க.பாலாசி: சங்கமம்‘2011 அன்போடு அழைக்கிறோம்

Monday, December 12, 2011

சங்கமம்‘2011 அன்போடு அழைக்கிறோம்

.

அதிகாலையும் பனிப்புகையும் தொண்டையிலிறங்கும் இளஞ்சூடான தேநீரும் போல இந்த மாதத்திற்கெனவே சில சிறப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.

மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவேதான் எங்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் நடத்தும் பதிவர்கள், இணையதள வாசகர்கள், முகநூல் மற்றும் ட்விட்டர் நண்பர்களுக்கான மாபெரும் சங்கமம்‘2011. 




நாள் : 18.12.2011 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணிமுதல் மதியம் 2 மணிவரை
இடம் : ரோட்டரி CD அரங்கம்
பெருந்துறை ரோடு,
பழையபாளையம், ஈரோடு

முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு

தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக் (பொருளர்) 97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707

இணையத்தில் இணைந்த இதயங்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும்.  அன்புதோய்ந்த கரங்களுடன் வரவேற்க காத்திருக்கிறோம்...  


.

10 comments:

vasu balaji said...

சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்.

Anonymous said...

அழைப்பையே அழகாய் கவிதையாய் படைத்து விட்டாய் பாலாசி..வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி - சங்கமம் சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள் - சந்திப்போம் - சிந்திப்போம் - நட்புடன் சீனா

அமர பாரதி said...

பாலாசி, அன்போடு வந்துர்றோம். வாழ்த்துக்கள். சங்கமம் சும்மா அதிரனும்ல.

Mahi_Granny said...

பிரமாதமான வர்ணனை . இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போவதில் வருத்தம். சங்கமம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

நாங்களும் வருகிறோம் பாலாஜி. விழாவில் சந்திப்போம், நன்றி

Suresh Subramanian said...

நல்ல முயற்சி...
நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்

Kaliyan said...
This comment has been removed by the author.
என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

அன்புடன் நான் said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO