க.பாலாசி

Thursday, December 17, 2009

வலைச் சுரைக்காய்...

சென்றவாரம் தினசரி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி.


‘குடிபோதையில் கணவனை கொன்ற மனைவி


இதென்ன புதுமை? செய்தி அச்சுப்பிழையோ என்றவாறே ஆராய்ந்தேன். உண்மையாகவே இந்த வீரப்பெண்மணி தனது கணவன் இன்னொருத்தியுடன் இருந்ததாக சந்தேகமடைந்து வெட்டிக்கொன்றுள்ளார். அவனும் அப்படித்தான் இருந்திருக்கிறான். இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் இருவருமே மது அருந்துபவர்கள். கூலித்தொழிலாளிகள். செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.


•••••••••


அண்மையில் எனது கணிணி வைரஸ்களால் வலுவிழந்ததற்கு காரணமாக வன்பொருள் வல்லுனர்களால் சொல்லப்பட்டது சீனாவிலிருந்து வந்த மின்னஞ்சல்கள். ஒருவழியாக அவைகளை ஒருநாள் ஒருவேளை அடையாள உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் ‘கொலைசெய்தேன்(தோம்).


சீனர்களின் கண் இப்போது நமது இரசாயன சந்தை. நானும் இரசாயனம் சார்ந்த துறையிலேயே பணிபுரிவதால் தெரிந்துகொண்டேன். இங்கே உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்களின் விலைகளை காட்டிலும் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் இரசாயனங்களின் விலை மிகக்குறைவு (அனைத்து வரிகள் மற்றும் செலவுகள் உட்பட) குறிப்பாக துணிச்சந்தைக்கு தேவைப்படும் இரசாயனங்கள். இவைகள் இலங்கை வழியாக நமது சென்னைத் துறைமுகங்களை வந்தடைந்து மற்ற மாநிலங்களுக்கும் வழிந்தோடுவதாக தகவல். நமது இரசாயன சந்தையும் அதன் விலைகளுடன் போட்டியிட முடியாமல்தான் உள்ளது. நமது பிரதமர் அடுத்தமுறை வெள்ளைமாளிகைக்கு விருந்தோம்பலுக்குச் செல்லும்பொழுது இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார். மதுரை நெஞ்சங்கள் அஞ்சவேண்டாம்.


••••••••


பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோவில்

தாயத்துடன். (!?)


•••••••••


பருத்தி பயிரப்படுவதில் ஆரம்பித்து அது நமது உடலுக்கு உடையாகும் வரை குறைந்தது 30 விதமான இரசாயனங்களை உள்வாங்கிக்கொண்டுதான் வெளிவருகிறது. ஆடைகளின் தரம், தன்மை, நிறம் இவைகளைப்பொருத்து அவைகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சாயங்கள் கூடவோ குறையவோ செய்யலாம். இதில் குழந்தைகளுக்கான ஆடைகளை குறைவான செயல்திறனுடைய இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.


••••••••••

Tuesday, December 15, 2009

ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக ஒரு நினைவூட்டல்

ஈரோட்டில் நடைபெறவுள்ள பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மனதில் என்றும் நிழலாடும் சங்கமமாக அமைந்திட ஈரோட்டு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் திட்டமிட்டு வருகிறோம்.



இடம்
பில்டர்ஸ் அசோசியேசன் ஹால்
(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில், பெருந்துறை ரோடு, ஈரோடு)

அரங்கம் நகர மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்.

நாள் : 20.12.2009 ஞாயிறு
நேரம் : மாலை 3.30 மணி

நிகழ்ச்சி நிரல்:
சங்கமம் துவக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பதிவர்கள் - அறிமுகம்
சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை

எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்
வலைப்பக்கத் தொழில் நுட்பம்

தேநீர் இடைவேளை

பதிர்வர்களின் முக்கிய கடமை
வாசகர்களின் எதிர்பார்ப்பு

கலந்துரையாடல்



மாலை 07.00 மணி
இரவு உணவு (சைவம் மற்றும் அசைவம்)

அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். விழா அரங்கு, உபகரணங்கள், உணவுக்கான செலவுகளை சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர் வேறு யாராவது செலவுகளை பகிர்ந்து கொள்ள விழைந்திடின், ஈரோடு கதிர் அய்யாவின் அலைபேசி எண்ணுக்கோ அல்லது அவரது மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தவும்.

ஒருங்கிணைப்பாளர்கள்:-

1. ஆரூரன் விசுவநாதன்

2. வால்பையன்

3. ஈரோடு கதிர்

4. க. பாலாசி

5. வசந்த்குமார்

6. அகல்விளக்கு ராஜா

7. கார்த்திக்

8. கோடீஸ்வரன்

9. நந்து

10. லவ்டேல்மேடி

11. தங்கமணி

12. சண்முகராஜன்

13. தாமோதர் சந்துரு

கலந்துகொள்ளும் பதிவர்கள்:-

1.பழமைபேசி
2. வலைச்சரம் சீனா
3. செந்தில்வேலன்

4. வானம்பாடி
5. நாகா
6. வெயிலான்
7. பரிசல்காரன்
8. ஈரவெங்காயம்

9. தேவராஜ் விட்டலன்
10. சுமஜ்லா

11. ரம்யா
12. நர்சிம்
13. தண்டோரா
14. கேபிள் சங்கர்

15. பட்டர்பிளை சூர்யா
16. குணசீலன்

17. இளையகவி
18. கும்க்கி
19. கார்த்திகை பாண்டியன்
20. ஸ்ரீதர்
21. முரளிகுமார் பத்மனாபன்
22. அப்பன்

23. அகநாழிகை வாசுதேவன்
24. ஈரோடு வாசி
25. சங்கவி
26. ஜெர்ரி ஈசானந்தா

27. செல்லமுத்து குப்புச்சாமி

28. லதானந்த்
29. நாமக்கல் சிபி

30. நண்டு @ நொரண்டு

31. சிவாஜி

32. ராமன் குட்டி

33. பேரரசன்

சிறப்பு அழைப்பாளர்கள்

1. முனைவர். இராசு
2. க.சீ.சிவக்குமார்
3. தமிழ்மணம் காசி

கலந்துகொள்ளும் வாசகர்கள்
1. ஜாபர்
3. பைஜு
4. ராஜாசேதுபதி

(இதில் யாராவது வருவதாக உறுதியளித்து பெயர் விடுபட்டிருந்தால் அது எங்களுடைய தவறு, தயவுசெய்து தெரிவிக்கவும், தங்களது வருகையினையும் உறுதிபடுத்தவும்)

உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால், கலந்து கொள்ளும் பதிவர்கள், வாசகர்கள் தங்கள் வருகையை உடனே தெரியப்படுத்தவும். தயவுசெய்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு...
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
க. பாலாசி 90037- 05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)




Friday, December 11, 2009

ஒரு குழந்தையின் குமுறல் (3)...


சோற்றுக்கு வழியில்லாமல்
வெளிநாட்டில்
விவசாயியின் மகன்

****

கழிவறை காகிதத்தில்
ஒரு விளம்பரம்
தண்ணீர் குடுவைக்கு

****

‘வரும்காலம் வசந்தகாலம்’
பாடிக்கொண்டிருந்தான்...
மரங்களை வெட்டியபடி

****

பெண்களின் மகத்துவம்
சொன்ன திரைப்படத்தில் - நாயகி
இரட்டை துணியுடன்

****

மூன்று பெண்களை
மணந்தவனுக்கு
முதல் மனைவி மீது சந்தேகம்

****

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO