குறுக்காக சுமார் எட்டு மைல் கல் தொலைவு இருக்கலாம் எங்களுரிலிருந்து. மேலும்சில என் குடும்ப உறவினர்களையும் பெற்றிருக்கும் கிராமம் அது. தொடர்ச்சியாக மூன்று வருடங்கள், விடுமுறை நாட்கள் நீங்களாக, அந்தச் சாலையையும் அவ்விடத்தினையும் என் கண்கள் நிரப்பியுள்ளன. அங்கே குழுமியிருக்கும் பூச்செடிகளுக்கும் அதனூடாக முளைத்திருக்கும் புற்பூண்டுகளுக்கும் நடுவே எழுப்பப்பட்டுள்ள மணிமண்டபம் எனக்குள் ஒரு காட்சிப் பொருளாகப்பட்டதேயொழிய வேறெந்த பிரமிப்பினையும் ஏற்படுத்தியதாக நினைவிலில்லை. அப்பகுதி மக்களுக்கும் அவ்வாறே இருக்க அல்லது இருந்திருக்கவேண்டும். காலை 6.30 க்கு பழையச்சோறும், பச்சைமிளகாயும் கொடுத்த இனிமையை பவானிக்காக நான் ருசித்திருக்கலாம். வேறெந்த காரணகாரியங்களிருப்பதாய் தோன்றவில்லை. 6.45க்கு மயிலாடுதுறையிலிருந்து பொறையார் வரை அப்பேருந்து தினமும் செல்லும்வழிதான். இடையில் திருக்கடையூரைக் கடந்தால் 3 மைல்கள். தில்லையாடி. மாபெரும் வரலாற்றுக்கு சொந்தமான கிராமம். பேருந்தின் படிக்கட்டுக்கட்டுகளையும், சன்னலோரத்தையும் தாண்டி கடந்து செல்லும் அவ்விடம் வேறெந்த தாக்கதினையும் என்னுள் ஏற்படுத்தாமல் போனதற்கு அதன் முழுவரலாறு அறியா மூடனாக நான் வளர்ந்ததே காரணமாயிருக்கும்.
தில்லையாடி வள்ளியம்மையின் முழு வரலாறு இங்கே.. சாதனைப் பெண்கள்.
இன்னொருவர் காந்தியடிகளுக்கு துணையாகவும் நண்பராகவும். தமிழர் நலனில் அதிக அக்கரை எடுத்துக்கொண்டு போராடிய, பல போராட்டங்களுக்கு காந்தியடிகளுக்கு பக்கபலமாகவும் இருந்த தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆச்சாரியார்... இவரைப்பற்றின முழுத்தகவல்கள் கிடைக்கபெறவில்லை. ஆயினும் அவர் தாயார் உடல் நலமில்லாமலிருந்தபோது காந்திஜி அவர்கள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவியுடன், சுப்பிரமணிய ஆச்சாரியாருக்கு தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். அக்கடிதம் கீழே.....
இந்நேரம் உணர்கிறேன், இனியும் அங்கு செல்லவேண்டிய தருணங்கள் நிறைய இருக்கின்றது. பிறகொருமுறையும் வெறுமனே கடந்து வருவதை விரும்பவில்லை.
என்ன சொல்லி அழுதாலும்... ஆங்ங்ங்... அ............. பாவிமனம் தாங்கலையே..... ஆங்ங்ங்ங்.... அ.......... என்ன ஆறுதல் சொன்னாலும்.... ஆங்ங்ங்ங்...அ....... பாழும் மனம் ஆறலையே................................ யக்கா........