பள்ளி நாட்களில் நான் பயின்ற ஆங்கில செய்யுளில் கீழ்கண்ட ஒரு poem இருந்தது.
GOOD FOR GOOD - நன்மைக்கு நன்மை
EVIL FOR EVIL - தீமைக்கு தீமை
EVIL FOR GOOD - தீமைக்கு நன்மை
GOOD FOR EVIL - நன்மைக்கு தீமை
இன்றைய நாளில் இதை நினைவு கூர்கையில்... நேற்று, இன்று, நாளை என இந்த மூன்று காலகட்டங்களிலும் இந்த உலகம் மேற்சொன்ன வார்த்தைகளின் சாரம் கொண்டே இயங்கியது, இயங்குகிறது, இயங்கும். இதில் இரண்டாம் சொன்ன வார்த்தையே பிரதான தத்துவமாகி உலகம் முழுதும் , ஆணவத்துடன் அலைந்து திரிந்து, கண்கொண்ட காட்சிகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
தீவிரவாதம் என்ற கேள்விக்கு பதிலாக தீவிரவாதம் என்ற பதிலினை பதிவிட்டால் கிடைக்கும் மதிப்பெண் பல உயிர்களின் மதிப்பாகவே இருக்கும். குருதியினால் கரைபுரளும் வெள்ளத்தினை அதே குருதியின் வீரியம் கொண்டு எதிர்த்தால் இரண்டும் கலந்து எதிர்த்து நிற்கும் இடமும் குருதியின் குழம்பாகத்தானே இருக்கமுடியும்.
அப்படியே சரியாக இருந்தாலும் தீவிரவாதத்தினை எதிர்த்த தீவிரவாதத்தினாலோ அல்லது வன்முறையை எதிர்த்த வன்முறையாலோ சாதிக்க முடிந்தது என்ன? என்ற ஒரு வினா தொடுக்கப்பட்டால் அதன் விடையில் அப்பாவி மக்களின் ஆவிகளே அடங்கியிருக்கும். இன்னும் சில மகாத்மாக்களின் ஆவிக்களும். வன்முறையால், இன்னொரு வன்முறையை வென்றால், இறுதியில் அந்த வன்முறையும், இன்னொரு வன்முறையாலேயே வதம் செய்யப்படும் என்பதுதானே உண்மை.
ஆயுதம் ஏந்திய போராட்டங்களின் வழி என்பது, காந்தியடிகளின் ‘அ’இம்சை வழியில் தெரிந்த வெளிச்சத்தை விட இருளாகவே இருந்தது. பலர் நடந்து செல்லவும் அகிம்சை பாதையே வழிகாட்டியது. ஒட்டு மொத்த இந்தியனுக்காக நிகழ்த்தப்பட்ட அறப்போராட்டத்தின் விடியலாகவே சுதந்திரம் எனும் சுவாசத்தை இன்றும் நாம் நிரந்தரமாய் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
GOOD FOR GOOD - நன்மைக்கு நன்மை
EVIL FOR EVIL - தீமைக்கு தீமை
EVIL FOR GOOD - தீமைக்கு நன்மை
GOOD FOR EVIL - நன்மைக்கு தீமை
இன்றைய நாளில் இதை நினைவு கூர்கையில்... நேற்று, இன்று, நாளை என இந்த மூன்று காலகட்டங்களிலும் இந்த உலகம் மேற்சொன்ன வார்த்தைகளின் சாரம் கொண்டே இயங்கியது, இயங்குகிறது, இயங்கும். இதில் இரண்டாம் சொன்ன வார்த்தையே பிரதான தத்துவமாகி உலகம் முழுதும் , ஆணவத்துடன் அலைந்து திரிந்து, கண்கொண்ட காட்சிகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
தீவிரவாதம் என்ற கேள்விக்கு பதிலாக தீவிரவாதம் என்ற பதிலினை பதிவிட்டால் கிடைக்கும் மதிப்பெண் பல உயிர்களின் மதிப்பாகவே இருக்கும். குருதியினால் கரைபுரளும் வெள்ளத்தினை அதே குருதியின் வீரியம் கொண்டு எதிர்த்தால் இரண்டும் கலந்து எதிர்த்து நிற்கும் இடமும் குருதியின் குழம்பாகத்தானே இருக்கமுடியும்.
அப்படியே சரியாக இருந்தாலும் தீவிரவாதத்தினை எதிர்த்த தீவிரவாதத்தினாலோ அல்லது வன்முறையை எதிர்த்த வன்முறையாலோ சாதிக்க முடிந்தது என்ன? என்ற ஒரு வினா தொடுக்கப்பட்டால் அதன் விடையில் அப்பாவி மக்களின் ஆவிகளே அடங்கியிருக்கும். இன்னும் சில மகாத்மாக்களின் ஆவிக்களும். வன்முறையால், இன்னொரு வன்முறையை வென்றால், இறுதியில் அந்த வன்முறையும், இன்னொரு வன்முறையாலேயே வதம் செய்யப்படும் என்பதுதானே உண்மை.
ஆயுதம் ஏந்திய போராட்டங்களின் வழி என்பது, காந்தியடிகளின் ‘அ’இம்சை வழியில் தெரிந்த வெளிச்சத்தை விட இருளாகவே இருந்தது. பலர் நடந்து செல்லவும் அகிம்சை பாதையே வழிகாட்டியது. ஒட்டு மொத்த இந்தியனுக்காக நிகழ்த்தப்பட்ட அறப்போராட்டத்தின் விடியலாகவே சுதந்திரம் எனும் சுவாசத்தை இன்றும் நாம் நிரந்தரமாய் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
இதில் கருப்பினத்திற்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கும், அதே வழியில் அதே இனத்திற்காக தென்னாப்ரிக்காவில் போராடிய நெல்சன் மண்டேலாவும் கண்ட வெளிச்சம் காந்திய வழியிலேயே தெரிந்தது. இம்சையில் கிடைக்கும் இன்மையைவிட அகிம்சையின் விளிம்பில் கிடைக்கும் சுதந்திரம் நிரந்தரமாய் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம்.
இனவெறியில் இடர்பட்டு இருந்தபோது, அங்கே விடுதலைக்கு போராடிய நெல்சன் மண்டேலா வெளியில் இருந்து கடைபிடித்த அகிம்சைக்கு வெற்றி கிடைக்கவில்லை. 27 ஆண்டுகால சிறைப்போராட்டத்தில் அறவழியில் அவர் சாதித்ததே இன்று ஒரு மகானாக உலகம் அவரை அடையாளம் காண காரணமாயிற்று. மார்ட்டின் லூதர் கிங்கின் மனிதாபிமான போராட்டமும் காந்திய கொள்கையினை கொள்முதல் செய்தே நடந்தது. இவையிரண்டிற்கும் தீர்வாக கிடைத்த கருப்பின சகோதரர்களின் சந்தோஷமே காந்தியத்திற்கு வெளியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றால் மிகையாகாது.
தீவிரவாதம், வன்முறை இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே சிக்குண்ட போராட்டம் என்ற புனிதம் புரியவைக்கப்படாமலேயே கொல்லப்பட்டு விட்டது. ஒரு அறப்போராட்டம், வன்முறையானாலோ அல்லது தீவிரவாதமானாலோ இறுதியில் உமிழப்படும் உதிரம் சாய்த்தது சகமனிதனின் உயிரைத்தானே. இதையா போராட்டங்கள் விரும்புகின்றன?
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எனும்போது இழப்பு என்பது அந்த இரண்டு இடங்களையும் மட்டுமே பாதித்துவிடப் போவதில்லை. அதையும் தாண்டி அதோடு தொடர்புடைய இன்னும் சிலவற்றையும் சேர்த்துதான் துண்டாடுகிறது. சாலைமறியலில் கிடைக்கும் நீதி, பேருந்தை எரிப்பதினால் கிடைத்துவிடப் போவதில்லை. மலையுச்சியில் புறப்படும் நீருற்று மரம் செடிகொடிகள், பாறைகள் இவற்றை கடந்துதான் வருகிறதேயொழிய அவற்றை கோடறி கொண்டு வெட்டி சாய்த்துவிட்டு ஆறாக சங்கமிப்பதில்லை.
இலங்கை தமிழர்களுக்காக முக்கிய மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 12 நாள் அன்னம், தண்ணியில்லாமல் உண்ணாவிரதம் இருந்து...இறந்த திலீபன், 13ம் நாள் வெற்றிப்பெற்றான். அந்தநாள் அவன் உயிருடன் இல்லை. ஆயினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருந்தன பின்னர் அங்கே நிகழ்ந்த சில தவறான இருதரப்பு புரிந்துணர்வுகளினால், ஆயுதமே மீண்டும் ஏந்தப்பட்டது. வெற்றி கிடைத்ததா என்றால் இன்று வரையில் இல்லை என்பதே மறுக்கமுடியா உண்மை. ஒருவேளை அன்றையிலிருந்தே அறப்போராட்டம் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் இத்தனை உயிர்களின் நாடி ஊசலாடிக் கொண்டிருக்காமல் இருந்திருக்கும்.... இருந்திருக்கலாம். உறுதிபட சொல்லிவிட முடியாதபடி அங்கே நடந்து கொண்டிருப்பது அரக்கர்களின் ஆட்சி.
எந்தவொரு முழுமையான வெற்றிக்கும் காரணமாய் அமைவது பேனா முனையில் இளகி கசியும் மையும் , அறவழியில் பிறக்கும் அகிம்சை போராட்டங்களுமே தவிர துப்பாக்கி முனையிலிருந்து துரத்தப்படும் தோட்டாக்கள் அல்ல. புரிந்துகொள்வோம். காந்திய வழிகளில் வழிப்போக்கனாகவாவது இருப்போம்.
*********
தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....
தீவிரவாதம், வன்முறை இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே சிக்குண்ட போராட்டம் என்ற புனிதம் புரியவைக்கப்படாமலேயே கொல்லப்பட்டு விட்டது. ஒரு அறப்போராட்டம், வன்முறையானாலோ அல்லது தீவிரவாதமானாலோ இறுதியில் உமிழப்படும் உதிரம் சாய்த்தது சகமனிதனின் உயிரைத்தானே. இதையா போராட்டங்கள் விரும்புகின்றன?
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எனும்போது இழப்பு என்பது அந்த இரண்டு இடங்களையும் மட்டுமே பாதித்துவிடப் போவதில்லை. அதையும் தாண்டி அதோடு தொடர்புடைய இன்னும் சிலவற்றையும் சேர்த்துதான் துண்டாடுகிறது. சாலைமறியலில் கிடைக்கும் நீதி, பேருந்தை எரிப்பதினால் கிடைத்துவிடப் போவதில்லை. மலையுச்சியில் புறப்படும் நீருற்று மரம் செடிகொடிகள், பாறைகள் இவற்றை கடந்துதான் வருகிறதேயொழிய அவற்றை கோடறி கொண்டு வெட்டி சாய்த்துவிட்டு ஆறாக சங்கமிப்பதில்லை.
இலங்கை தமிழர்களுக்காக முக்கிய மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 12 நாள் அன்னம், தண்ணியில்லாமல் உண்ணாவிரதம் இருந்து...இறந்த திலீபன், 13ம் நாள் வெற்றிப்பெற்றான். அந்தநாள் அவன் உயிருடன் இல்லை. ஆயினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருந்தன பின்னர் அங்கே நிகழ்ந்த சில தவறான இருதரப்பு புரிந்துணர்வுகளினால், ஆயுதமே மீண்டும் ஏந்தப்பட்டது. வெற்றி கிடைத்ததா என்றால் இன்று வரையில் இல்லை என்பதே மறுக்கமுடியா உண்மை. ஒருவேளை அன்றையிலிருந்தே அறப்போராட்டம் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் இத்தனை உயிர்களின் நாடி ஊசலாடிக் கொண்டிருக்காமல் இருந்திருக்கும்.... இருந்திருக்கலாம். உறுதிபட சொல்லிவிட முடியாதபடி அங்கே நடந்து கொண்டிருப்பது அரக்கர்களின் ஆட்சி.
எந்தவொரு முழுமையான வெற்றிக்கும் காரணமாய் அமைவது பேனா முனையில் இளகி கசியும் மையும் , அறவழியில் பிறக்கும் அகிம்சை போராட்டங்களுமே தவிர துப்பாக்கி முனையிலிருந்து துரத்தப்படும் தோட்டாக்கள் அல்ல. புரிந்துகொள்வோம். காந்திய வழிகளில் வழிப்போக்கனாகவாவது இருப்போம்.
*********
தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....
