க.பாலாசி

Monday, October 26, 2009

காந்தி கண்ட ராமராஜ்யம்...

அக்டோபர் 2ம் நாள் ஈரோட்டில் பத்மம் மஹாலில் ‘காந்தி கண்ட ராமராஜ்யம்’ என்ற தலைப்பில் விஸ்வஇந்து பரிஸத் மாநில துணைத்தலைவர் ஆர்பிவிஎஸ்.மணியன் அவர்களின் சமுதாய சொற்பொழிவுநிகழ்ந்தது. சென்றிருந்தேன். சொன்ன கருத்துக்களில் இரண்டு மட்டும் என்னுள் மிக ஆழமாய் பதிந்தது.

1. காந்தியடிகளை எல்லோரும் தேசப்பிதா என்கிறோம். இது சரியல்ல. ஏனென்றால் நம் இந்திய பூமியை பாரத்தாய் என்றே குறிப்பிடுகிறோம். அப்படியானால் காந்தியடிகளை எப்படி அவ்வாறு அழைக்கமுடியும். காந்தியடிகளை நமது பாரத்தாயின் தலையாய மூத்தமகன் என்று அழைக்கலாம்.

2. காந்தி கண்ட ராமராஜ்யம் என்பதை காந்தியடிகள் ஏன் விரும்பினார்?. ‘ராமபிரானின் முன்னோர்களோ அல்லது அவரின் வழித்தோன்றல்களோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை பின்பற்றியதாக வால்மீகி இராமயணத்திலும் சரி, கம்ப இராமாயணத்திலும் சரி எந்தவொரு குறிப்பிடலும் இல்லை. ஆனால் ராமன் அதை பின்பற்றினான். மேலும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காண்டங்களில் அயோத்தி காண்டமே உயர்ந்த நாகரீகமும், பண்பாடும் கொண்டதாக விளங்கியது. இதில் கிஷ்கிந்தா காண்டத்தில் பண்பாடு இருந்தது ஆனால் நாகரீகம் என்பது இல்லை. இலங்கை காண்டத்தில் உயர்ந்த நாகரீகம் இருந்தது பண்பாடு இல்லை. இராமனின் அயோத்தியா காண்டத்தில் உயர்ந்த நாகரீகமும், மிகச்சிறந்த பண்பாடும் இருந்தது என்பதனையும் ஒரு காரணமாக வைத்து காந்தியடிகள் அதை விரும்பினார்.

இந்த கருத்து மதங்களுக்கு அப்பாற்பட்டு நிற்பதால் குறிப்பிடுகிறேன். இன்றைய காலகட்டங்களில் நமது நாகரீகமும், பண்பாடும் சமநிலையில் கீழ்நோக்கி சென்றுவருகிறது. மேலைநாட்டவரெல்லாம் நமது கலாச்சாரத்தினையும், பண்பாட்டினையும் மதிக்கும் நேரத்தில் நாம் மேலை நாட்டவரின் ஒழுக்கக்கேடுகளை மட்டும் நம் மனநிலங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம். இது ஒவ்வொருவர் பாணியில் சரி, தவறு என்றிருக்கலாம். என் பார்வையில் சரியெனப்படவில்லை.


**********

தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


Saturday, October 24, 2009

பாவக்கா கொழம்பு...


‘நண்பா...டெய்லியும் சாம்பார மட்டுமே சாப்பிட்டு அலுத்துப்போச்சு...‘

‘ஆமாம் நண்பா...காலையில பாவக்கா (பாகற்காய்) கொழம்பு வைப்போம்.’


••••

காலை 6 மணி...


‘என்னன்ன வேணும்...நான் மார்க்கெட்டுக்கு போயிட்டு வர்ரேன்’

‘பாவக்கா, வெங்காயம், தக்காளி, தேங்கா, கருவேப்பிள்ள, கொத்தமல்லி...’

‘ம்ம் சரி...நீங்க போயி அரிசி மூணு டம்ளர் ஊறவைங்க.’ நான் போயிட்டு வந்திடுறேன்.’

•••••


மார்க்கெட்


‘ம்ம்...எல்லா எவ்வளங்ணா?’

‘இருபத்தாரு...’

••••••


‘அரிசி ஊறப்பபோட்டுட்டீங்களா நண்பா?’

‘ம்ம்....போட்டாச்சு போட்டாச்சு...’

‘சரி நான் என்ன பண்ணட்டும்’

‘வெங்காயம், பூண்டுல்லாம் உறிச்சிட்டு, அத தக்காளியோட சேத்து வதக்கிட்டு...மொத்தமா போட்டு மிக்ஸியில அடிங்க’

‘டுர்ர்ர்ர்ர்........’

‘முடிஞ்சிடுச்சி....அப்பறம்...’

தேங்காய துருவி அதையும் அரைச்சிடுங்க....’

டுர்ர்ர்ர்..........’

‘ம்ம்ம்...முடிஞ்சிடுச்சு...’

‘எல்லாத்தையும் எங்கிட்ட குடுத்துட்டு நீங்க வேடிக்க மட்டும் பாருங்க...நான் எதாவது சொன்னா... செஞ்சா போதும்...’

’ம்ம்ம்....’

கடுகு’

இந்தாங்க’

எண்ணெ....’

இந்தாங்க

கருவேப்பிள்ள ’

இந்தாங்க’

‘எல்லாத்தையும் குடுத்துகிட்டே இருந்தா எப்படி? நீங்களே வந்து போடுங்க...முதல்ல தாளிச்சிட்டு பெறவு தேங்காய மட்டும் வைச்சிட்டு பாக்கி எல்லாத்தையும் சட்டியில ஊத்தி கொஞ்சம் தண்ணிவிட்டு கொதிக்கவிடுங்க...கடைசியா தேங்காய போட்டு கொஞ்சம் கொதிக்கவிட்டு இறக்கினா போதும்....நான் போயி அரிசிய கழுவிட்டு வரேன்.’

‘ம் சரி நண்பா...’

பட்..பட்...பட்....ப்ச்ச்ச்ச்......ச்சூ.........

‘நண்பா சிம்ல வைங்க...இல்லாட்டி தண்ணி மட்டும்தான் சுண்டும்...காயெல்லாம் வேகாது...’

‘சரி நண்பா....நீங்க பக்கத்து அடுப்புலேயே ரைஸ் குக்கர வைச்சிடுங்க....’


கொழம்பு ரெடி...

‘சரி நாலு விசில் உட்டு ஆஃப் பண்ணிடுங்க. நான் கடைக்கு போயி ஒரு டீ போட்டுட்டு...மணிக்கூண்டு வரைக்கும் போயிட்டு வரேன்.

‘ஓ.கே. மணிக்கூண்டுக்கு எதுக்கு?’

‘ம்ம்ம்...மணி பாக்கத்தான்.’

சரி சரி...பொண்ணுங்க வாட்ச்ல பாத்துடாதிங்க....அப்பறம் திரும்பி வர்ரப்ப ‘........’ இருக்காது. நான் போயி குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்.’

•••••


அனல் மேலே பனித்துளியே.........அலைபாயும்.....(செல்லிடபேசி)’

‘ஹலோ....சொல்லுங்க நண்பா’

சாப்புட்டீங்களா?’

‘ம்ம்...இப்பதான் சாப்பிட்டுகிட்டே இருக்கேன்.‘

‘கொழம்பு எப்படி?‘

‘சூப்பர்ர்ர்ர்.....ஆமா பாவக்காய என்ன பண்ணீங்க?‘

அடப்பாவி....அத கொழம்புல போடலையா?‘

கிழிஞ்சிது. நீங்க போட்டிருப்பீங்கண்ணு நான் விட்டுட்டேன்.‘

‘சரி விடுங்க...பேச்சிலர் சமையல்ல இதெல்லாம் ஜகஜம்....‘

‘தம்பி....?....என்ன சாப்பாடு என்ன கொழம்பு?’ பக்கத்துவீட்டு அக்கா.

அரிசி சாப்பாடும், பாவக்கா கொழம்பும்க்கா...‘

‘பாவக்கா கொழம்பா....ம்ம்...சாப்புடுங்க...சாப்புடுங்க...பாவக்கா உடம்புக்கு நல்லது.‘


‘?????......’


டிஸ்கி : இந்த கொழம்பு நேத்து காலையில வைச்சது. பேச்சிலர்ஸ்லாம் சேர்ந்து சமைச்சு சாப்பிடும்போது இதுமாதிரி நடக்கிறது சாதாரணமப்பா....


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...

Thursday, October 22, 2009

முச்சந்தி...



காதல்...


உதிரம் தொடங்கி உறையும் வரையில்

உட்புகும் உணர்ச்சியாய் உடனிருந்து...

வஞ்சியுடன் சேர்ந்தவுடன்

வஞ்சனைக்கு வாழ்க்கைப்பட்டு...

வருத்திவிட்டு சென்றுவிடும் வன்மமது...


காதலி...


தொட்டணைத்து...தொடர்ந்துவந்து

தோகைமயில் உணர்வளித்து

தொக்கி நிற்கும் வாழ்க்கையதை

தொலைவில் நின்று பார்த்துவிட்டு

தொலைந்தழிந்து போகிவிடும் தொடக்கமவள்...


காதலன்...


கண்களுக்கு மருந்தளித்து

கனவதற்கு விருந்தளித்து

கணவனாகும் நேரமதை

கர்வமுடன் எதிர்நோக்கி - இளமை

காலமிழக்கும் கவிஞனவன்.


•••••••


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...







  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO