க.பாலாசி: சந்திப்பு
Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

Monday, December 12, 2011

சங்கமம்‘2011 அன்போடு அழைக்கிறோம்

.

அதிகாலையும் பனிப்புகையும் தொண்டையிலிறங்கும் இளஞ்சூடான தேநீரும் போல இந்த மாதத்திற்கெனவே சில சிறப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.

மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவேதான் எங்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் நடத்தும் பதிவர்கள், இணையதள வாசகர்கள், முகநூல் மற்றும் ட்விட்டர் நண்பர்களுக்கான மாபெரும் சங்கமம்‘2011. 




நாள் : 18.12.2011 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணிமுதல் மதியம் 2 மணிவரை
இடம் : ரோட்டரி CD அரங்கம்
பெருந்துறை ரோடு,
பழையபாளையம், ஈரோடு

முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு

தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக் (பொருளர்) 97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707

இணையத்தில் இணைந்த இதயங்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும்.  அன்புதோய்ந்த கரங்களுடன் வரவேற்க காத்திருக்கிறோம்...  


.

Tuesday, December 8, 2009

ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம்...

நவிதொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்பு உடையார் தொடர்பு.

ஒவ்வொருமுறை படிக்கும்போதும் சிந்தனைகளையும் கருத்துக்களையும் புதிய தகவல்களையும் உணர்த்துவன மிகச்சிறந்த நூல்களாம். அதுபோல பண்புடைய நல்லோர்களின் சுற்றத்தை விரும்பி, நட்பாக உறவாடும் ஒவ்வொருமுறையும் அந்த சுற்றத்தின் அருமை கூடும். அந்த உறவின் பெருமை மிகும் என்பது மேற்சொன்ன குறளின் மூலம் வள்ளுவன் எடுத்தியம்பும் வாழ்வியலின் நியதி.

இக்குறளினை சிரமேற்கொண்டு ஈரோடு மாநகரில் பதிவர்களின் சங்கமத்தினை அரங்கேற்ற வரும் 20.12.09 ஞாயிறு அன்று மதிமயங்கும் மாலை 3.30 மணியளவை, மதிபெறும் மாலையாக மாற்ற ஈரோட்டு பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுசமயம் பதிவர்களும் வாசகர்களும் திரளாக பங்குபெற்று இனிய அனுபவத்தினை பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடனும், பண்புடனும் அழைக்கிறோம்.



இச்சங்கமத்தில் முக்கிய அம்சங்களாக நாங்கள் தெரிவுசெய்வது...

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்

* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு
* இன்னும் சில.....

தங்களது வருகையினை கீழ்கண்ட பதிவர்களின் அலைபேசி எண்களுக்கு அழைத்து உறுதிபடுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வால்பையன் (ஈரோடு) - 9994500540
கதிர் (ஈரோடு) - 9842786026
ஆரூரன் விசுவநாதன் (ஈரோடு) - 9894717185
அகல்விளக்கு (ஈரோடு) - 9578588925

சந்திப்பு நடைபெறும் இடம் :
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,
ஈரோடு - 11

நாள் : 20.12.2009 ஞாயிற்றுக்கிழமை
நேரம்
: சரியாக மாலை 3.30 மணியளவில்.

தங்களின் வருகையினை அன்புடன் எதிர்நோக்கும்

- ஈரோடு பகுதி பதிவாசிகள்.



  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO