க.பாலாசி: கௌரவம்

Friday, February 19, 2010

கௌரவம்


நாளைக்காவது

ரேசங்கடையில அரிசிய வாங்கியாங்க..

‘வக்கத்தவனுக்கு வாழ்க்கப்பட்டா.......

படபடத்தாள்...


தலை அசைத்தான்...


போனவாரம்

மச்சினனுக்குப்போட்ட

மோதிரமும், மத்தியான விருந்தும்

இன்னும் ஞாபகத்தில்.


••••••••••••


பாப்பாத்தியக்காவோட போனோம்னா...

போனமா...சாப்டமான்னு... வந்திடலாம்.


ரவிக்க ஒட்டு தெரியாம

முந்தானய இழுத்து மூடிக்கவேண்டியதுதான்....

பாவாட கீழதான் கிழிஞ்சிருக்கு...பரவால்ல...


அம்பது ரூவாயாவது

மொய் எழுதுனாத்தான்

கௌரவமா இருக்கும்...


அக்கா போலாமா?



66 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

பாலாசி சின்ன வயசுலயே நிறைய வாழ்க்கை பாடம் படம் படிக்கிறீங்க ...எங்க நைனா சொல்லியிருக்கு உங்கள பத்தி...

ஈரோடு கதிர் said...

எதார்த்தம் மனதை கசக்கிப் பிழிகிறது

vasu balaji said...

படு பாவி இப்படி சாவடிக்கறானே. எங்கப்பா புடிச்சிங்க இவன:((. கிளம்பறப்போ கலங்கிப் போக வச்சிட்டல்லா. நல்லாரு மோனே! ஹேட்ஸ் ஆஃப்!

Chitra said...

நிஜத்தின் வலிகள், கவிதை எங்கும்.

அகல்விளக்கு said...

யதார்த்தம் ரணமாய் கசிகிறது கவிதைகளில்...

தாராபுரத்தான் said...

சாப்பாட்டுக்கே வழியில்லாட்டியும், கிழிந்த துணியை போட்டுகிட்டாலும் கெளரவத்தை விட்டுக் கொடுக்க கூடாதுல்ல.நாங்க யாரு?

பழமைபேசி said...

இயல்பாவும் இருக்கு...மனசைத் தைக்குற மாதிரியும் இருக்கு....ப்ச்...

ராமலக்ஷ்மி said...

தங்கள் சிரமங்களைத் தள்ளி வைத்து ஏழ்மைக்கு நடுவிலும் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மனிதர்கள்.

thiyaa said...

நல்ல யதார்த்தமான வரிகள்

அன்பேசிவம் said...

அருமை பாலாஜி, எனக்கு இப்படி ஒரு அத்தை உண்டு. எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கடனகிடன வாங்கியாவது சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்திடும், மொய்ப்பணத்தோட........

பின்னிட்டிங்க நண்பா. ஏழ்மை எளிமையாக வெளிப்படுகிறது உங்கள் வரிகளில்.வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

ரொம்ப நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்..

Vidhoosh said...

very nice. :)

Paleo God said...

ச்ச கலக்கிட்டீங்க நண்பரே..!

பிரபாகர் said...

இளவல்,

அருமையாய் இருக்கிறது. உங்கள் வயதில் (ஓடுற பைக்கில் தாவி பேக் சீட்டுல உக்கார்ற வயசுல) என்னமாய் யோசிக்கிறீர்கள்...

அய்யா சொன்னதுதான் நானும் சொல்றது...

வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

சீமான்கனி said...

//அம்பது ரூவாயாவது

மொய் எழுதுனாத்தான்

கௌரவமா இருக்கும்...//


நேசத்த அப்டியே எழுத்து புட்டிக ராசா...

செ.சரவணக்குமார் said...

அருமை பாலாஜி.

Ashok D said...

பிரமாதம் பாலாசி

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

என்ன எழுதுவது - புரியவில்லை - ஏழ்மை - இதனிடையே கவுரவம் - இரண்டும் ஒட்டி உறவாடுகின்ற உலகம் இது.

நல்ல சிந்தனை பாலாசி
நல்வாழ்த்துகள்

நசரேயன் said...

நான் சிவாஜி படமுன்னு நினைச்சேன்

பா.ராஜாராம் said...

இன்று வாசித்த மிக சிறந்த கவிதை இது பாலாஜி!

ஹேமா said...

இது யதார்த்தம் பாலாஜி.நடுத்தரக் குடும்பங்களின் நிலைமையை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.

ரிஷபன் said...

இல்லாமையும் எதிர்பார்ப்பும் பின்னலிடும் கவிதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

யதார்த்தமான வரிகள்.
வாழ்த்துகள்

ஆரூரன் விசுவநாதன் said...

arumai balasi

அன்புடன் நான் said...

இல்லாமையின் கெளரவம்..... மனம் உடைகிறது பாலாசி.

புலவன் புலிகேசி said...

வறுமையின் எதார்த்த வரிகள் மனதை பிசைகிறது...அருமை நண்பா

Anonymous said...

வறுமை அவர்கள் வாழ்க்கையில் தான் மனதளவி அவர்கள் பணக்காரர்களே...சும்மா போய் விருந்துன்ன மனமில்லாத மானம் உள்ளவர்கள் எளிய கவிதை பலப் பொருளோடு....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கறீங்க பாலாசி. உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது உங்கள் பதிவு.

Rajan said...

நல்லாத்தாங்க இருக்குது !

Unknown said...

சூப்பர் பாலாஜி..

கஞ்சிக்கு வக்கில்லைன்னாலும் மச்சினன் கல்யாணத்துக்கு மோதிரமும், கூப்புட்ட கல்யாணத்து அம்பது ரூவா மொய்யெழுதுர கௌரவத்தப் பத்தி புட்டுப் புட்டு வச்சிட்டீங்க

கண்மணி/kanmani said...

கையில காசில்லைன்னாலும் பொண்ணுக்கு செய்யும் சடங்கும் மச்சினனுக்கு சீரும் நிற்பதில்லை.கவுரவக் குறச்சலாயிடுமே

அருமையான நிஜம்

அகநாழிகை said...

இரண்டு கவிதையும் நல்லாயிருக்கு பாலாசி.

//வாழ்க்கப்பட்டா//

‘வாக்கப்பட்டா‘ அப்படின்னு இருந்தா இன்னும் இயல்பா இருக்கும்னு நினைக்கறேன்.

மாதவராஜ் said...

வாழ்வின் சூடு தகிக்கும் சொற்சித்திரம்.

கண்ணகி said...

தன்மானத்தில் பணக்காரன்....

பிரேமா மகள் said...

பாலண்ணா கலக்குறீங்க..... என்ன எல்லாம் குடும்பஸ்தன் கவிதையா இருக்கு? கல்யாண ஆசையா

கலகலப்ரியா said...

superb..!!! :)

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
பாலாசி சின்ன வயசுலயே நிறைய வாழ்க்கை பாடம் படம் படிக்கிறீங்க ...எங்க நைனா சொல்லியிருக்கு உங்கள பத்தி...//

நன்றி வசந்த்... வேற ஏதாவது சொல்லியிருக்காரா???

//Blogger ஈரோடு கதிர் said...
எதார்த்தம் மனதை கசக்கிப் பிழிகிறது//

வாங்கய்யா வாத்யாரய்யா ..நன்றிங்க...

//Blogger வானம்பாடிகள் said...
படு பாவி இப்படி சாவடிக்கறானே. எங்கப்பா புடிச்சிங்க இவன:((. கிளம்பறப்போ கலங்கிப் போக வச்சிட்டல்லா. நல்லாரு மோனே! ஹேட்ஸ் ஆஃப்!//

அம்புட்டு அழும்பாவா இருக்கு??-.... நன்றிங்கய்யா...

//Blogger Chitra said...
நிஜத்தின் வலிகள், கவிதை எங்கும்.//

நன்றிங்க சித்ரா...

//Blogger அகல்விளக்கு said...
யதார்த்தம் ரணமாய் கசிகிறது கவிதைகளில்...//

வாங்க ராசா...நன்றி..

//Blogger தாராபுரத்தான் said...
சாப்பாட்டுக்கே வழியில்லாட்டியும், கிழிந்த துணியை போட்டுகிட்டாலும் கெளரவத்தை விட்டுக் கொடுக்க கூடாதுல்ல.நாங்க யாரு?//

அதானே... நன்றிங்கய்யா...

க.பாலாசி said...

//பழமைபேசி said...
இயல்பாவும் இருக்கு...மனசைத் தைக்குற மாதிரியும் இருக்கு....ப்ச்...//

நெம்ப நன்றிங்கய்யா...வணக்கம்...

//Blogger ராமலக்ஷ்மி said...
தங்கள் சிரமங்களைத் தள்ளி வைத்து ஏழ்மைக்கு நடுவிலும் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மனிதர்கள்.//

ஆமங்கக்கா....நன்றிங்க....

//Blogger தியாவின் பேனா said...
நல்ல யதார்த்தமான வரிகள்//

நன்றிங்க...

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
அருமை பாலாஜி, எனக்கு இப்படி ஒரு அத்தை உண்டு. எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கடனகிடன வாங்கியாவது சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்திடும், மொய்ப்பணத்தோட........
பின்னிட்டிங்க நண்பா. ஏழ்மை எளிமையாக வெளிப்படுகிறது உங்கள் வரிகளில்.வாழ்த்துக்கள்.//

நன்றிங்க நண்பா...

//Blogger அண்ணாமலையான் said...
ரொம்ப நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்..//

நன்றிங்க அண்ணா...

//Blogger Vidhoosh said...
very nice. :)//

நன்றி வித்யா...

//Blogger 【♫ஷங்கர்..】║▌│█│║││█║▌║ said...

ச்ச கலக்கிட்டீங்க நண்பரே..!//

நன்றிங்க ஷங்கர்...

//Blogger பிரபாகர் said...
இளவல்,
அருமையாய் இருக்கிறது. உங்கள் வயதில் (ஓடுற பைக்கில் தாவி பேக் சீட்டுல உக்கார்ற வயசுல) என்னமாய் யோசிக்கிறீர்கள்...
அய்யா சொன்னதுதான் நானும் சொல்றது...
வாழ்த்துக்கள்.//

அதென்னங்ணா...ஓடுற பைக்கு....புதுசா இருக்கு... நன்றிங்ணா...

க.பாலாசி said...

//seemangani said...
நேசத்த அப்டியே எழுத்து புட்டிக ராசா...//

நன்றி நண்பா...சீமாங்கனி...

//Blogger செ.சரவணக்குமார் said...
அருமை பாலாஜி.//

நன்றிங்க சரவணா...

//Blogger D.R.Ashok said...
பிரமாதம் பாலாசி//

நன்றிங்ணா....

//Blogger cheena (சீனா) said...
அன்பின் பாலாசி
என்ன எழுதுவது - புரியவில்லை - ஏழ்மை - இதனிடையே கவுரவம் - இரண்டும் ஒட்டி உறவாடுகின்ற உலகம் இது.
நல்ல சிந்தனை பாலாசி
நல்வாழ்த்துகள்//

வாங்கய்யா...வணக்கம்...நன்றிகள்...

//Blogger நசரேயன் said...
நான் சிவாஜி படமுன்னு நினைச்சேன்//

நெனச்சதில தவறில்லைங்க... நன்றி தலைவரே...

//Blogger பா.ராஜாராம் said...
இன்று வாசித்த மிக சிறந்த கவிதை இது பாலாஜி!//

மிக்க நன்றிங்கய்யா...இத வாடாத பக்கங்கள்ல குறிப்பிட்டதுக்கும் நன்றிங்க...

//Blogger ஹேமா said...
இது யதார்த்தம் பாலாஜி.நடுத்தரக் குடும்பங்களின் நிலைமையை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.//

நன்றி ஹேமா...வணக்கம்.....

க.பாலாசி said...

//ரிஷபன் said...
இல்லாமையும் எதிர்பார்ப்பும் பின்னலிடும் கவிதை//

நன்றிங்க ரிஷபன்...

//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
யதார்த்தமான வரிகள்.
வாழ்த்துகள்//

நன்றிங்கய்யா...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
arumai balasi//

நன்றிங்க தலைவரே...

//Blogger சி. கருணாகரசு said...
இல்லாமையின் கெளரவம்..... மனம் உடைகிறது பாலாசி.//

நன்றிங்க சி.கருணாகரசு...

//Blogger புலவன் புலிகேசி said...
வறுமையின் எதார்த்த வரிகள் மனதை பிசைகிறது...அருமை நண்பா//

நன்றி நண்பா...

//Blogger தமிழரசி said...
வறுமை அவர்கள் வாழ்க்கையில் தான் மனதளவி அவர்கள் பணக்காரர்களே...சும்மா போய் விருந்துன்ன மனமில்லாத மானம் உள்ளவர்கள் எளிய கவிதை பலப் பொருளோடு....//

ஆமங்கக்கா... நன்றிங்க....

//Blogger ச.செந்தில்வேலன் said...
கலக்கறீங்க பாலாசி. உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது உங்கள் பதிவு.//

நன்றிங்ணா..உங்க கருத்துக்கு...

//Blogger ராஜன் said...
நல்லாத்தாங்க இருக்குது !//

நன்றிங்க தலைவரே...

//Blogger முகிலன் said...
சூப்பர் பாலாஜி..
கஞ்சிக்கு வக்கில்லைன்னாலும் மச்சினன் கல்யாணத்துக்கு மோதிரமும், கூப்புட்ட கல்யாணத்து அம்பது ரூவா மொய்யெழுதுர கௌரவத்தப் பத்தி புட்டுப் புட்டு வச்சிட்டீங்க//

நன்றிங்க முகிலன்...

//Blogger கண்மணி/kanmani said...
கையில காசில்லைன்னாலும் பொண்ணுக்கு செய்யும் சடங்கும் மச்சினனுக்கு சீரும் நிற்பதில்லை.கவுரவக் குறச்சலாயிடுமே
அருமையான நிஜம்//

சரியா சொன்னீங்க கண்மணி...நன்றிங்க...

க.பாலாசி said...

//அகநாழிகை said...
இரண்டு கவிதையும் நல்லாயிருக்கு பாலாசி.//

நன்றிங்க சார்...

// ‘வாக்கப்பட்டா‘ அப்படின்னு இருந்தா இன்னும் இயல்பா இருக்கும்னு நினைக்கறேன்.//

சரிதானுங்க... இன்மே கவனமா இருக்கேனுங்க...

//Blogger மாதவராஜ் said...
வாழ்வின் சூடு தகிக்கும் சொற்சித்திரம்.//

மிக்க நன்றி அய்யா...

//Blogger கண்ணகி said...
தன்மானத்தில் பணக்காரன்....//

நன்றி கண்ணகி....

//Blogger பிரேமா மகள் said...
பாலண்ணா கலக்குறீங்க..... என்ன எல்லாம் குடும்பஸ்தன் கவிதையா இருக்கு? கல்யாண ஆசையா//

ஆகா...ஏன் இப்டி...சரி..பொண்ணு பாருங்க... நன்றி லாவண்யா...

//Blogger கலகலப்ரியா said...
superb..!!! :)//

நன்றிங்கக்கா...

மணிஜி said...

வெகு இயல்பாய் இயலாமையையும், யதார்த்தத்தையும் பிரதிபலித்திருக்கிறாய் நண்பா!!

தமிழ் said...

உண்மை தான்

priyamudanprabu said...

நல்லாயிருக்கு

சத்ரியன் said...

பாலாசி,

எதார்த்தம்...!

கண்கள் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கையில்... காட்சி மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

அரசூரான் said...

கௌரவம்...
வரட்டு கவுரமாய் இல்லாதவரை... வாழ்வாதாரம்

வரட்டாய் இருந்தால் வெரும் தரம்.

மதுரை சரவணன் said...

nalla vanthirukku anupavomo!

Matangi Mawley said...

good one!

ஈரோடுவாசி said...

எதார்த்தம் அருமை பாலாசி அண்ணா... வாழ்த்துக்கள்..

Cable சங்கர் said...

நல்லாருக்கு பாலாசி..

க.பாலாசி said...

//தண்டோரா ...... said...
வெகு இயல்பாய் இயலாமையையும், யதார்த்தத்தையும் பிரதிபலித்திருக்கிறாய் நண்பா!!//

நன்றிங்க தலைவரே...

//Blogger திகழ் said...
உண்மை தான்//

நன்றி திகழ்...

//Blogger பிரியமுடன் பிரபு said...
நல்லாயிருக்கு//

நன்றி நண்பரே...

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
எதார்த்தம்...!
கண்கள் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கையில்... காட்சி மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.//

வாங்க சத்ரியன்...நன்றிங்க...

//Blogger அரசூரான் said...
கௌரவம்...
வரட்டு கவுரமாய் இல்லாதவரை... வாழ்வாதாரம்
வரட்டாய் இருந்தால் வெரும் தரம்.//

நன்றி அரசூரான் வருகைக்கும் கருத்திற்கும்...

//Blogger Madurai Saravanan said...
nalla vanthirukku anupavomo!//

இல்லீங்க..புனைவுதான்... நன்றி சரவணன்..

//Blogger Matangi Mawley said...
good one!//

நன்றி Matangi Mawley

//Blogger ஈரோடுவாசி said...
எதார்த்தம் அருமை பாலாசி அண்ணா... வாழ்த்துக்கள்..//

நன்றி ஈரோடு வாசி...

//Blogger Cable Sankar said...
நல்லாருக்கு பாலாசி..//

நன்றி கேபிளய்யா...

திவ்யாஹரி said...

எதார்த்தம் மனதை பிசைகிறது நண்பா.. அருமை..

சிநேகிதன் அக்பர் said...

கவிதைகள் அருமை பாஸ்.

பனித்துளி சங்கர் said...

அருமயான சிந்தனை . வாழ்த்துக்கள்

அம்பிகா said...

ஒரு நடுத்தர குடும்பத்தின் நிலையை படம் பிடித்து காடியிருக்கிறீர்கள், மிக இயல்பான நடையில். அருமையா இருக்கு பாலாசி.

க.பாலாசி said...

//திவ்யாஹரி said...
எதார்த்தம் மனதை பிசைகிறது நண்பா.. அருமை..//

நன்றி திவ்யா...

//அக்பர் said...
கவிதைகள் அருமை பாஸ்.//

நன்றி நண்பரே...

//வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...
அருமயான சிந்தனை . வாழ்த்துக்கள்//

நன்றி சங்கர்...

//அம்பிகா said...
ஒரு நடுத்தர குடும்பத்தின் நிலையை படம் பிடித்து காடியிருக்கிறீர்கள், மிக இயல்பான நடையில். அருமையா இருக்கு பாலாசி.//

நன்றி அம்பிகா....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க்கையின் உண்மைகளையே சொல்றீங்க அதயே அழுத்தமா சொல்றீங்க.. அருமையாவும் சொல்றீங்க பாலாசி..

க ரா said...

அருமையான கவிதை. வெகு யதார்த்தம்.

க.பாலாசி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்க்கையின் உண்மைகளையே சொல்றீங்க அதயே அழுத்தமா சொல்றீங்க.. அருமையாவும் சொல்றீங்க பாலாசி..//

நன்றி முத்துலெட்சுமி அக்கா...

//Blogger க.இராமசாமி said...
அருமையான கவிதை. வெகு யதார்த்தம்.//

நன்றி இராமசாமி...முதல் வருகைக்கும் கருத்திற்கும்...

ஈ ரா said...

யதார்த்தம்
இயல்பு
அசத்தல்
உண்மை

அருமை நண்பா

அன்புடன் மலிக்கா said...

எதார்தங்கள் எட்டிப்பாக்குது எளியநடையில். அருமை பாலாஜி..

ஜீவேந்திரன் said...

யதார்த்தத்தை இவ்வளவு இயல்பாக உங்களால் கவிதையாக எழுத முடிவதையிட்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள்.

ஆராய்வு http://jeevendran.blogspot.com/

க.பாலாசி said...

//ஈ ரா said...
யதார்த்தம்
இயல்பு
அசத்தல்
உண்மை
அருமை நண்பா//

நன்றி ஈ.ரா..

//Bogy.in said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in//

நன்றி....

//அன்புடன் மலிக்கா said...
எதார்தங்கள் எட்டிப்பாக்குது எளியநடையில். அருமை பாலாஜி..//

நன்றி மலிக்கா...

//jeevendran said...
யதார்த்தத்தை இவ்வளவு இயல்பாக உங்களால் கவிதையாக எழுத முடிவதையிட்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள்.
ஆராய்வு http://jeevendran.blogspot.com///

மிக்க நன்றி ஜீவேந்திரன்....

இனியாள் said...

நெகிழ வைக்கும் நிஜம். அருமை.

இன்றைய கவிதை said...

ரொம்ப அருமையா இருக்கு பாலாசி வலி வழி நெடுகிலும் ஏழ்மை கவிதையில் வலியை தருகிறது யதார்த்தம்


நன்றி

ஜேகே

சிறுகுடி ராம் said...

உண்மை சுடுகிறது பாலாசி...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO