க.பாலாசி

Tuesday, May 11, 2010

இதாங்க நடந்துச்சு....



‘ஏன்டி புள்ளையப்போட்டு அடிக்கிறவ.?’

‘ம்க்கும்... புள்ளைக்கொண்ணுன்னா வந்திடுவீங்களே... துண்ட முறுக்கி தோள்ல போட்டுகிட்டு’

‘நீ..இங்க வாராசா.. ஏங் அம்மா அடிக்கிறா?’

‘ஆமா... அப்டியே கேட்டாளும் சொல்லவாப்போவுது. எங்கிட்டன்னா வாயடிக்கிறதப்பாரு...’

‘சரிடி... என்னாப்ப....??’

‘ங்ங்ங்.... காலு மொலைச்சிடுச்சுல்ல தொரைக்கு... கீழத்தெருலேர்ந்து மேலத்தெருவுக்கு வெள்ளாட களம்பிட்டாரு.’

‘அதுக்கேன்டி அலுத்துக்கிறவ. புள்ளைங்கன்னா வீட்டுக்குள்ளறயே பொத்திப்பொத்தியா வச்சிக்கமுடியும். அங்கணஇங்கண போயீ வெள்ளாடத்தானடி செய்யுங்க... அதுக்குப்போயி பெரிய இவளாட்டம்... ’

‘நீங்க இப்டியே சப்போட்டு பண்ணி பேசுங்க.. இப்ப இருக்குற மேலத்தெரு பசங்கள்லாம் சரியில்ல... அதுங்கள்ட பேசிப்பேசி... இப்ப இதுவும் எதுத்துப்பேச ஆரம்பிச்சிடுச்சி... ’

‘சரி வுடு... எல்லாம் சரியாப்போயிடும்...’

‘க்க்கும்... இப்டிச்சொல்லுற வாயித்தான்... நாளைக்கு கண்ணுகுட்டி வளத்த கழுசடயப்பாருன்னு சொல்லும். அப்ப வச்சிக்கிறேன் உங்கள... ’

‘அடிப்போடீ... மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் இப்ப முடிச்சிப்போடுறவ. வளப்புங்கறது இதுயில்ல தெரிஞ்சிக்க...’

‘ஆமா... நாவொன்னும் தெரியாம கெடக்கேங்... நீங்க வாங்க சொல்லிக்கொடுக்க... ’

‘அடியே என்னாடி... நானும் பாக்கிறவ சத்தம் ஓவராப்போவுது...பாத்துக்க..’

‘அப்டியே உம்மகிட்ட சத்தம்போட்டுட்டாலும் அடங்கிப்போயிடுவீரு... பேச வந்துட்டாரு.. பேச்சு.. போய்யா சும்மா... ’

‘ஏய்... வாய மூடிட்டு..மொதல்ல.. சும்மாயிருடி...’



‘எதுச்சொன்னாலும் அப்டியே அடக்கிடுங்க... குடும்பத்துக்கே இதே பொழப்பாப்போச்சு..’

‘ஏய்..என்னய எதுனாச்சும் சொல்லு எங்குடும்பத்த சொல்லாத...ஆமா... ’

‘யோ..போயா.. உங்குடும்பத்தப்பத்தி எனக்கு தெரியாதா... எங்கப்பன் பேச்ச கேட்காம நான் உன்னத்தான் கட்டுவன்னு அடம்புடுச்சி கட்டுனனுல்ல.. எனக்கு இதும்வேணும், இன்னமும் வேணும்..’

‘அதுமாதிரிதான்டி நானும், ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா... எந்தலையெழுத்து உன்ன கட்டிகிட்டு மாரடிக்க வேண்டிகெடக்கு...’

‘ஆமா சும்மா கூட்டிட்டு வந்தமாதிரி பேசுற.. 15 பவுனு நகய எப்பன்ட விடாப்புடியா வாங்குணப்ப இந்த மாரு அடிச்சுக்கலையா... ’

‘அடியே எதுத்து எதுத்து பேசுறவ... அப்பறம் போட்டேன்னு வய்யி... தாங்க மாட்ட..’

‘ஆமாய்யா.. என்னய எப்பன் அதுக்குத்தான் பெத்து உட்ருக்கான்... அடிப்ப நீயி...??!!!’

(ப்ப்ப்ளார்.............)

‘ஆத்தாடி.....யோவ்... அடிச்சிட்டில்ல... இத்தன நாளு இல்லாம கைய நீட்ரளவுக்கு ஆயிட்டீல்ல.. இனிமே உங்கூட வாழமுடியாதுய்யா... நான் எப்பன் வீட்டுக்கு களம்புறேன்.’

‘போடீ...போடீ.... இவ இல்லன்னா வாழமுடியாது பாரு... பெரிய இவ... ’

‘ஆமாய்யா... இப்ப ஒனக்கு தெரியாது. நாளைக்கு எவடா கொஞ்சம் தண்ணி காச்சி ஊத்துவான்னு தெருவுல நிப்ப பாரு... அப்பதான் தெரியும்... ’

‘அடிப்போடீ.. ஆனா அந்த மடம்... ஆவாட்டிப்போனா சந்தமடம்.... ’

‘நாங்களம்புறன்ய்யா... நாளபின்ன எப்பன் வீட்டுக்கு வருவீல்ல .. சமாதானம் பேசிட்டு...அப்ப வச்சிக்கிறேன் உன்னய... ’

‘பூன கண்ண மூடுனா பூலோவம் இருண்டுடாதிடீ.. தெரிஞ்சிக்க... நாங் ஒருக்காலும் வரமாட்டேன்... ’

‘அதையும்தான் பாப்போம்...அப்பனும் புள்ளயுமா கெடங்க... ’

•••••••••

‘அம்மே..... அம்மே.......... எனக்கு அம்மா வேணும்...ம்ம்ம்....ம்ம்ம்..........’

‘என்ன நொம்மே... அதான் போயிட்டாள்ல.... எல்லாம் உன்னால... இனிமே மேலத்தெருவுக்கு வெள்ளாட போவ நீயி.... எங்க அந்த குச்சி.....

‘(போடு... 1.......2...........3...........)’

‘அவ்வ்வ்வ்வ்வ்வ்........................................... ’




Friday, May 7, 2010

பிறழ்நிலை...



தினசரி


(பேருந்து நிலையம்)

அண்ணா....அண்ணா...???

ம்ம்ம்....??

காசுண்ணா... சாப்டு ரெண்டு நாளாவதுண்ணா....

ம்கூம்... சில்லர இல்ல பாப்பா...

(ச்ச... பஸ்டான்டு, ரயில்வே ஸ்டேசன் எங்கணப்போனாலும் வந்திடுதுவோ.. இதுங்கள பெத்ததுக என்னப்பண்ணுதுங்கன்னு தெரியல??)

********************

அவ்வப்பொழுது

(பேருந்து நிலையத்திலிருந்து எனது வீதிக்கு வரும் வழி)

‘ஏங்கண்ணு இன்னைக்கு வேலைக்கு போவலையா?’

‘இல்லீங்க... இன்னைக்கு ஞாயித்துக்கெழம லீவு. (சுமார் 40 வயது பெண்மணி...யாரு இவங்க...!!!? எங்கணயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா தெரியலையே..??)’

‘ஓ.. ஏங்கண்ணு சோப்புல்லாம் வாங்கிட்டு போற?’

‘ம்ம்.. தீந்துடுச்சு.. அதான்.’

‘ஆமா இப்ப எங்க வேலப்பாக்குற???’

‘அதே ......... கம்பனிதான்.’ (அட தெரிஞ்சவங்க மாதிரி பேசுனாங்க... இப்ப இப்டி கேட்குறாங்களே?!! நாம ஆரம்பத்லேர்ந்து அங்கணதான இருக்கோம்)

‘ஒரு 2 ரூவா இருந்தா கொடேன்... டீக்குடிக்க....’

(ஆகா... இது நல்ல டெக்னிக்கா இருக்கே.... ) சில்லர இல்லைங்களே...

சரி.... போ.....

********************

உள்ளுரையாடல்

மனசாட்சி: – ச்ச்ச... எத்தனப்பேரு இந்த மாதிரி.. கைகாலெல்லாம் நல்லாத்தானிருக்கு... பெறவு என்னாத்துக்கு இந்தமாதிரி அடுத்தவேள சோத்துக்குக்கூட வழியில்லாம சோம்பேறியா இருக்காங்க.? இவங்களோட காலம்லாம் எப்டி ஓடுதுன்னே தெரியல.?

புத்தி: – சரி... இப்ப அதுக்கு என்னாங்கற?

மனசாட்சி: – ஏதாவது செய்யணும். இந்த மாதிரி உள்ளவங்களுக்கு.. அட்லீஸ்ட் எங்கணயாவது வேல வாங்கிக்கொடுத்தாக்கூட பொழச்சிப்பாங்க.

புத்தி:– அப்டி செஞ்சா பொழச்சிப்பாங்கன்னு நினைக்கிறீயா?

மனசாட்சி: – ம்ம்...இல்லன்னா போறாங்க... கடமையா நெனச்சி செய்யலாம்ல...

புத்தி: – சரி... யாருட்ட போயீ இவங்களுக்கு வேல கேட்ப? உன்னோட முதலாளிகிட்ட கேட்க முடியுமா உன்னால?

மனசாட்சி: – அய்ய.. எங்காளுங்க காம்ப்ளக்ஸ் உள்ளாரயே உடமாட்டாங்க....

புத்தி: – பெறவென்ன? மூடிகிட்டு போவ வேண்டியதுதான.... என்னாத்துக்கு இந்த ஃபீலிங்கு...

மனசாட்சி:– ஒரு தவிப்பு, அக்கரை.... அதான்...

புத்தி: – சரி... அடுத்ததா நீ எங்கப்போவனும்?

மனசாட்சி: – ம்ம்... சாப்பிட்டு இன்னைக்கு மதியானமாவது நல்லா தூங்கணும்...கண்ணெல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு.

புத்தி: – ம்ம்.. மொதல்ல அதச்செய்யி....

மனசாட்சி: – ம்ம்...

********************

நடைமுறை

டிங்..டிங்...டிங்......டிங்..டிங்..டிங்.....டிங்..டிங்..டிங்...............

‘ஹலோ..’

‘டேய் நாங் குமார் பேசுறன்டா... திருப்பூர்லேர்ந்து இன்னும் கொஞ்சநேரத்துல களம்பிடுவேன்’

‘எத்தன மணிக்கு வருவ?’

‘ரெண்டர மணிக்குள்ள வந்திடுவேண்டா... நீ சாப்பிட்டியா?’

‘இல்ல, நீ வந்தொடன சாப்பிட்டுக்கலாம் வா...’

‘ஏய் நான் இப்ப கொக்கரக்கோ ரெஸ்டாரண்ட்ல இருக்கேன். உனக்கும் சேத்து பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்திடுறேன்.’

‘அப்டியா.. சரி..சரி... ம்ம்ம்... கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’

‘சரிடா...’

‘ஏய்... சீக்கிரம் வந்திடுடா...’

‘சரி..சரி.. வைக்கட்டுமா.??’

‘ம்ம்ம்.........’

********************

Tuesday, May 4, 2010

நல்லவேளை...




முந்தைய வெள்ளி...

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி கோவில்,

சென்றவாரம் திருப்பத்தூர் அணேரி,

அமாவாசைதோரும் திருமணஞ்சேரி,

வழக்கம்போல்....

இடையன்குள பிள்ளையாரும், அரசமரமும்....


வாரயிதழில் கண்ணுற்றபடி

மாதமொருமுறை ஒரு மருத்துவச்சி...

ஆறுதலுக்காக...

சித்த வைத்தியமும், சில லேகியமும்கூட...

பிள்ளை வேண்டி

அவள் தினசரியில் கலந்துவிட்டது...


நல்லவேளை...

எனக்கு மாமனார் மட்டுமே.....




  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO