க.பாலாசி: முச்சந்தி...

Thursday, October 22, 2009

முச்சந்தி...



காதல்...


உதிரம் தொடங்கி உறையும் வரையில்

உட்புகும் உணர்ச்சியாய் உடனிருந்து...

வஞ்சியுடன் சேர்ந்தவுடன்

வஞ்சனைக்கு வாழ்க்கைப்பட்டு...

வருத்திவிட்டு சென்றுவிடும் வன்மமது...


காதலி...


தொட்டணைத்து...தொடர்ந்துவந்து

தோகைமயில் உணர்வளித்து

தொக்கி நிற்கும் வாழ்க்கையதை

தொலைவில் நின்று பார்த்துவிட்டு

தொலைந்தழிந்து போகிவிடும் தொடக்கமவள்...


காதலன்...


கண்களுக்கு மருந்தளித்து

கனவதற்கு விருந்தளித்து

கணவனாகும் நேரமதை

கர்வமுடன் எதிர்நோக்கி - இளமை

காலமிழக்கும் கவிஞனவன்.


•••••••


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...







41 comments:

அனுபவம் said...

அழகு! இப்படி குட்டி குட்டியா எழுதினா எல்லாருக்கும் நல்லதுதான்!

அன்புடன் நான் said...

காதல்... காதலி... காதலன்...
முத்துக்கள் மூன்று!

கார்த்திகைப் பாண்டியன் said...

காதலி - அருமை..:-)))

vasu balaji said...

ஏன் ராசா? இதெல்லாம் என்னா? இதுக்குதான் எட்றா கீ போர்டன்னு சவுண்ட் விட்டதா? இதும் நல்லாத்தானிருக்கு.

velji said...

கண்ணதாசன்,வாலி காலத்து சொல்லாடல் போல் இருக்கிறது.சிறப்பாக எழுதியிருக்கிறீகள்.
ஆனால், காதலில் விழ இருப்பவர்கள் யோசிக்கனும் போல!?

ஈரோடு கதிர் said...

ஏனப்பு.. இம்புட்டுச் சோகம்

ஒன்ன்ன்னும் சரியா அமையா மாட்டேங்குதோ...

--------------------------
//உதிரம் தொடங்கி உறையும் வரையில்//

கவிதை நல்லாயிருக்கு

சத்ரியன் said...

//காதல்...

காதலி...

காதலன்...//

பாலாசி,

விளக்கம்
பால் பாயாசம்...!

ஈ ரா said...

பின்னிரு சந்திகளும் , சரியாக சந்தித்தால், முதல் சந்தி பாசந்தியாகும்..

இல்லீன்னா முச்சந்திதான்...

நன்று

மணிஜி said...

வாழ்த்துக்கள் கவிஞரே..

ஹேமா said...

அழகாப் பேர் வச்சிருக்கிங்க பாலாஜி.மூணாவும் இருந்து யோசிச்சிருக்கீங்க.நல்லாருக்கு.

பிரபாகர் said...

//இளமை
காலமிழக்கும் கவிஞனவன்//
//
தொலைவில் நின்று பார்த்துவிட்டு
தொலைந்தழிந்து போகிவிடும் தொடக்கமவள்...
//
என்ன பாலாஜி... சோகத்த அப்படியே புழிஞ்சி விட்டிருக்கீங்க....

படிச்சிட்டு ரொம்ப சோகமா இருக்கு, என்னை அதன் உண்மைகள் பாதிச்சதால.

நல்ல அனுபவக்கவிதை.

காமராஜ் said...

கவிதை நல்லயிருக்கு பாலாஜி

புலவன் புலிகேசி said...

//கர்வமுடன் எதிர்நோக்கி - இளமை

காலமிழக்கும் கவிஞனவன். //

அருமையான சிந்தனை பாலாஜி...நல்லா இருக்கு........

Jerry Eshananda said...

"சந்தி சிரிக்குதப்போய்.".

தீப்பெட்டி said...

//தொலைவில் நின்று பார்த்துவிட்டு

தொலைந்தழிந்து போகிவிடும் தொடக்கமவள்.//

கலக்குறீங்க பாஸ்..

Ashok D said...

பாலாஜி....
what happened man?
கவித கவிதையா இல்ல..

நிலாமதி said...

முத்து முத்தாக் மூன்று கவிதைகள். பாராடுக்கள்.

அன்பேசிவம் said...

வாழ்த்துக்கள் நண்பா, மூன்றுமே அருமை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான கவிதைகள் பாலாசி. காதலி கவிதை மிக அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

//உதிரம் தொடங்கி உறையும் வரையில்//

உதிரத்தில் கலந்ததில் உறையும் வரையில்

இப்படி இருந்தா எப்படி பாலாஜி?

மூணும் ரொம்ப பிடிச்சிருக்கு...

தமிழ் நாடன் said...

இன்னா நைனா எல்லாருமே இப்படி சோக கீதம் வாசிச்ச எப்டி?

சீக்கிரம் குஜாலா ஒன்னு எழுதுமே!

சும்மா ஜாலிக்குத்தான்!

எல்லாமே நல்லாருக்கு!

க.பாலாசி said...

//Blogger அனுபவம் said...
அழகு! இப்படி குட்டி குட்டியா எழுதினா எல்லாருக்கும் நல்லதுதான்!//

அப்படியா....உங்களின் நல்லதுதான் எனக்கும் நல்லது...நன்றி...

//Blogger சி. கருணாகரசு said...
காதல்... காதலி... காதலன்...
முத்துக்கள் மூன்று!//

மிக்க நன்றி...

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
காதலி - அருமை..:-)))//

நன்றி நண்பரே...

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ஏன் ராசா? இதெல்லாம் என்னா? இதுக்குதான் எட்றா கீ போர்டன்னு சவுண்ட் விட்டதா? இதும் நல்லாத்தானிருக்கு.//

நாம அந்த கதையை அப்பறமா வச்சிக்குவோம்....இப்போதைக்கு இதுதான். நன்றி வருகைக்கு...

//Blogger velji said...
கண்ணதாசன்,வாலி காலத்து சொல்லாடல் போல் இருக்கிறது.சிறப்பாக எழுதியிருக்கிறீகள்.
ஆனால், காதலில் விழ இருப்பவர்கள் யோசிக்கனும் போல!?//

ஆமா நைனா....கொஞ்சமாவது யோசிக்கனும்...நன்றி...

//Blogger கதிர் - ஈரோடு said...
ஏனப்பு.. இம்புட்டுச் சோகம்//

அய்யோ அய்யோ நம்பிட்டாங்க...

//ஒன்ன்ன்னும் சரியா அமையா மாட்டேங்குதோ...//

ஆமா தல....

//கவிதை நல்லாயிருக்கு//

நன்றி அன்பரே....

க.பாலாசி said...

//சத்ரியன் said...
பாலாசி,

விளக்கம்
பால் பாயாசம்...!//

நன்றி அன்பேர...

//Blogger ஈ ரா said...
பின்னிரு சந்திகளும் , சரியாக சந்தித்தால், முதல் சந்தி பாசந்தியாகும்..
இல்லீன்னா முச்சந்திதான்...//

ஆமா தலைவா...கண்டுபிடிச்சிட்டீங்களே....நன்றி வருகைக்கு...

//Blogger தண்டோரா ...... said...
வாழ்த்துக்கள் கவிஞரே..//

மிக்க நன்றி அறிஞரே...

க.பாலாசி said...

//ஹேமா said...
அழகாப் பேர் வச்சிருக்கிங்க பாலாஜி.மூணாவும் இருந்து யோசிச்சிருக்கீங்க.நல்லாருக்கு.//

நன்றி ஹேமா....

//Blogger பிரபாகர் said...
என்ன பாலாஜி... சோகத்த அப்படியே புழிஞ்சி விட்டிருக்கீங்க....//

அப்டில்லாம் இல்லீங்ணா....சும்மாதான்.

//படிச்சிட்டு ரொம்ப சோகமா இருக்கு, என்னை அதன் உண்மைகள் பாதிச்சதால.
நல்ல அனுபவக்கவிதை.//

அனுபவக்கவிதையா....சரிதான்....நன்றி அய்யா வருகைக்கு...

//Blogger காமராஜ் said...
கவிதை நல்லயிருக்கு பாலாஜி//

மிக்க நன்றி தோழரே....

க.பாலாசி said...

//புலவன் புலிகேசி said...
அருமையான சிந்தனை பாலாஜி...நல்லா இருக்கு........//

நன்றி நண்பா...

//Blogger ஜெரி ஈசானந்தா. said...
"சந்தி சிரிக்குதப்போய்.".//

நன்றி ஜெரி.....

//Blogger T.V.Radhakrishnan said...
அருமை//

நன்றி நண்பரே...

க.பாலாசி said...

//தீப்பெட்டி said...
கலக்குறீங்க பாஸ்..//

நன்றி அன்பரே...

//Blogger D.R.Ashok said...
பாலாஜி....
what happened man?
கவித கவிதையா இல்ல..//

ஒன்லி கவிதைதான் அன்பரே...நன்றி வருகைக்கு...

//Blogger நிலாமதி said...
முத்து முத்தாக் மூன்று கவிதைகள். பாராடுக்கள்.//

நன்றி நிலாமதி...

க.பாலாசி said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
வாழ்த்துக்கள் நண்பா, மூன்றுமே அருமை.//

நன்றி நண்பா...

//Blogger ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அழகான கவிதைகள் பாலாசி. காதலி கவிதை மிக அருமை.//

மிக்க நன்றி அன்பரே...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
உதிரத்தில் கலந்ததில் உறையும் வரையில்
இப்படி இருந்தா எப்படி பாலாஜி?//

இதுவும் நல்லாதான் இருக்கு வசந்தகவி...

// மூணும் ரொம்ப பிடிச்சிருக்கு...//

நன்றி நண்பா....

க.பாலாசி said...

//தமிழ் நாடன் said...
இன்னா நைனா எல்லாருமே இப்படி சோக கீதம் வாசிச்ச எப்டி?
சீக்கிரம் குஜாலா ஒன்னு எழுதுமே!
சும்மா ஜாலிக்குத்தான்!
எல்லாமே நல்லாருக்கு!//

அடுத்தது அப்படித்தான் எழுதனும் மகனே...

நன்றி வருகைக்கு....

க.பாலாசி said...

//[Score: 13 out of 15 votes]
தமிழ்மணம் பரிந்துரை : 13/15//

தமிழ்மணத்துல ரெண்டு எதிர் ஓட்டு போட்ட நண்பர்களுக்கும் நன்றி....

தேவன் மாயம் said...

பாலாஜி! கவிதையில் விரக்தி, சோகம் தெரியுதே!

விரும்பி said...

வணக்கம் பாலாஜி

ரொம்ப....... அனுபவப்பட்டிட்டீங்க

நல்லாயிருக்கு

"உழவன்" "Uzhavan" said...

முக்கனிகள் இவை

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் ...நல்லா இருக்கு ..

க.பாலாசி said...

//தேவன் மாயம் said...
பாலாஜி! கவிதையில் விரக்தி, சோகம் தெரியுதே!//

எழுத்தில் மட்டும்தான் அன்பரே...

//விரும்பி said...
வணக்கம் பாலாஜி//

வணக்கம்....

//ரொம்ப....... அனுபவப்பட்டிட்டீங்க
நல்லாயிருக்கு//

நன்றி...

//" உழவன் " " Uzhavan " said...
முக்கனிகள் இவை//

நன்றி உழவன்...

//நேசமித்ரன் said...
வாழ்த்துக்கள் ...நல்லா இருக்கு ..//

மிக்க நன்றி அய்யா...உங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு...

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

என்ன ஒரே சோகமயமாக்கீது

சந்தான சங்கர் said...

காதல்
காதலி(க்கப்பட்டதால்)
காதலன்
கவிஞனானான்...

நல்லது பாலாசி
எங்க பக்கமும் வாங்க..

வால்பையன் said...

//தோகைமயில் உணர்வளித்து //

யாருக்கு?

பா.ராஜாராம் said...

அருமை பாலாஜி!rithamic!

விஜய் said...

நல்லா இருக்குங்க நண்பரே

விஜய்

க.பாலாசி said...

//Blogger கிறுக்கல் கிறுக்கன் said...
என்ன ஒரே சோகமயமாக்கீது//

அப்டியாக்கீது....சும்னாச்சிக்கும். நன்றிப்பா...

//Blogger சந்தான சங்கர் said...
காதல்
காதலி(க்கப்பட்டதால்)
காதலன்
கவிஞனானான்...
நல்லது பாலாசி
எங்க பக்கமும் வாங்க..//

நன்றி அன்பரே...முதல் வருகைக்கு...உங்கள் பக்கமும் வருகிறேன்.

//Blogger வால்பையன் said...
//தோகைமயில் உணர்வளித்து //
யாருக்கு?//

யாருக்கோ.....நன்றி அண்ணா...

//Blogger பா.ராஜாராம் said...
அருமை பாலாஜி!rithamic!//

நன்றி அய்யா...

//Blogger கவிதை(கள்) said...
நல்லா இருக்குங்க நண்பரே

விஜய்//

மிக்க நன்றி நண்பரே...வருகைக்கு....

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO