082874598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2399394462185156652/posts/default/7818123036082874598'/><link rel='alternate' type='text/html' href='http://balasee.blogspot.com/2010/07/blog-post.html' title='யானை சவாரி...'/><author><name>க.பாலாசி</name><uri>http://www.blogger.com/profile/01203978161594756772</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_Jcq3zvqOUy0/S0MhnuMlkQI/AAAAAAAAAWA/gR3B9-Us0qE/S220/j0396175-main_Full.jpg'/></author><thr:total>47</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4832530129703798195</id><published>2010-06-30T17:59:00.002+05:30</published><updated>2010-06-30T18:19:24.746+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' t
