க.பாலாசி: October 2009

Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்...

பதிவுலக மூத்தவரான அன்பர் வானம்பாடிகளின் முதுமுறை அழைப்பிற்கிணங்க இந்த தொடர்பதிவை நானும் தொடுகிறேன்.


1) உங்களைப் ற்றி சிறு குறிப்பு?


சொல்லுமளவிற்கு அறியப்படவில்லை என்று என்னுடைய சுயவிவரத்திலேயே குறிப்பிட்டிருந்தாலும், இது சிறு குறிப்பு என்பதால் சொல்கிறேன். வயது 27. படிப்பு இளம் அறிவியல் கணிதம். சொந்த ஊர் நாகை மாவட்டம், மயிலாடுதுறை. பணி நிமித்தமாக தற்போது ஈரோடு.


2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம்?


அப்பா குருவி வெடியை ஒவ்வொன்றாக விளக்கில் கொளுத்தி விட்டெரிந்து வெடித்தார். அதையே பார்த்துக்கொண்டிருந்த நான் ஒரு பாக்கெட்டைமட்டும் எடுத்து விளக்கில் கொளுத்தி வெடித்தேன். பிறகு நடந்தது எனக்குமட்டும் தெரியவில்லை. பாதிப்பு ஒன்றுமில்லாமல் தப்பித்ததாக எனது எழுதப்படாத வரலாற்றில் இருக்கிறது. அப்போது என் வயது 2.


3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?


அப்பா அம்மாவுக்கு...தண்ணீரும் சோறும் போடும் மண்ணில். (செம்பொன்னார்கோயில், மயிலாடுதுறை)


4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள்?


ச்சி...இந்த பழம் புளிக்கும் என்று இப்போதுள்ள 8ம் வகுப்பு மாணவர்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால் மட்டைவிளையாட்டில் மூழ்கி முத்தெடுத்தெடுத்து கொண்டிருந்தனர். அந்த வயதுக்கு கீழேயுள்ள சிறுவர்கள் மட்டும் தங்களது சிற்றின்பங்களை, வெடித்து சிதறும் காகிதத்தின் எண்ணிக்கையில் தேடிக்கொண்டிருந்தனர். வழக்கம்போல் பெரிசுகள் இந்த நாளுக்காக சேர்த்துழைத்த வதங்கிய உடலை உறக்கத்தில் மீட்க, வெடியொலியின் சப்தங்களுக்கிடையே முயன்றுகொண்டிருந்தனர்.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா ?


அப்பா வாங்கி கொடுத்தார். தைத்தேன். ஆனால் தீபாவளிக்கு அல்ல.


6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?


அம்மாவிற்கு வீண்வேலை வைக்க எப்போதும் விரும்புவதில்லை.


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?


உறவினர்களும் சரி, நண்பர்களும் சரி...யாரும் என்னிடம் வாழ்த்துக்களை எதிர்பார்த்ததில்லை. என்னிலையும் அப்படியே.


8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா?


தொலைக்காட்சி பார்ப்பது வழக்கமாக இல்லாத காரணத்தினால் முடிந்தவரை வீட்டிற்குள்.....புத்தகங்களை புரட்டுவதிலேயே நேரங்கள் நேராகும்.


9) இந்த இனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள்? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?


விடுமுறை கிடைக்கும் நாளாக அமைவதால் மட்டும் இனிய நாள் என்று கருதுகிறேன். மற்றபடி அந்த நாளில் நான் உதவி செய்தவர்களுக்கு பெயர், முகவரியைத்தவிர வேறொன்றும் இருந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.


10) நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர், அவர்களின் லைத்தங்கள்?


ஓர் அனுபவத்தை அறியும் பொருட்டு நண்பர்களான புலவன் புலிகேசி மற்றும் ஊடகன் அழைப்பை ஏற்பார்கள் என்ற எண்ணத்துடன்


பாசமுடன்,

.பாலாசி

Friday, October 30, 2009

எழுதப்படாத கவிதையாக...



இளமையில் கற்றேன்

முதுமைக்கு முன் வேலை கிடைத்தது...


அக்கா அம்மி மிதித்தாள்

தங்கை தாரமாய் போனாள்

அம்மாவின் அறுவைசிகிச்சை நடந்தது

அப்பாவின் உடலுழைப்பு ஓய்ந்தது.


முப்பத்தாறில் திருமண முயற்சி...


அம்மா

அப்பா

உறவினர்

தரகர்...


ஒவ்வொருவராய்

முயன்று தோற்க...


இன்றும் நான்

எழுத்தப்படாத கவிதையாக...



தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...




Wednesday, October 28, 2009

பவானி தேனீ...


காலேஜ்ல படிக்கிறப்ப ஒருத்திய காதலிச்சேன். ஆதலினால் டெய்லியும் அவ டேபிள்ல (அவ போனதுக்கு அப்பறம்தான்) ஒரு கவிதன்னு எழுதி வைச்சிட்டு வருவேன். மறுநாள் போய் பாக்குறப்ப அது இருக்காது. ரொம்ப பாசமா அத பிளேடால சொரண்டி வைச்சிருப்பா. அதுக்கெல்லாம் சளைச்சவனில்லங்கற கணக்கா நானும் விடாம எழுதி வைச்சிகிட்டே இருந்தேன். அவளும் டெய்லியும் அழிச்சிட்டு போய்டுவா.


திடீர்னு ஒருநாள் அவ இடத்துல நான் எழுதின கவிதைக்கு பின்னூட்டம் போட்ட மாதிரி


பவானி தேனி

பாலாசி பண்ணி


- ன்னு எழுதியிருந்துச்சு (அவ்வ்வ்வ்...). நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு. திடீர்னு இப்டி இருக்கே என்னடான்னு பார்த்தா அதுக்கு முதல் நாள் அவளோட அண்ணனுக்கு மாலைநேர வகுப்பு அதே கிளாஸ்ல நடந்திருக்கு. அதனாலத்தான் பாசமலர் அண்ணன் அன்ப பொழிஞ்சிருக்கார். அதுக்காகல்லாம் கவலப்படுறது நம்ம பரம்பரைக்கே பழக்கம் கெடையாதுல்ல. வழக்கம்போல வழுக்கத்தலயில எண்ண தடவுறமாதிரி அப்டியே போய்கிட்டிருந்துச்சு எதுக்குமே பிரையோசனமில்லாம.


கடைசியா நானும் மூணு வருசம் முடிச்சு நாலாவது வருசமும் பி.எஸ்.சிய படிச்சேன். அவ கரைட்டா மூணு வருசத்துல எல்லாத்தையும் முடிச்சிட்டு எம்.எஸ்.சிக்கு போயிட்டா. நான்தேன் நாசமாப்போனேன்.


அப்டி எழுதுன கவிதையில (நாமலே சொல்லிக்க வேண்டியதுதான்) ஒருசிலது கீழ தொங்கிகிட்டு இருக்கு (என்னோட பழைய டைரியில சுட்டது)



உன் கண்கள்

எழுதிய கவிதையில்

வளைத்துப்போடப்பட்ட

வார்த்தைகள் நான்.


******


காதல் மீன்கள்

உன் மனதில்

தூண்டிலுடன்

எத்தனை ஆண்களடி...



******


மடப்புறத்து மயிலே (மடப்புறம் அவளோட ஊரு)

என்னை

மடையனாக்கிய குயிலே. (ஆகா...தத்துவம்)


******


நான் பிறந்தது

அமாவாசையாம்...

உண்மைதான்

நீ பிறக்கவில்லையே...


******


உன்

கொலுசொலியால்...

கூவ மறந்த

குயில் நான்.


******


உன் பின்

வருகையில்

காற்றினில் அசையும்

துப்பட்டாகூட சொல்கிறது

வா...வா...என்று..


******

(பேருந்தில்)

முன்னிருக்கையில்

அமராதே....

எதிர்வரும்

வாகனங்கள்

முத்தமிடப்போகிறது.


******


முல்லைக்கு

தேர் கொடுத்தானாம்

பாரி...

மன்னித்துவிடு...

உன்னை

பார்த்திருக்கமாட்டான்.


******

இப்பவும் புரியல...அவ அண்ணன் ஏன் அப்டி எழுதினான்னு. இது ஒன் சைடு...டபுள் சைடு ஒண்ணு இருக்கு (அது ஒரு பெரிய கத....)


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...




  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO